search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Vaiko"

    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
    • சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு கள்ளக்குறுச்சி வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இவர்களை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம்.

    கோவை:

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:

    தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட். கிட்டத்தட்ட 11 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவிலை வைத்தே இந்த தேர்தலை அவர்கள் சந்தித்தார்கள். அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோற்று இருக்கிறார்கள்.

    மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உத்தரபிரதேசத்திலேயே அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்து உள்ளனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    அடுத்து வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும். எங்களை பொறுத்தவரை நாங்கள் தனி இயக்கம். எங்களுக்கு என்று ஒரு சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

    நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 8 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.

    8 விழுக்காடு என்பது அண்ணன் சீமானின் விடாமுயற்சி, பல வருட உழைப்பு, இயக்க தோழர்களின் உழைப்பால் கிடைத்துள்ளது.

    கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம். கொள்கைகள், சித்தாந்தங்கள்படி நாங்கள் வேறுபடுகிறோம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

    • என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை.
    • . நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது வரை நான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.

    என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை. எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றதும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி,சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாநில துணை செயலாளர் ரொசையா நிர்வாகிகள் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக் குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ராமமூர்த்தி, ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத் மற்றும் பலர் உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசமும் கிடையாது.
    • படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

    மதுரை:

    மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து?

    பதில்: இதைத்தான் நாங்கள் தேர்தல் களத்திலே கூறினோம். முதல்வரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதை மக்களிடம் எங்களால் காண முடிந்தது. அதனால் தான் 39 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம். அதைத்தான் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளது.

    ஆனால் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. அப்போது தெரிந்துவிடும், அதன் பிறகு கருத்து கூறினால் சரியாக இருக்கும்.

    கே: தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறாரே?

    ப: எதிர்க்கட்சித் தலைவராக ஆளுங்கட்சி மீது கருத்துக்களை கூறுகிறார். போதைப் பொருட்களாக இருக்கட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களாக இருக்கட்டும். இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியிலும் நடைபெற்றது. தற்போது எதிர்க்கட்சி என்பதால் அவர் குற்றம் சாட்டுகிறார். அதை பொருட்படுத்த வேண்டாம் என்பது எனது கருத்து.

    கே: ம.தி.மு.க. மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள். தற்போதைய நிலை என்ன?

    ப: தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசமும் கிடையாது. படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

    கே: யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே?

    ப: சமூக ஊடகங்களுக்கு சென்சார் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதில் சிலர் வரம்புகளை தாண்டும் போது, யூகங்கள் அடிப்படையில் தவறான செய்திகள் பரப்பப்படும் போது தனிப்பட்ட நபரையோ அவரது குடும்பத்தையோ பாதிக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு சென்சார் சிப் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது. சமூக ஊடகங்களில் எளிய மக்களால் பெரிய தவறுகளை கூட வெளியில் கொண்டுவர முடிகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது இயக்கத்தையோ தவறான கருத்துக்களை பரப்புவதற்கு வரைமுறை இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஆனால் சவுக்கு சங்கர் குறித்து தனிப்பட்ட முறையில் பேச நான் விரும்பவில்லை.

    கே: சமூக ஊடகங்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    ப: மஞ்சள் பத்திரிகை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில கருப்பு ஆடுகள் அதில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் அடுத்தவர்களை மிரட்டி காரியம் சாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டு அதை தவிர்ப்பது தான் நல்லது.

    கே: அயோத்தி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதால் பா.ஜ.க.விற்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்குமா?

    ப: தேர்தல் களத்திலோ அல்லது அரசியலிலோ விவாதம் என்பது மக்களை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களை வைத்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தலை பொருத்தவரை மத்திய அரசு 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து பேசவேண்டும். மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.

    ஆனால் இதைப் பற்றி பேசாமல் மதத்தைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ பிரிவினை உண்டாக்கக்கூடிய பேச்சுகள்தான் இருந்தது. நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும். முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் எங்களுடைய விவாதங்களை முன் வைத்தோம், பா.ஜ.க. அவர்கள் விவாதத்தை முன் வைத்தார்கள். மக்களின் முடிவு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் வட இந்தியாவில் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாரும் தலைவரை சந்திக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
    • வைகோவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், மறு மலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

    சென்னை:

    ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

    இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் என்னை அழைத்து தலைவர் உடல் நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவைச் சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவைச் சிகிச்சை முடிந்து 3 நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    தலைவர் பற்றி வெளி வரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். யாரும் தலைவரை சந்திக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம்.

    வைகோவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், மறு மலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விரைவில் குணமடைந்து பொது வாழ்வை தொடர வேண்டும்.
    • சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும்.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்தார்.

    இந்த நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள வைகோ விரைவில் குணமடைந்து பொது வாழ்வை தொடர வேண்டும் என்று பா.ம.க. கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். வைகோ அவர்களுக்கு சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும்; வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • திருமண நிகழ்வில் கலந்து கொள்ள திருநெல்வேலி சென்றிருந்தார்.
    • விமானம் மூலம் வைகோ சிகிச்சைக்காக சென்னைக்கு திரும்பியுள்ளார்.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள்."

    "எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்."

    "சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.
    • திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் போனில் பேசியதாகவும் இது தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

    ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய போது, உயிரே போனாலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் என்று கூறினார். அது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அண்ணாமலையுடன் பேசினார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துரை வைகோவிடம் கேட்டபோது அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிய தகவலை மறுத்தார்.

    அவர் கூறியதாவது:- அண்ணாமலையுடன் நான் ஏன் பேசப் போகிறேன். நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன். இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பி ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கிறார்கள். இது தி.மு.க.வுக்கும் தெரியும். அவர்களும் நம்ப போவதில்லை. தேர்தலின் போது தி.மு.க. ஒத்துழைக்கவில்லை என்றார்கள். எனக்கும் என் அப்பாவுக்கும் மனஸ்தாபம் என்கிறார்கள். திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
    • திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பம்பரம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

    * மேல்முறையீட்டுக்கு செல்லாம்... ஆனால் பிரசாரம் காரணமாக செல்லவில்லை.

    * இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வோம்.

    * சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

    * வேட்பாளர் யார், அவரின் சின்னம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.

    * தேர்ந்தெடுக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வோம்.

    * தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    * திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    * சின்னம் குறித்து நாளை தெரியப்படுத்துவோம்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம்.
    • சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    "சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம்.

    ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன்.

    சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன்.

    பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.

    திருச்சி:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
    • காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம்.

    சென்னை:

    திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, பிரசாரத்திற்கு குறைந்த கால கட்டமே உள்ளதால் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றி வாய்ப்பும் மிக பிரகாசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் துரைவைகோ பேசுகையில், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என திடீரென ஆவேசப்பட்டு பேசினார்.

    துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி பேசிய தருணத்தில் அமைச்சர் கே.என்.நேரு செல்போனை நோண்டிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் துரை வைகோ அழத் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு அதை பொருட்படுத்தாமல் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் ஏதோ கூறியபடி இருந்தார்.

    துரை வைகோ பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால் மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்து டன் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் தி.மு.க. நிர்வாகி கள் பலர் அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    இந்த தருணத்தில் துரை வைகோ தி.மு.க.வினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு பேசுவதா? என்று ஆதங்கப்பட்டனர். இந்த விசயத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது முகபாவம் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது.

    தொலைக்காட்சியில் துரை வைகோவின் ஆவேசம் மாறி மாறி காண்பிக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் இதை பார்த்தனர்.

    திருச்சி தொகுதி தி.மு.க. வின் கோட்டையாக இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் துரை வைகோ பேசியது இரு கட்சியினர் மத்தியிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடுமோ என கவலைப்பட்டார். இதனால் தனது கட்சிக்காரர்களை ம.தி.மு.க.வுடன் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

    கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நமது எண்ணம் எல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க.வை உடைத்து ம.தி.மு.க. வெளியேறிய சமயத்தில் எவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டது. இழப்புகள் ஏற்பட்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் கலைஞரும், தளபதியும்தான்.

    கால மாற்றத்தால் கசப்புணர்வுகளை மறந்து ம.தி. மு.க.வை சகோதர கட்சியாக அரவணைத்து கூட்டணியிலும் கழக தலைவர் தளபதி இடம்பெற செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தி.மு.க.வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் துரைவைகோ பேசுவது தேவைதானா? என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.

    காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம். அப்படி இருக்கும்போது செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம்தான் வேண்டும் என்று பேசினால் தி.மு.க. வினரின் மனது புண் படாதா? எனவே யாராக இருந்தாலும் யோசித்து பக்குவமாக பேச வேண்டும். அனைவரும் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் இதுதான் உண்மை நிலை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையில் துரை வைகோ, அவ்வப்போது அரசியலை விரும்பவில்லை என்று கூறுவது அவருடன் உள்ள நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில்தான் துரை வைகோ வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசும்போது, தி.மு.க.-ம.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. நான் பேசியது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இது இயல்பானது என்று கூறி உள்ளார்.

    ×