என் மலர்tooltip icon

    கடலூர்

    • சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். வேப்பூர் கூட்ரோடு அருகே மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன் நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின்னால் மோதினார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளவரசனை பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.
    • நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக் காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த நிலையில் சிதம்பரம் நீர் வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கீழணையில் வடவாறு வழியாக தண்ணீரை அனுப்பி வைத்து ஏரியை நிரப்பினர். இதன் மூலம் ஏரி 47.50 அடி முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையிலும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சூழலிலும் கீழணையில் தேக்கி வைத்த தண்ணீரை கொண்டு தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இருந்து நீர் வரத்து இல்லாத சூழ்நிலையில் மேட்டூர் அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இதனால் கீழணைக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது கீழணையில் 6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 115 கன அடியும், வடவாற்றில் வினாடிக்கு 203 கன அடியும் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வடவாற்றில் விடும் தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து இறைத்து வருவதால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.

    நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது. இதில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 42 கன அடியும், பாசன வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்துக்கு வினாடிக்கு 106 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. நீர் வரத்து இல்லாத நிலையில் சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழல் உருவாகும்.

    கீழணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் வடலூரில் இருந்த பண்ருட்டி வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தண்ணீரை சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் வழியாக செலுத்தி கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்பட்ட போது என்.எல்.சி. சுரங்க நீரை பெற்று லாரி மூலம் சென்னைக்கு எடுத்து செலப்பட்டது.

    எனவே அடுத்தடுத்து ஏற்படும் நெருக்கடியை கொண்டு சென்னை குடிநீரின் தேவைக்காக இந்த 2 கட்ட பணிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளனர்.

    விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வயலூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மேம்பால பக்கவாட்டு தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களான மணிமாறன், அபிஷேக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வயலூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மேம்பால பக்கவாட்டு தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. இதில் சங்கருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.அவ்வழியே சென்றவர்கள் சங்கரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.

    அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.

    மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார்

    கடலூர்:

    பண்ருட்டி தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர், பண்ருட்டி காந்தி ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் பண்ருட்டியை அடுத்த பணிகன்குப்பம் பகுதியில் வரும்போது மழை பெய்தது. இதனால் மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார். அப்போது பயங்கர சத்தத்து டன் இடி இடித்து மின்னல் மின்னியது.இதில் செந்தில்குமார் மீது மின்னல் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்ததிடீர் மழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள்ஊர்ந்து சென்றனர். இந்ததிடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மறுநாள் காலையில் திருமலை முருகன் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூர், அக்.15-

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி பழைய மேட்டுக் குப்பத்தை சேர்ந்தவர் திருமலை முருகன் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் திருமலை முருகன் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தது.

    அதிலிருந்த 3 1/4 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு சுமார் 1.50 லட்ச மாகும். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீஸ் நிலை யத்தில் திருமலை முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவம் குறித்து ரெட்டிச்சா வடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயந்தி மாலா சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார்.
    • ஜெயந்தி மாலா முகவரி தெரியாது எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றார்.

    கடலூர்:

    வடலூர் என்.எல்.சி. ஆபீசர்ஸ் நகரை சேர்ந்தவர் இளமுருகு. இவரது மாமி யார் ஜெயந்தி மாலா (வயது 62). சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த ஒரு நபர் ஜெயந்தி மாலாவிடம் முகவரி விசாரித்தார்.

    அப்போது ஜெயந்தி மாலா முகவரி தெரி யாது எனக்கூறி அங்கி ருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த நபர் திடீரென்று ஜெயந்தி மாலா வின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேவதி பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடியை அடுத்த மதனகோபால புரத்தில் உள்ள கோ.சத்தி ரத்தை சேர்ந்தவர் பழனி மகள் ரேவதி (வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார். ரேவதியின் உறவினர், மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்து பண்ருட்டி யில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று காலை விட்டுச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் ரேவதியை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரேவதியின் பெற்றோர் பண்ருட்டி போலீ சாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மாணவி யை தேடி வருகின்றனர்.

    • கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது
    • நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் விரத முறையை கடைப் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைசி வார சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட் டது.இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

    • இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம்.
    • இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    நவராத்திரி விழாவானது அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து ஒன்பது நாட்கள் வழிபடுவதாகும். இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.

    கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் களிமண், காகித கூழ் போன்றவற்றால் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ராமாயணம், மகா பாரதம், கிருஷ்ணரின் லீலைகள் சம்பந்தமான கதைகளை விளக்கும் வகையிலான பொம்மைகளை தயாரித்து வைத்துள்ளனர். இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர் நகர சாலை ஓரங்களிலும், கோவில் வளாகங்கள் முன்பிலும், கடைகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
    • அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் மரியபிரகாசம் மகள் ஜெனிலாமேரி (வயது 34). இவர் பள்ளியில் படிக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகி வந்தார். ஐஸ்வர்யாவின் உறவினரான விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்த சுதாகர் (38) என்பவருடன் ஜெனிலாமேரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்ம தத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுதாகருக்கும், ஜெனிலாமேரிவுக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பணம் தேவை படுவதாகவும் ஜெனிலா மேரியிடம் சுதாகர் கேட்டுள்ளார்.

    திருமணத்திற்காக வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் ஜெனிலாமேரி கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட சுதாகர், நாளடைவில் ஜெனிலாமேரியிடம் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஜெனிலாமேரி, திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாமென சுதாகரிடம் கேட்டுள்ளார். விரைவில் கூறுகிறேன் என்று பதில் கூறியுள்ளார். 16 பவுன் நகையை எப்போது திருப்பி தரப்போகிறாய் என ஜெனிலாமேரி கேட்டுள்ளார். இதற்கு பதில் கூறாமல் செல்போனை துண்டித்த சுதாகர், கடந்த ஒரு வார காலமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    மேலும் அதிர்ச்சிக் குள்ளான ஜெனிலாமேரி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் கூறி யுள்ளார். அவர்கள் சுதாகரின் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத் தியபோது, அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர். இதையடுத்து இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம், ஜெனிலா மேரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் சுதாகர் மீது நகை மோசடி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள சுதாகரை குறிஞ்சிப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகி ன்றனர். இந்த சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பர பரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    ×