search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weed"

    • சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை.
    • வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல.

    சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும், வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அத்தகைய தாவரங்கள் நமக்கு பிடித்தாலும் வீட்டுக்குள் வைத்து வளர்க்காமல் இருப்பது நல்லது.

    முற்களால் ஆன தண்டு போன்ற அமைப்பைக் கொண்ட இந்த கள்ளி செடிகள் உங்களது ஆற்றலை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே அதை வீட்டினுள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வளர்ச்சி குன்றிய இந்த பொன்சாய் தாவரம் நமது வாழ்க்கையிலும் வளர்ச்சி ஏற்படுவதை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

    பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த பொன்சாய் செடிகளை எல்லோருமே வளர்க்க ஆசைப்படுவோம். ஆனால் அதை வீட்டின் வெளிப்புற வராண்டாவில் வைக்கலாம். வீட்டு வாசலுக்கு நேராகவோ அல்லது படுக்கையறை மற்றும் சமையலைறையைப் பார்த்தபடி வைக்கக் கூடாது. அது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

    மூங்கில் செடி

    இந்த செடியை நீங்கள் வீட்டின் முன்புறத்தில் வைக்கலாம். இவை நமக்கு ஒரு விதமான அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. இதை நாம் வீட்டை நோக்கி திருப்பி வைக்கும்போது, வாழ்வதற்கான ஆதாரம் இல்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

    பொட்பேரி

    இவை பெரும்பாலும் வீட்டை அழகுபடுத்த பயன்படுத்தப்படும் உலர்த்தப்பட்ட இலைகள் ஆகும். ஏனெனில் இந்த இலைகள் இழக்கப்பட்ட ஆற்றலைப் பற்றி கூறுபவை. இவை ஒரு விதமான முன்னோக்கிய எண்ணங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

    அரச மரம் மற்றும் அதன் வேர்கள் அதிகப்படியான நீரை உறிஞ்சக்கூடியவை. இதனால் இவற்றை நம் வீடுகளில் நடும் போது அவை சுவர்களில் விரிசல்களை ஏற்படுத்துவதோடு அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும்.

    செடிகளை வைப்பதில் நாம் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை

    உங்கள் படுக்கை அறையில் செடிகளை வைக்காதீர்கள். செடிகள் மிகவும் ஆற்றல் மிக்கவை என்பதால் அவை உங்கள் படுக்கை அறையின் காற்றோட்ட தன்மையை கெடுக்கும். இதனால் நீங்கள் காலை எழும்போது சோர்வாக காணப்படுவீர்கள். சில அழியக்கூடிய தாவரங்கள் எதிர்மறையான ஆற்றலை உருவாக்கும். எனவே அவற்றை உடனடியாக மாற்ற வேண்டியது அவசியம்.

    ×