என் மலர்tooltip icon

    கடலூர்

    • விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தேவக்குமாரை மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்குஅழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம் பேட்டை பகுதியில் வயல்வெளியில் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மங்கலம்பேட்டை எல்லைக்குட்பட்ட விஜய மாநகரம், புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சோதனை நடத்தினர்.

    அப்போது உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் தேவக்குமாரை (37) பிடித்து அவரிடமிருந்த நாட்டு துபாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்குஅழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மணிகண்டனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது.
    • குடிபோதையில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பாரதி சாலை காதி கிராப்ட் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகின்றது.

    நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டு ஏ.டி.எம்.எந்திரத்தை தாக்கி சேதப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாலிபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சி செய்கிறாரா? என கருதி உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், கடலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26 ) என்பது தெரியவந்தது.

    இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் இது தொடர்பாக நேற்று கடலூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த போலீசார் சரியான முறையில் இவரது புகாரை கேட்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மணிகண்டனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது. மேலும் குடிபோதையில் மணிகண்டன் சம்பவ இடத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்து வந்த காரணத்தினால் போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாதுகாப்பாக இறக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இன்று காலை மணிகண்டனுக்கு மதுபோதை தெளிந்த பிறகு கடலூர் புதுநகர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான இம்பீரியல் சாலையில் மது போதையில் வாலிபர் தனது குடும்ப பிரச்சினையை போலீசார் விசாரிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு அதிகளவில் மது குடித்து ஏ.டி.எம் எந்திரத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் கருவூலத்துறை மூலம் 104 வயது சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
    • இளநிலை உதவியாளர் பசுபதி தலைமையில் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நபர்கள், அவர்கள் இறந்த பிறகு அவரது மனைவி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசின் சார்பாக ஓய்வூதியம் கருவூலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

    இதன் காரணமாக வருடந்தோறும் ஓய்வூதியம் பெறும் சுதந்திர போராட்ட தியாகிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இறந்த பிறகு அவரது மனைவிகள் ஒவ்வொரு ஆண்டும் கருவூலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று நேர்காணலில் பங்கேற்று வருகின்றனர். இந்த பதிவு செய்து வருவதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதிய பெறும் நபர்கள் கருவூலத்துறைக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம் அல்லது பல்வேறு வசதிகள் ஓய்வவூதியர்களுக்கு ஏற்படுத்தி அதன் மூலம் தாங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் கருவூலத்துறை மூலம் 104 வயது சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து உதவி கருவூல அலுவலர் அலெக்சாண்டர் அறிவுறுத்தலின் பேரில் இளநிலை உதவியாளர் பசுபதி, கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ஜெயபாரதி மணிமேகலை ஆகியோர் கடலூர் கருமாரபேட்டையில் வசித்து வரும் 104 வயது கொண்ட சுதந்திர போராட்ட தியாகி ஏகாம்பரம் வீட்டிற்கு நேரில் சென்றனர்.

    பின்னர் இளநிலை உதவியாளர் பசுபதி தலைமையில் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கைரேகை மற்றும் முகத்தை ஜீவன் பிரம்மா செயலி மூலம் பதிவு செய்து கொண்டு நேர்காணல் நடத்தி உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவருக்கு கிடைக்க கூடிய ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 104 வயது சுதந்திரப் போராட்ட தியாகி ஏகாம்பரத்திற்கு எந்தவித சிரமம் ஏற்படாத வகையில் வீட்டிற்கு கருவூலத்துறை ஊழியர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து உரிய மரியாதை செலுத்தி அவருக்கு கிடைக்க கூடிய ஓய்வூதியம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுதா (வயது 19)நிறைமாத கர்ப்பிணி. இவர் சம்பவத்தன்று பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துமனைக்கு தனது மனைவியை ராமச்சந்திரன் அழைத்து வந்தார். அங்கு இருந்த டாக்டர்கள் பிரசவத்திற்கு 20 நாட்கள் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையி லிருந்து ராமச்சந்திரன், மனைவி சுதாவுடன் சேத்தூருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அலைந்து வந்த கலைப்பினால் சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு இருவரும் அரசு பஸ்சில் கல்வராயன்மலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது சுதா மயக்கம் அடைந்தார். உடனே ராமச்சந்திரன் சுதாவை அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் சேர்த்தார்.

    அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுதா சாப்பிட்ட பிரியாணியால் உயிரிழந்திருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறி வாங்குவது அனைவருக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரூபாய் 92, 88 ஆகிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்வலை யை ஏற்படுத்தியது. மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவ தோடு, குறைந்த அளவில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் 280 ரூபாய்க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கும், தக்காளி விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தற்போது ஆறுதலாக 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த இஞ்சி தற்போது 255 முதல் 280 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சாம்பார் வெங்காயமும் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்கு தற்போது விலை ஏற்றம் காரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களில் இஞ்சி விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படாத நிலையில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரி களும் .மக்களும் பெரும் அவதி அடைந்து வருகிறோம் என்றார்.

    • மீனா சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது.
    • மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 31). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பா ராத விதமாக இவரது நைட்டியில் தீ பிடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியில் வர முயன்றார். ஆனால் இவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது. 

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மீனா மீது பரவிய தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.
    • தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் கூலித் தொழிலாளர்கள் நிற்பதற்கு மாற்று இடம் வழங்கியதால் சாலை மறியல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை யில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தினமும் காலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வருவர். இவர்களை இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.

    மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதால், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதா லும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேற்று காலை விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்ய னார் மற்றும் போலீ சார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத் திற்கு வந்து அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீ சார் கூறினர். இதனையடுத்து இன்று காலை அனைத்து கூலித் தொழிலாளர்களும் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டு அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கூலித்தொழிலாளிகள் கூறியதாவது:-

    நாங்கள் நீண்ட நாட்களாக பாலக்கரை பஸ் நிருத்தம் அருகே நின்று தான் வேலைக்கு செல்வோம். தற்போது நீங்கள் எங்களை மாற்று இடத்தில் நிற்க கூறினர். ஆனால் காலையில் இங்கு வந்து எங்களை அழைத்து கொண்டு சென்று பணி வழங்கும் கட்டுமான மேஸ்திரிகள், என்ஜினி யர்கள் வழக்கமான இடத்தில் நாங்கள் நிறகிறோமா என்று பார்த்துவிட்டு நாங்கள் இல்லை என்று நினைத்து விட்டு அவர்கள் சென்று விடுகின்றனர் இதனால் நாங்கள் வேலையின்றி அல்லல்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே நாங்கள் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்கிறோம் என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூலித் தொழிலாளர்கள் கூறி யதை கேட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் சிறிது தூரம் தள்ளி நில்லுங்கள் என்று கூறினர். பின்னர் போலீ சார் அங்கு பேரி கார்டை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழி லாளர்களை அப்புறப் படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இது வரை வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தயா. பேரின்பம் கலந்து கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் மதுரை வீரன் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுபாலம் மற்றும் சாலை அமைத்து தர வலியுறுத்தியும் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் கலந்து கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில துணைசெயலாளர் முருகானந்தம்,மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் , துணை செயலாளர் சாமிதுரை, கிளை நிர்வாகிகள் இளங்கோவன், மருதாம்பாள், கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர்.
    • இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலும், அதற்கு சொந்தமான இடமும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் நிலங்கள் குத்தகக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுத்தவர்கள் நிலத்தில் இருந்த பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர். அரசு நிலத்தில் குத்த கைக்கு பயிரிடுபவர்கள் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலத்தில் உள்ள கோயில் சொத்து க்களை அழிக்கவோ, விற்கவோ உரிமை இல்லை என வீதிமுறைகள் உள்ளது.

    இதனை பொருட்ப டுத்தாமல் குத்தகைக்கு எடுத்தவர்கள் மரத்தை வெட்டி விற்றுள்ளனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று வெட்ட ப்படும் மரங்கள், தினமும் மாலை நேரங்களில் டிராக்டர் டிப்பரில் கடத்துவது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி மரத்தை வெட்டிய குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லின் தண்ணீரை திறந்து விட்டார் .இதனைத்தொடர்ந்து அனைத்து டெல்டா மாவட்ட பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க ப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வழி காணப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் டெல்டா பகுதிகளில் பாசனம் பெறும் காட்டுமன்னா ர்கோயில், பரங்கிப்பேட்டை, மேல் புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய வட்டாரங்களில் இத்தொகுப்பு திட்டம் ரூ. 8.41 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த ப்படுகிறது. முன்னதாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுவைத் தொகுப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட விவசாயிகள் 15 பேருக்கு முதல் கட்டமாக வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏ.க்க ள்வேல்முருகன்,சபா ராஜே ந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், வேளாண்மை துறை அதிகாரிகள் ரவிச்சந்திரன் ,கென்னடி ஜெபக்குமார், ஜெயக்குமார் ,கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ,கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    மேட்டூர் அணை திட்டமிட்டு படி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ. 75 .95 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தண்ணீர் தேவையில்லை. ஆனால் 2 மாதங்களுக்கு பின்பு தான் தண்ணீர் தேவை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவேரி தண்ணீர் பெறும் வேலையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதே போன்று கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. பருவ நிலையில் தற்போதுகர்நாடகாவிலும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். குருவை சாகுபடி நடவு பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு எந்திர நடவிற்கு வேளாண் துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும். மேலும் செலவும் குறைவு ஏற்படும். அ.தி.மு.க.கட்சி நடத்துவதற்காக எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள். கடந்த காலங்களில் எங்கு தூர்வாரும் பணி நடைபெற்றது. தண்ணீர் வரும்போது அவசர நிலையில் தூர்வாரினார்கள். ஆனால் தற்போது முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 99 சதவீதம் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

    மழையின் காரணமாக வரத்து குறைவால் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது. டெல்லியிலும் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளது. இது சரி செய்யப்படும். சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து காலங்களிலும் காய்கறிகள் விளைவிக்க தொழி ல்நுட்பத்தின் வாயிலாகவும் பருவ நிலைக்கு ஏற்ற வகையிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளது குறித்து பல்கலைக்கழக ங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இவ்வாறுஅவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வருகிறது.
    • போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பெரும் கோர விபத்தில் 7 பேர் பலியாகியும், 88 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் பூண்டியாங்குப்பம் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியும் விபத்து ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே தொடர் விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம், பொதுமக்கள் நலன் கருதி மிக பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

    குடி போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதனை இரு சக்கரம், கார் மற்றும் கனரக வாகன டிரைவர்களை போலீசார் சோதனை செய்வது வழக்கம். ஆனால் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை சோதனை செய்வது இல்லை.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பஸ் விபத்து அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்களை நிறுத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயணிகளை ஏற்றி வந்த அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களை சாலையோரத்தில் நிறுத்தி பஸ் டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டுகிறார்களா? என்பதனை மெஷின் மூலம் சோதனை செய்தனர்.

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்களை நிறுத்தி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் டிரைவர்களிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் இரவில் மது அருந்தி விட்டு காலையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    போதையில் பஸ்சை ஓட்ட முயன்ற டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

    மேலும் டிரைவர்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. உடல் உபாதைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பஸ்களை ஓட்டுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பஸ் டிரைவர்களை போலீசார் அதிரடியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஏனென்றால் அனைத்து வாகன டிரைவர்களையும் சோதனை செய்யும் நிலையில் பஸ் டிரைவர்களை இதுபோன்ற சோதனை செய்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் தவிர்த்து வந்த நிலையில் தொடர் விபத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் இன்றுடன் இந்த சோதனையை நிறுத்தாமல் தொடர் நடவடிக்கையாக இதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுபாஷினிக்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்தியாவதி (49). இவர்களின் மகள் சுபாஷினி (28). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருக்கு சுபாஷினியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுபாஷினி வேலைக்கு சென்றார். அங்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் அப்பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    சில காலங்களுக்கு பிறகு இருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எங்கும் கிடைக்காததால், சுபாஷினியின் அம்மா வீடான பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்திற்கு வெற்றி வந்தார். அங்கு இருந்த சுபாஷினி யின் பெற்றோரிடம் எனது மனைவி சுபாஷினி எங்கே என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த சத்தியாவதியின் வயிற்றிலும் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த இருவரையும் பொதுமக்கள் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×