search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினவழிபாடு
    X

    வராகி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினவழிபாடு

    • பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேய்பிறை பஞ்சமி தினமான நேற்று பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை சிறப்பு அலங்காரம் ஆகியவை செய்யப் பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.

    Next Story
    ×