search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் மணல் கடத்திய லாரி- டிராக்டர் பறிமுதல்
    X

    கடலூரில் மணல் கடத்திய லாரி- டிராக்டர் பறிமுதல்

    • இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர்.
    • கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கே.என்.பேட்டை கெடிலம் ஆறு பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் கணபதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர். லாரியில் மணல் இருந்தது. இதற்கு ஆவணம் கேட்ட போது உரிய அனுமதி யில்லாமல் மணல் கடத்த லில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த சமயத்தில் திடீ ரென்று லாரி டிரைவர் கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.

    இதே போல் சப்-இன்ஸ் பெக்டர் குமாரசாமி திருமா ணிக்குழி கெடிலம் ஆற்றங்க ரை பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அருகில் பார்த்த போது மணல் இருந்தது. லாரி மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் திருப்பா திரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×