என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?
    • நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?

    * நீங்களா சந்தித்தாரா? சந்தித்து இருப்பாரா? என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி?

    * ரஜினி என்ன பா.ஜ.க.வா? நான் அவரை அன்பின் நிமித்தமாக, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று சொல்லி விட்டேன்.

    * ஒவ்வொன்றையும் நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

    * நேற்று நீங்கள் தான் சொன்னீர்கள். வேதாரண்யத்தில் வேட்பாளரை அறிவித்ததாக சொன்னீர்கள்.

    * நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும். கூட்டணி வைப்பவன் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு.

    இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு.

    ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும்.
    • ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 சதவீதம், உற்பத்தித்துறை 9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

    ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண் துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்திரை மட்டுமே கொண்ட சேவைத்துறை 53 சதவீத பங்களித்துள்ளது. 26 சதவீதத்தினரைக் கொண்ட உற்பத்தித்துறை 37 சதவீதம் பங்களித்துள்ளது.

    ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழும் வேளாண்துறை வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்களித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

    2024-25-ம் ஆண்டில் நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.17,23,698 கோடி என்றால், அதில் வேளாண்துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டும் தான்.

    அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38,304 மட்டும் தான்.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,29,826 ஆகும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது ஆகும்.

    வேளாண்துறை முன்னேற வேண்டுமெனில், ஆண்டுக்கு சராரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண்துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
    • புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.

    அப்போது ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

    விழாவில் அவர் மேலும் கூறியதாவது:-

    ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது.

    தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. சற்று நேரம் முன்புதான் அயோத்தியா ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன.

    புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரெயில் பாலம். பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை.

    ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதன் மூலம் வளர்ச்சி மேம்படும் என பிரதமர் நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இயங்கும் ரெயில் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும். நாட்டின் பல துறைகளின் செயல்பாடுகளை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.
    • வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது.

    சென்னை:

    பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் இதில் பங்கேற்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே போலீஸ் அனுமதி அளித்து இருந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

    தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்க வந்து கொண்டு இருந்ததாகவும், வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இஸ் லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரு கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்தது.

    பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிப்பது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இது முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராக அமைந்து உள்ளது.

    உதாரணமாக முன்பு மதரசாக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது.

    ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்டம் மூலம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வழங்க முடியும்.

    இதே போல வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்து கோவில் அறங்காவலர்களாக இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா?

    ஒரு மதத்தினர் வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்தது போல வருங்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்கி விடுவார்கள்.

    இந்து ராஷ்டிரம் என்ற தவறான கொள்கையை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் திணிக்க முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வக்பு திருத்த சட்டம் செல்லாது என்று நிச்சயம் அறிவிப்பு வரும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.


    ஆர்ப்பாட்டத்துக்கு முத்தழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கி ரஸ் தலைவர் தங்கபாலு, கருணாஸ், பொன்குமார், வன்னியதேவன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, உ.பலராமன், ரங்கபாஷ்யம், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.கே. நவாஸ், தளபதி பாஸ்கர், ஹசினா சையத், பி.வி.தமிழ்ச்செல்வன், அகரம் கோபி, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கெண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    • விழுப்புரம் புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
    • வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    தமிழகத்திற்கு ரூ.8300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

    மேலும், வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    விழுப்புரம் புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

    பூண்டியன்குப்பம்- சட்டநாதபுரம், கும்பகோணம் சோழபுரம்- தஞ்சை 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

    • பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
    • ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    அதனைத் தொடர்ந்து ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து செங்குத்து வடிவிலான தூக்கு பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றதை பார்வையிட்டார். நாட்டின் தேசியக்கொடி பறக்க அதில் இருந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடியை பார்த்து சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தி கையசைத்தார்.

    சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.

    • வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசா பெயரில் நாளை வழக்கு.
    • நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.727 கோடியில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.


    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    நாங்கள் உழைப்பது, இந்தியா முழுமைக்கும் சமூக நீதி மாநில சுயாட்சி, கூட்டாட்சி மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை வென்றெடுக்கத்தான். அதனால் தான் நம் கழக எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையில் மாநிலங்க ளவையில் எடுத்து வைக்க கூடிய வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றக் கூடிய அளவுக்கு அமைந்து உள்ளது. இதைப் பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?

    தமிழ்நாட்டின் நாடாளு மன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்கி றார்கள். தொகுதி மறுசீர மைப்பு என்ற பெயரில் மிகப் பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு.


    வர இருக்கக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகுது.

    மக்கள் தொகையை பல்வேறு பல திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    இதைப்போல தென் மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையை இழப்பார்கள். உடனே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன்.

    அந்த கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி இது போல பாதிக்கப்படும் மாநிலங்களை இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. 7 மாநிலங்களை சார்ந்த 22 கட்சிகள் அதில் கலந்து கொண் டார்கள்.

    அந்த கூட்ட முடிவின்படி அகில இந்திய அளவிலான கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளோம்.

    அந்த குழுவின் சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு, ராமேசுவரத்துக்கு பிரதமர் வர இருக்கிறார்.

    நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் ராமேசுவரம் விழாவில் என்னால் பங் கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை அவருக்கு நான் தெரிவித்து விட்டேன். அந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் மூல மாக உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை, நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும்.

    தென்மாநிலங்கள் உள் ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதி மொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும்.

    அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை.

    இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட் டையும் நசுக்கி விடுவார்கள். அதனால்தான் நம் வலிமையை குறைக்க பா.ஜ.க. துடிக்கிறது.

    வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதல் தமிழ்நாடு அரசும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தோம். வக்பு திருத்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் நிறை வேற்றப்பட்டு உள்ளது.

    இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை 1 நிமிடம்தான் பேசினார். ஆனால் நாங்கள் சட்ட மன்றத்தில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளேன்.

    நாளை துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் வழக்கு தொடுக்கப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்.
    • ராமரின் ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.

    ராமேசுவரம்:

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக இலங்கையின் அனுராதாபுரத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் வந்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில்,

    இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன். அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் பாலத்தை கண்டு தரிசனம் செய்தேன். ராமர் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
    • பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

    ஊட்டி:

    நீலகிரியில் இன்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உங்களுக்கு நன்மை செய்வதில் முதலாவது நபராக இருப்பவர்கள் நாங்கள் தான்.

    * 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது 2 நாட்கள் நான் இங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன்.

    * அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்தபோது அவர்களை எழுப்பி நீலகிரிக்கு வர வைத்தது தி.மு.க.

    * இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

    * பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் என மத்திய அரசே கூறி உள்ளது.

    * தனித்துவமும் தலைமைத்துவமும் தான் திராவிட மாடல், அதனால் தான் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையில் உள்ளது.

    * உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

    * உதகை மருத்துவக்கல்லூரி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டாலும் எந்த பணிகளும் நடக்கவில்லை.

    * வாகனங்கள் செல்லாத இடங்களில் கூட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றுள்ளது.

    * வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    * குன்னூர், கோத்தகிரியில் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    * அழிவின் நிலையில் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    * இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

    * நீலகிரி மாவட்டம் கூடலூரில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும்.

    * பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

    * பழங்குடியின மக்களுக்கு 1,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய மந்திரி இப்படியா பேசுவது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் நடக்காது... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது.
    • விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

    3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.

    மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார்.

    இந்தநிலையில் இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார். இதற்கி டையே பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.

    அதேபோல் மீனவர்க ளுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். மேலும் இலங்கை சிறையில் வாடும் மற்ற தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்கள் மனதில் துளிர்த்துள்ளது.

    ×