என் மலர்tooltip icon

    சென்னை

    • பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.

    விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.

    இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
    • அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஒரே பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் புகாரை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பின்போது பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில், 2021 சட்டசபை தேர்தலில் தாம் சொன்னதை ஏற்காததால் தோல்வி அடைந்ததாகவும், 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம் என்று அமித்ஷா வருத்தப்பட்டதாகவும், தாம் கூறியதை கேட்டிருந்தால் தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்காது எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.

    தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் சிலருக்கு கடிவாளம் போட வேண்டும் என அ.தி.மு.க. கேட்டுக்கொண்டதாகவும், தி.மு.க. அமைச்சர்கள் சிலரின் சொத்து விபரத்தையும் அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த முறை அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை;
    • திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.

    சென்னை:

    தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.

    இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி.

    நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.

    இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என்று கூறியுள்ளார். 



    • வரும் நாட்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின்னர் ஊழல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருந்தார்.

    தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஒரே பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போராட்டத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் புகாரை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ரூ.1,000 கொடுத்து விட்டு ரூ.1,000 கோடி ஊழல் எனக் குறிப்பிட்டு பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பா.ஜ.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி இருந்தது.

    இந்த நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களும் பேட்டிகளில் டாஸ்மாக் ஊழல் புகாரை முன்னிறுத்தி பேச திட்டமிட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின்னர் ஊழல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருந்தார். அமித்ஷா பதிவுக்கு வலுசேர்க்க ஊழல் என்ற கோணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    தனித்தனியாக இரு கட்சியினரும் போராடினாலும் நோக்கம் ஒன்றாக இருக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.
    • ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக சென்னை ஐகோர்ட்டு வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இந்த வழித்தடத்தின் நீளம் எவ்வளவு? எத்தனை ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்?, இந்த திட்டத்திற்கு ஏற்படும் செலவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியுள்ளது.

    அதேபோல், பட்ஜெட் அறிவிப்பின்படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரெயில் சேவையை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு சுமார் 167 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும், கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் ஈரோடு வழியாக சேலத்திற்கு 185 கிலோ மீட்டர் தூரத்திற்கும் விரைவு ரெயில் சேவையை தொடங்குவதற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

    இந்த 3 வழித்தடங்களில் விரைவு ரெயில் சேவையை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்ட உடன் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகாரிகள் கூறினர்.

    • கூட்டணியில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து இருக்கிறதா?.
    • டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, "கூட்டணியில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து இருக்கிறதா?. தி.மு.க.வில் உள்ள கட்சிகள் நிலையாக இருக்கிறதா? இருக்கப்போகிறதா?. அது பற்றி சொல்ல முடியாது. இது அரசியல். அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றங்கள் இருக்கும்," என்று கூறினார்.

    மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைய எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் பேசு பொருளாகி உள்ளது.

    டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி திரும்பிய நிலையில், அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார்.

    வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    • ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    • கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    கோடைக்காலத்தில் தடையின்றி சீரான மின்சார விநியோகம் செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    * கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    * கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு.

    * ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    * கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    * தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.

    * 3-ல் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.

    * மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் அவசியமான இடங்கள் நிரப்பப்படும்.

    * துணை மின்நிலையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 2030ஆம் ஆண்டுக்குள் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

    இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார்.
    • தந்தைக்கு கொள்ளிக்குடம் தூக்கி மகள் அக்ஷிதா இறுதிச்சடங்கு செய்தார்.

    தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜ் உடலுக்கு அவரது 2 மகள்களும் கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர். மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார். 

    • தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று இ.பி.எஸ். தெரிவித்தார்.
    • கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    குறிப்பாக "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே.." என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் "தலைமை எந்தக் கூட்டணி அமைத்தாலும் மகிழ்ச்சிதான். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தமிழக சட்டசபையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி அளித்த பதில் பின்வருமாறு:-

    * கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * இதுவரை 25,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 2,418 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    * அடுத்த மார்ச் மாதத்திற்குள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

    * திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * 4 ஆயிரம் கோடி ரூபாயில் 10,545 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.

    * தமிழ்நாட்டில் இன்னும் 8 கிராமங்கள்தான் இணைக்கப்படாமல் உள்ளன.

    இவ்வாறு ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

    ×