என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
- கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது.
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆணவ படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவின் வீட்டிற்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
- 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
- தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார்.
சென்னை:
விஜய் சொல்லும் 1967, 1977-ம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது? த.வெ.க. கனவு, நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வெளியிடும் கூட்டத்தில் நேற்று பேசும் 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தல்களை போல, வருகிற 2026 தேர்தலும் அமைய போகிறது என்று பேசினார். அவரது பேச்சால் அந்த தேர்தல்களில் எந்த நடந்தது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதில் 1967-ம் ஆண்டு தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆனார். 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார். இந்த 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அந்த அடிப்படையில் தான் விஜய், 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்பதை அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:- ஒரு கட்சி தலைவர், தங்களது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்வது முதலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க தான். அந்த வகையில் தான் விஜய்யும் பேசி இருக்கிறார். எனவே அவரது பேச்சினை வைத்து த.வெ.க. ஆட்சியை பிடிக்குமா? என்று கேட்டால், அதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும்.
விஜய் சொன்ன, இந்த தேர்தல்களையும், 2026-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் 1967-ம் ஆண்டு தேர்தல் மூலம் முதலமைச்சர் ஆன அண்ணா, ஒரு பழுத்த அரசியல்வாதி. அவர் 1909-ம் ஆண்டு பிறந்து 1935-ம் ஆண்டு அதாவது தனது 26-வது வயதில் நீதி கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தில் பயணித்து 1949-ம் ஆண்டு, அதாவது தனது 40 வயதில் தி.மு.க.வை தொடங்கினார். தி.மு.க. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் பங்கேற்கவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் தான் பங்கேற்றது. முதல் முறை போட்டி என்பதால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றனர். பின்னர் 1962-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் 7 தொகுதிகளிலும், சட்டசபையில் 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளிலும், சட்டசபையில் 234 தொகுதிகளில் 137 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அண்ணா, முதலமைச்சர் ஆனார். அவர் தனது 58 வயதில் ஆட்சியை பிடித்தார்.
இதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியை கட்டமைத்தார். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் சட்டசபை தேர்தலில் 130 இடங்களிலும், பாராளுமன்றத்தில் 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க. என்ற சட்டை புதிது என்றாலும், அரசியலில் அவர் பழையவர். காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1953-ம் ஆண்டு அதாவது தனது 36 வயதில் தி.மு.க.வில் சேர்ந்தார். 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டு தேர்தல்களில் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து, பல தேர்தல்களை சந்தித்து ஆட்சியை பிடித்தனர். ஆனால் விஜய், அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் முழுமையாக முடிவடையவில்லை. அவர் சினிமாவின் உச்ச நடிகர். மக்களுக்கு தெரிந்த முகம். ஆனால் தேர்தல் வெற்றிக்கு இது மட்டும் போதாது. கட்சியின் கட்டமைப்பும், தேர்தலை எதிர்கொள்ளும் திறனும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றை த.வெ.க. இன்னும் முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை.
தேர்தலின்போது ஆட்சி என்பது அனைவருக்கும் கனவு. அது த.வெ.க.விற்கு நனவாகுமா? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எனவே விஜய், அந்த தேர்தலைகளை ஒப்பிடும்போது, அந்த தலைவர்கள் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதனையும், அவர்களது மக்கள் பணியினையும், அரசியல் அனுபவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர்.
சேலம்:
எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.
- கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது.
சென்னை:
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பிற்கு எஞ்சிய மழைப்பொழிவு பதிவாகும். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.
கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக கூடும்.
இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழகம் & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடிமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
- விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
- ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
- இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார்.
கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் சரவணனை வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
- ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..
- தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம்.
- தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரியாதைக்குரிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களால், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைச் சிறப்புடன் கையாண்டு, கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
- பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
- அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியை கவினின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை.
- இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.






