என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.
    • மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு.

    சென்னை:

    ஆதிக்க மொழித் திணிப்பை தடுத்து அன்னைத் தமிழை காப்பேன் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    * இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அன்னைத் தமிழே சூளுரைக்கிறேன். தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.

    * இந்திய மொழிகளை ஒவ்வொரு முறையும் காத்து நிற்பது தமிழ்நாடும் தமிழர்களின் மொழியுணர்வும் தான்.

    * மாநில மொழிகளை வளர்க்கவும் பரவச் செய்யவும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதாக பா.ஜ.க. சொல்கிறது.

    * மத்திய பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப்பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.

    * இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்போம், மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மொழிக்கொள்கை.

    * பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் தற்போது தாய்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என உணர்ந்து உத்தரவிட்டுள்ளது.

    * மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு என்று கூறியுள்ளார். 

    • 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

    • மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. 

    • சீமான் தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
    • வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

    நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்தனர்.

    வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சீமானுடன் தன்னையும் காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "எங்கள் தலைவர் பிரச்சனையில் இருந்தால் கூட நிற்பது என்னுடைய கடமை. ஒரு பெண்ணின் விஷயத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியை ஒழிக்க பார்க்கிறார்கள். நான் என்ன வெடிகுண்டா துப்பாக்கியா வைத்துள்ளேன், என்னை ஏன் தடுக்கிறீர்கள். இந்த உடம்பில் உயிர் உள்ளவரை மக்களுக்காக நிற்பான். வீரப்பன் மக்களுக்காக உண்மையாக இருந்தார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • பிரக்ஞானந்தா செக் குடியரசு வீரர் டாய் வென்னை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது.
    • என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன என்றார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?

    கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

    புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.

    காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம்.

    முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

    பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது.

    என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.

    பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.

    கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.

    விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால் மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.

    மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    பேட்டி முடிந்ததும் காரில் வீடு புறப்பட்ட சீமான், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.

    • வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
    • காவல்நிலையம் முன் தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர்.

    வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்வதற்காக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கு அருகே தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

    சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 35 கேள்விகளை எழுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. விசாரணை நள்ளிரவு வரை தொடரலாம் என தெரிகிறது.

    • தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது.
    • தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    சென்னை கொட்டிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடானு கோடி உடன்புறப்புகளால்தான், மக்களால்தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் அமர்ந்த இடத்தில் என்னையும் அமர வைத்தது உடன்பிறப்புகள்தான்.

    ஓயாமல் உழைக்கும்போது, பிறந்தநாள் விழாக்கள் சிறிது ஓய்வுக்கான ஸ்பீட் பிரேக்கர்கள் போன்றவை. கோபாலபுரம் பிறந்த இடமாக இருந்தாலும் என்னை வளர்த்தது தமிழ்நாடு.

    தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது. தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    பிறந்தநாள் வாழ்த்துக்கான மேடை மட்டுமல்ல, வெற்றி விழா மேடை. 2026 தேர்தல் வெற்றிக்கான தொடக்க விழா மேடை இது.

    விரிசல் விழாதா என எண்ணிக் காத்திருப்பவர்கள் ஆசையில் மண் தான் விழும். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுபாடு வரும் ஆனால் விரிசல் வராது.

    2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் தரை மட்டமாகி இருக்கும். 

    தமிழ்நாட்டிற்கான எந்த நன்மையையும் மத்திய பாஜக அரசு செய்வதில்லை. தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு பார்த்து பார்த்து வஞ்சிக்கிறது.

    புதிய கல்விக் கொள்கையை திணிப்பதை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு. பெயர்தான் தர்மேந்திர பிரதான், ஆனால் அவரிடம் தர்மமே இல்லையே.

    தேவைப்பட்டால் நாங்கள் பல மொழியை கற்றுக் கொள்வோம் எங்கள் மீது இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி திணிப்பால் மைத்ரி, மகதி உள்ளிட்ட மொழிகள் அழிக்கப்பட்டது.

    எங்களை எப்படி மிரட்டினாலும் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டினால் கூழைக் கும்பிடு போன நாங்கள் என்ன அடிமை அதிமுகவா ?

    தமிழ்நாட்டின் தொகுதிகளை, பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. பிரச்சனை எழுப்பியவுடன் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாது என்கிறார்கள்.

    மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்வது மகிழ்ச்சி. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
    • வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை.

    இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

    சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

    ஆனால், போலீசாரின் அறிவிப்புபடி இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்திருந்தார்.

    சேலத்தில் இருந்து இன்று சென்னை வந்த சீமான் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு மேல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புறப்பட்டார்.

    இதனால், வடபழனியில் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு, 9 மணியளவில் சீமான் மீண்டும் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார்.  

    இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜரானார்.

    • சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.

    சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.

    பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்" என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.
    • கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?

    3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை நியாயப்படுத்தும் வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.

    விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
    • அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை.

    அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.

    அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் முதலே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.

    அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×