என் மலர்tooltip icon

    கடலூர்

    • மல்யுத்த மாணவர்கள்சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது.
    • போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மல்யுத்த மாணவர்கள் ஹரிகரன், அரிய புத்திரன் ,அரவிந்தன் சூர்யா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் .

    அப்போது சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது. இதனை தொடர்ந்து மல்யுத்த பயிற்சியாளர் ராஜேஷ் கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் பர்ஸ் யாருடையது என விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும், என்பவருக்கு சொந்தமானது என்பதும், திருநள்ளாறுக்கு செல்லும் போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சார்பாக ராஜ ஜெயசீலனிடம் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் முன்னிலையில் பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தனர். மணி பர்சை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உடன் இருந்தார்.

    • ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து வட மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.  இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி ,சேத்தியாதோப்பு ,பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7உட்கோட்டங்களில் உள்ள 533 ஏ.டி.எம். மையங்களில் போலீசார் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


    அதன்படி அந்தந்த உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு காவலர்கள் உள்ளாரா? எச்சரிக்கை அலாரம் சரியாக இயங்குகிறதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? மின்விளக்கு வெளிச்சம்ஏ.டி.எம். மையங்களில் உள்ளே மற்றும் வெளியில் இருக்கிறதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.டி.எம். மையம் பாதுகாப்பு குறித்து தற்போது உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் வங்கி மேலாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது,,இதன் மூலம் வருங்காலங்களில்ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்..
    • எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி, சட்ட ஆலோசகர் திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், மன்சூர், சிவாஜி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடலூர் மாநகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாநகராட்சியாக உள்ளதால் நவீன எரிவாயு மின் தகன மேடை 4 திசைகளிலும், நகரின் மையப் பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இது அனைத்து தர மக்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இதிலும் தற்போது உள்ள எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் மார்ச் 7-ந்தேதி எரிவாயு தகன மேடையில் பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார.
    • இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சண்டை ஏற்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் திருக்குளம் செல்வராஜ் மகள் ஸ்ரீமதி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு வீரப்பனுக்கும் ஸ்ரீமதிக்கும் சண்டை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஸ்ரீமதி மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீமதி தனது வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். இத்தகவல் அறிந்து நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார்.மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
    • 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள்.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார். தனசேகர் கண்டக்டர் பணிபுரிகிறார். தனியார் பஸ் சென்று கொண்டிருந்தபோது ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டு பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர் .பின்னர் 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள். மேலும் இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் பஸ்சுடன் சேர்த்து கொளுத்தி விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த டிரைவர் அய்யனார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெட்டிச்சாவடி நிலையத்தில் கண்டக்டர் தனசேகர் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி அரியாங்குப்பம் அரவிந்தராஜ் (வயது 23), நோனாங்குப்பம் நீலப்பிரியன் (18) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். .

    க்டலூர்:

    பண்ருட்டி அப்பாளுபத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57) இவர், பண்ருட்டி- சென்னை சாலையில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார்.

    இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஓட்டல் ஊழியர் சிவகுமாரை தேடி வருகிறார்.

    • கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
    • முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது .

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்  கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இருந்த2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

    மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.  இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது.    அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு படும் இடங்களில் முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதிய வர்கள் இதன் காரண மாக பதற்றத்துடன் காணப்படு கின்றனர். போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்கைள பிடித்து ேமலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது,
    • லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைதுசெய்தனர்,

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பேருந்து நிலையம், பூதக்கேணி, ஈபி இறக்கம் என பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பவ இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து உள்ளார்கள். விசாரணையில் சிதம்பரம் பாரதிநகர் சி.கொத்தங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (வயது37) , பூதகேணி பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அன்வர்தீன் (63), அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ராமன் மகன் நாகசுந்தரம் (65) ஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மொத்தம் 5 லாட்டரி சீட்டுகள்,2 பில் புக், ரொக்கம் ரூ. 2100 பறிமுதல் செய்தனர்.

    • மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மந்தாரக்குப்பம்:

    குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கம் போல ஸ்டூடியோவை முடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் அருகில் வந்தபோது மர்மக் கும்பல் சுந்தரமூர்த்தியை வழிமறித்து சுற்றிவளைத்தனர். மர்மக்கும்பல் வைத்திருந்த கத்தியால் சுந்தரமூர்த்திைய சரமாறியாக வெட்டினர். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். இது குறித்து அங்கிருந்த குடிமகன்கள் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக சுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

    கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் அருகில் இருந்த 2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

    அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் இடங்களில் முகமூடி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதியவர்கள் இதன் காரணமாக பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

    போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்களை பிடித்து மேலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • சில்வர் பீச்சில் தீர்த்தவாரி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்கிறது.

    பின்னர் அங்கு கடற்கரையில் காலை 8 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளியதும், சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் சாமி வீதிஉலா நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ராஜவீதி உலா முடிந்ததும், இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
    • 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்  .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்   ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்  இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×