என் மலர்
நீங்கள் தேடியது "வராகி அம்மன்"
- ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம் பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும்.
- வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு "ரக்ஷா பஞ்சமி" என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.
பொதுவாகவே பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாட்டுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆடி மாத தேய்பிறையில் செய்யப்படும் வராகி வழிபாடு இரட்டிப்பு பலன்கள் தரக்கூடியதாகும்.
இந்த ஆடி மாதத்தில் இந்த பலனை நீங்கள் பெற வேண்டுமானால் முதலில் வராகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
வராகி என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரில் ஐந்தாவதாக உள்ளவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).
அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி.
இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும். பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பார்கள். நெல்லையப்பர் கோவில் வராகி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சை பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.
ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராகி சொரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.
கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தைய உன்னதமான நிலை.
வராகி வராகரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்லப்படுகிறாள். அதில் வராகி அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராகியின் தத்துவத்தை உணர்த்தி விடும்.
வராகம் என்றால் என்ன? பன்றி. வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராகிதான். என்ன உதவி தெரியுமா?
பன்றிக்கு இயல்பிலேயே வானை நோக்கும் சக்தி கிடையாது. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராக அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராகி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
வராகி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். அதாவது குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும். எதிரிகள் குறைவார்கள். ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. இதனால் தான் வராகிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.
வராகி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம், வராகி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வராகி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.
ஆனால் வராகி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், ஸ்ரீ வராகிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர். எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், வராகியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
வராகிக்கு பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வராகியை வழிபட வேண்டும்.
பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வராகி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராகி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வராகி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வராகி தேவி.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வராகி மாலா போற்றுகின்றது. இத்தகைய சிறப்புடைய வராகிக்கு தமிழகம் முழுவதும் ஆலயங்கள் இருக்கின்றன. நமது சென்னையில் பல ஆலயங்களில் வராகிக்கு சன்னதி இருந்தாலும் தனி ஆலயம் என்று பார்த்தால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருக்கும் வராகி அம்மன்தான் அனைவருக்கும் தெரிய வரும். சைதாப்பேட்டை நுழைவு வாயலில் பிரதான சாலை ஓரத்திலேயே இந்த அம்மன் வீற்றிருந்து தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களை வருந்த விடாமல் பலன்களை கொடுத்து கொண்டு இருக்கிறாள். இந்த வராகியை வராகி வள்ளி என்றும் அழைக்கிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வராகி அம்மன் ஆலயம் இந்த இடத்தில் உள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் நம்பிக்கை தெய்வமாக வராகி அம்மன் இருந்து வருகிறார்.
2015-ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடி உயரத்தில் வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 3 நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் நவராத்திரி வசந்த நவராத்திரி. அந்த நவராத்திரியின் போது அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். 2-வதாக ஆஷாட நவராத்திரியையொட்டி 10 நாட்கள் விழா நடைபெறும். 10-வது நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்த நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியையொட்டி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மாதத்திற்கு 2 முறை பஞ்சமி வரும். அதில் ஒன்று வளர்பிறை பஞ்சமி, 2-வது தேய்பிறை பஞ்சமி. இந்த 2 பஞ்சமியும் அம்மனுக்கு மிகுந்த விசேஷ நாளாகும். இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் 3-வது வாரம் வள்ளி அம்மனுக்கு கூழ் படைத்தல் நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது சிறப்பு. வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள் இங்கு வந்து வராகி அம்மனின் அருளால் பூரண குணமாகி செல்கின்றனர். பல ஆண்டுகளாக தீராத வழக்குகள் அம்மனின் அருளால் முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் பலர் நேரில் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு நன்றி செலுத்தி செல்கின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கு வந்து வழிபட்டு பதவி உயர்வு மற்றும் பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பல அதிசயங்கள் கோவிலில் நடந்து உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பணக்காரர்கள் பலர் கோவிலில் வந்து சேவை செய்கின்றனர்.
ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் போது கர்ப்பிணி பெண்களை அமர வைத்து பூஜை செய்யப்படுகிறது. அடுத்ததாக குழந்தை இல்லாத பெண்களை அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
வளைகாப்பு நிகழ்ச்சி பூஜையில் அமர்ந்த பெண்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது. நெல்லை மாவட்ட ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமில்லாமல் மனமுடைந்து இருந்தார். இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு அம்மனை தரிசித்து சென்றார்.
கோவிலில் தரிசனம் செய்து சென்ற சில நாட்களிலேயே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. கோவிலில் தினந்தோறும் நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய வெளிமாநில பக்தர்கள் பலர் விமானத்தில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பெரும்பாலானோர் மலேசியாவில் இருந்து வருகின்றனர்.
வராகி அம்மனுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும் தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது போல் வராகி அம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவில் மூடப்படும். மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு 9½ மணிக்கு கோவில் மூடப்படும்.
- திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
- பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ'. இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
- முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
- ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
வராகி அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடுவது சிறப்பு தான் என்றாலும் சனி ஹோரையில் பஞ்சமி தினமான இன்று வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கே நன்மையை கொடுக்கும்.
சனிக்கிழமை வராகி வழிபாடு ஏன் சிறந்தது என்று தெரியுமா?
சனிக்கிழமை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும். வீட்டில் இருப்பவர்கள் யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம். அல்லது வருமானத்திற்கே வழி இல்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் நிற்கக்கூடிய நிலைமை இருந்தாலும் கூட நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.
சனிக்கிழமைகளில் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது?
சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வராகித் தாயாக நினைத்துக் கொண்டு வழிபட நற்பலன் கிடைக்கும். ஒரு செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம்.
மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். நைவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும். பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் கஷ்டங்களை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வர சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.
கடன் தொல்லை, வறுமை, பண பிரச்சனை போன்றவைகள் நீங்கும்.
எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வாக்கு பலிதம் ஏற்படும், நீண்ட நாள் நோய்கள் குணமாகும். தீவினை கோளாறுகள் நீங்கும்.
சுபகாரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும்.
உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.
- வராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி தொடங்கியது.
- தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோச மங்கையில் மிகப் பழமையான சிவன்கோலிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோவில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் வராஹி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது.
இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவ மைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வளர்பிறையில் வராஹி அம்மன் கோவில்களில் ஆஷாட நவராத்திரி தொடங்கி 9 நாட்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.
அதன்படி திருஉத்தர கோசமங்கையில் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அதிகாலை, நண்பகல், இரவு என 3 முறை பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷே கமும், புதிய அலங்காரமும் செய்யப்பட்டது.
இதுபோன்று இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கனி உள்ளிட்ட அலங்காரங்கள் என ஒவ்வொரு நாட்களாக 8 நாட்களும், 9வது நாளான 26ம் தேதி வளையல், வடை மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.
- பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேய்பிறை பஞ்சமி தினமான நேற்று பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை சிறப்பு அலங்காரம் ஆகியவை செய்யப் பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.
- அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
- வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.






