என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்துள்ளார்.
    • மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை அந்தரங்கமாக வீடியோ எடுத்து 10 வகுப்பு மாணவர்கள் நால்வர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மதுரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியொன்றில் வேலை பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை செய்துவந்த்துள்ளார்.

    பள்ளி முடிந்ததும் வீட்டில் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்துள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியை பாத்ரூமில் குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளான். அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்ததாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த மாணவன் சக மாணவர்கள் மூன்று பேருக்கு ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பிவைத்துள்ளான். அந்த மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார்.

    ஆனால் மிஷன் சக்தி எனப்படும் தற்கொலைக்கெதிராக கவுன்சிலிங் வழங்கும் அமைப்பு அவருக்கு உதவியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வீடியோ எடுத்த 10 வகுப்பு மாணவனும் அவனக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.  

    • மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக BILSERI பாட்டிலை வழங்கிய உதவியாளர்
    • போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு

    உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக போலியான BILSERI பாட்டிலை அவரது உதவியாளர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது..

    இதனையடுத்து, போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
    • முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான இறுதி போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 5 நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் 114 ரன்களும் பிரித்வி ஷா 76 ரன்களும் அடித்தனர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த முன்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

    • முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 76 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் சரன்ஷ் ஜெயின் 4 விக்கெட்டும், மனவ் சுதார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    • 60 வயது முதியவரையும் 25 வயது இளைஞராக மாற்றும் அதிநவீன டைம் மெஷின் உள்ளது
    • இவர்களிடன் ரூ. 10.75 லட்சம் ஏமாந்த பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்

    இளமையை மீட்டுத் தருகிறோம் எனக்கூறி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதி நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. உ.பி கான்பூரில் உள்ள கிட்வாய் நகர் பகுதியில் தெரபி சென்டர் நடத்தி வரும் ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தூபே வயதான மற்றும் நடுத்தர வயத்துடயவர்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    60 வயது முதியவரையும் 25 வயது இளைஞராக மாற்றும் அதிநவீன டைம் மெஷினை தாங்கள் இஸ்ரேலில் இருந்து வாங்கி வந்துள்ளோம் என்று விளம்பரப்படுத்தி பலரை இவர்கள் தங்கள் தெரபி சென்டருக்கு ஈர்த்துள்ளனர். அந்த டைம் மெஷின் மூலம் ஆக்சிஜன் தெரபி செய்து இளமையை மீட்டுத்தருகிறோம் என்று கூறி ரூ.90,000 கட்டணமாக வசூலித்துள்ளனர்.

    இவர்களிடன் ரூ. 10.75 லட்சம் ஏமாந்த பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் ரூ.35 கோடி வரை அவர்கள் மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் வருவதை அறிந்து கம்பி நீட்டிய தம்பதியை உ.பி காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

    • இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலி மீது மோதி தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    வாரணாசியை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பதோஹியில் கூரை அமைக்கும் பணிக்காக சென்றனர். அங்கு பணியை முடித்து விட்டு நள்ளிரவில் 13 தொழிலாளர்களும் டிராக்டரில் வாரணாசிக்கு திரும்பினர்.

    தொழிலாளர்கள் 13 பேரும் டிராக்டரின் பின்பக்கம் டிராலியில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் மிர்சாபூர் மாவட்டம் கச்சுவா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலியில் பயங்கரமாக மோதியது.

    இதில் டிராக்டர் டிராலி நொறுங்கி அதில் இருந்த தொழிலாளர்கள் 13 பேரும் இடிபாடுகளில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணி தாமதமானது.

    மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பானு பிரதாப் (வயது25), விகாஸ்குமார் (20), அனில் குமார் (35), சூரஜ்குமார் (22), சனோகர் (25), ராகேஷ்குமார் (25), பிரேம்குமார் (40), ராகுல்குமார் (26), நிதின் குமார் (22), ரோஷன் (27) என தெரியவந்தது.

    மேலும் தொழிலாளர்கள் ஆகாஷ் (18), ஜமுனி (26) அஜய்சரோஜ் (50), ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த தொழிலாளர்கள் வாரணாசியை அடுத்த மிர்சா முராத் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்
    • அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

    செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் பணியாற்றி வந்தவர் 58 வயதான மால்தி வர்மா[Malti Verma]. இவருக்கு காலேஜ் செல்லும் வயதில் மகள் ஒருவரும் மற்றொரு மகளும் உள்ளனர் .

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மால்தியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஸ்பிலேவில் போலீஸ் உடையணிந்த ஒருவரின் படம் இருந்துள்ளது.

    போனை எடுத்து மால்தி பேசிய நிலையில் மறுபுறம் இருந்து பேசிய நபர், 'உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார். நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேர்வார்' என்று கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு பதற்றமடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வாட்சப் கால் வந்த நம்பரை மகளிடம் சொல்லியுள்ளார். அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

    மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தி தாய்க்கு ஆறுதல் அளித்துள்ளார். ஆனாலும் பதற்றத்துடனேயே இருந்த மால்தி வீடு திரும்பியதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.போலி அழைப்பு தொடர்பாக மால்தி யின் குடும்பம் புகார் அளித்த நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்தார்
    • சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் கன்னத்தில் அறைந்து சாதி பெயரை சொல்லி திட்டினான்.

    உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் குடும்பத்தோடு வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் அமேதியில் பவானி நகர் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் [35 வயது], அவரது மனைவி பூனம் பாரதி மற்றும் இரு மகள்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

    தனது குடும்பத்துக்கு சந்தன் வர்மா என்ற நபரால் அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி பாரதி ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், உடல் நிலை சரியில்லாத தனது மகளுக்கு மருந்து வாங்குவதற்காக ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு பாரதியும் அவரது கணவர் சுனில் குமாரும் சென்றுள்ளனர்.

    மருத்துவமனையில் சந்தன் வர்மா என்ற நபர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் என்னைக் கன்னத்தில் அறைந்தான், அப்போது அங்கு வந்த கணவரையும் என்னையும் சாதி பெயரை சொல்லி திட்டினான்.

    நடந்ததைப் போலீசில் சொன்னால் குடும்பத்தே கொன்று விடுவதாக மிரட்டினான். எனவே எங்களது உயிருக்கு சந்தன் வர்மாவால் அச்சுறுத்தல் உள்ளது என்று SC/ST பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாரதி கடந்த மாதம் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ் அதை அலட்சியம் செய்ததாலேயே தற்போது இந்த கொலைகள் நடத்தக்கதாக கண்டனம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கொலைகளுக்கு விரைந்து நீதி வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

     

    • முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அபிமன்யு சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    சாய் சுதர்சன் 32 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும், இஷான் கிஷன் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னும், துருவ் ஜுரல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இங்குள்ள வளாகத்தில் ஏழு முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இந்த ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமர் கோயில் கட்டும் பணியை விரைவுபடுத்தவும், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் பணியாளர்களை அதிகரிப்பது குறித்தும், தேவைப்பட்டால் தொழில்நுட்பக் குழுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க இன்று முதல் மூன்று நாள் ஆய்வுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மிஸ்ரா இன்று அயோத்தி சென்றடைந்தார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
    • குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு மாயாவதி கடும் கண்டனம்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உடைபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பாக 3200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாமியார் போலே பாபா பெயர் இதில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரானி கோப்பை தொடரில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
    • மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    போட்டி தொடங்கிய முதல் நாளில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மும்பை அணி பேட்டிங் செய்து வந்ததால் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

    இந்நிலையில், 2-ம் நாள் ஆட்டத்தில் 102 டிகிரி காய்ச்சலுடன் 9 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் அடித்து அவுட்டானர்.

    பேட்டிங் செய்து முடித்ததும் ஷர்துல் தாக்கூரின் உடல்நிலை மேலும் மோசமானதால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீரானதால் இன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. 

    ×