என் மலர்tooltip icon

    கடலூர்

    • 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர்.
    • அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஒன்று கூடுவர். தினமும் காலையில் 7 மணியிலிருந்து வரத் தொடங்குவர். 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர். இதில் அதிகளவில் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் இருப்பர். இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பணி வழங்குவார்கள்.

    இது தவிர வீடு சுத்தம் செய்தல், தோட்டங்களை பராமரிளத்தல் போன்ற வேலைகளுக்கும் பொதுமக்கள் இங்கு வந்து பணியாளர்களை அழைத்து செல்வர். இவர்களுக்கு என்று நிரந்தர பணி இல்லாவிட்டாலும், இங்கு வந்து நின்றால் வேலை நிச்சயமாக கிடைக்கும். இந்நிலையில் மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதாலும், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்று காலை 7.30 மணிக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    எங்களை வேலைக்கு அழைப்பவர்கள் காலங்காலமாக இங்கு வந்துதான் எங்களை அழைத்து செல்கின்றனர். அதனால் இங்கு நின்றால் மட்டுமே வேலை கிடைக்கும். கலைந்து சென்றால் எங்களுக்கு வேலை கிடைக்காமல், எங்கள் குடும்பம் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்படும் என கூறினர். இதையடுத்து மும்முனை சந்திப்பில் உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர். இதனையேற்ற கூலித் தொழிலாளர்கள் அங்கிருந்து 500 மீட்டர் தள்ளி சென்று நின்றனர். இதனால் இன்று காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே பரபரப்பு நிலவியது.

    • எந்த தனியார் நர்சிங் கல்லூரி சிறந்தது என அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
    • கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 2 தனியார் நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரியில் திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 நர்சிங் கல்லூரிகளிலும் கல்வி கற்கின்றனர். 2 கல்லூரிகளில் எந்த தனியார் நர்சிங் கல்லூரி சிறந்தது என இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனத் தெரிகிறது.இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவிகள் வீட்டிற்கு கிளம்பினர். திட்டக்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 2 நர்சிங் கல்லூரி மாணவிகளும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரே கிராமத்தில் இருந்து வரும் மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இவர்கள் தங்கள் கல்லூரியன் பெருமையை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி இரு கல்லூரி மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாணவிகள் மாறி, மாறி அடித்துக் கொண்டனர். மேலும், பஸ் நிறுத்தத்திலேயே தலை முடியை பிடித்து சண்டை போட்டனர்.  இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர். சில பெண்கள் மட்டும் மாணவிகளை விலக்கி விட்டு சமாதான ப்படுத்தினர். ஆனாலும், மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு தங்கள் கல்லூரியின் பெருமைகளை கூறினர். திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், பெண் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு தலைவிரி கோலத்தில் சண்டையிட்டுக் கொ ண்டிருந்த மாணவிகளை பெண் போலீசார் உதவியுடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்.  

    அங்கு மாணவிகளை அமரவைத்த போலீசார், இது போன்று சாலைகளில் சண்டையிட்டால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவிகளுடன் பெண் போலீசாரை அனுப்பி பஸ் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 நர்சிங் கல்லூரி மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் சண்டையிட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • அறநிலையத்துறை இதற்கான அனுமதி அளித்துள்ளது.
    • ஆகஸ்டு 18-ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில், திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், பக்தர்கள் தரப்பில் கோவில் வளாகத்தில் வைத்து, திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது, அறநிலையத்துறை இதற்கான அனுமதியை அளித்துள்ளது. இது தொடர்பாக கோவிலில், நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருக்கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, கோவிலில் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்கட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும் என்று கூறினர். இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    • மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    • 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமா கஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பழனியும் (55) கைது செய்யப்பட்டார். 2 பேரும் வேலூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர்கள் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவை கேரளாவுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அருகில் சாலையோரத்தில் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான 2 பேரும் மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி அதற்குள் ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலம்பரசனுக்கும் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது.
    • தகராறில் சிலம்பரசன் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிலம்பரசன் (வயது 35). துபாயில் பணி செய்து திரும்பியவர். இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் அரசூரை சேர்ந்த கந்தசாமி மகள் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்தது. இந்நிலையில் நேற்று சிலம்பரசனுக்கும், ரோஜா விற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரோஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    அப்போது ரத்தவெள்ளத்தில் ரோஜா இறந்து கிடந்தார். அங்கிருந்து வெளியேறிய சிலம்பரசன் கிள்ளை போலீஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். தொடர்ந்து கீழ் அனுகம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்ற கிள்ளை போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருமணமாகி 2 மாதமே ஆனதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ரோஜாவின் கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ரோஜாவிற்கும், சிலம்பரசனுக்கும் திருமணமாகி 2 மாதம் ஆகிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரோஜா 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமணம் ஆவதற்கு முன்பே ரோஜா கருவுற்றுள்ளார். இது குறித்து ரோஜாவிடம் சிலம்பரசன் கேட்டுள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்து ள்ளது. திருமணமாவதற்கு முன்பே கருவுற்றதை கூறாமல் மறைத்ததால் சில ம்பரசன் ஆத்திரமடைந்தார். ரோஜாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலம்ப ரசன், அவரது கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (வயது 35) 3 குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இவர்களுடன் வெங்கடேசனின் தந்தை முத்துவேலும் உள்ளார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வழக்கம் போல தூங்கிவிட்டனர். காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பீரோவை பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி கொலுசு, சுய உதவிக்குழு பணம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை பார்த்து பூங்கொடி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஓடுபோட்ட வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் நகை பெட்டிகள் இருப்பதை கண்டனர். மேலும், வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்ட வேலியை பிரித்து உள்ளே வந்து சென்றதையும் கண்டறிந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அதே ஊரில் பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராமர். இவர் வீட்டின் பின்புற கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைய திருடர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், வீட்டிற்குள் செல்ல முடியாமல் கொள்ளையர்கள் திரும்ப சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

    தொளார் குடிகாடு கிராமத்தில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடத்ததும், மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
    • குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் நடை பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலையரசி, தமிழ்பிரியா, ரம்யா, விசா லாட்சி, மணிமேகலை, உமா ராணி, விஜயலட்சுமி ஆகி  யோர் முன்னிலை வகித்த னர். கடலூர் மாவட்ட தலை வர் மணித்தேவன் கலந்து கொண்டு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை களான பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

    வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு பொறுப்பாளருக்கான வயது வரம்பை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். முடிவில் மீனாட்சி நன்றி கூறினார் இதில் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்தின் சத்து ணவு பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சமையலர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

    • குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    கூட்டத்தில் பட்டா தொடர்பான 103 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 58 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 62 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 20 மனுக்களும்,ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 77 மனுக்களும், இது தொடர்பாக தர மனுக்கள் 207 ஆக மொத்தம் 550 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.25 ஆயிரம் வங்கி பரிவர்த்தனை மூலம் பெறுவதற்கான ஆணையை ஒரு பயனாளிக்கும், 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.13600 மதிப்பீட்டிலும், மேலும் ரூ.4200 மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு கண்கண்ணாடி மற்றும் ஸ்மார்ட் ஸ்டிக் ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் அவர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
    • ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரே நேர்கோட்டில் இருந்து வருவதால் ஒரே நாளில் 3 லட்சுமி நரசிம்மரை நேரில் சென்று தரிசனம் செய்தால் மக்களுக்கு துன்பம் நீங்கி கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கு கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள கோவில் என்பதால் உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து வந்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அனுமதி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கூறியிரு ப்பதாவது: - சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 18- ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி திருமணம் நடத்துவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு, முதன்முறையாக திரும ணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும். பின்னர் மக்களின் வரவேற்பு மற்றும் முன்பதிவு அதிக அளவில் நடைபெறுவதை ெபாறுத்து கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப திருமணங்கள் நடத்துவதற்கு அரசின் உரிய வழிகாட்டுதலின்படி என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்து திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்பதனை அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி யதோடு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.

    • குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர்.
    • தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிர மித்து வீடு கட்டி இருப்பதை அகற்ற வேண்டும் என நீதி மன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் பொக் லைன் எந்திரம் மூலம் வீடு களை இடித்து காலி செய்த னர். இந்த நிலை யில் இன்று காலை பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வக்கீல் அறிவுடை நம்பி, அ.தி.மு.க. நாக ராஜன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் சாலை ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். தற்போது மாநகராட்சி சார்பில் நாங்கள் இருந்து வந்த வீடுகளை இடித்து காலி செய்தனர். இந்த நிலையில் எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டது. தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லாததால் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகையால் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி ஜூன் மாதம் வரையில் வெப்ப சலனம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வந்தனர். மாவட்டம் முழுவதும் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் இரவு நேரங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை வருகிற 5-ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், மறுபுறம் மழை பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

    இதையொட்டி இன்று காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். மேலும் டோக்கன் விநியோகம் செய்யும் இடத்தில் நூற்றுக் கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து டோக்கன் பெற்றுக் கொண்டு அதன் பிறகு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அவசர அவசரமாக சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை முழுவதும் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்த வண்ணம் இருந்து வருவதால் எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவை யான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் முன்னெச் சரிக்கை நட வடிக்கை கள் மேற்கொள்வது தொடர்பாக சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×