search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்
    X

    திருவதிகை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமித்த காட்சி.

    பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்

    • முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் தர்மராஜா கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள திரவுபதி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தினமும் மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வீதி உலா காட்சி ஆகியவை நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது. இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்.

    Next Story
    ×