என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதே சமயத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. அந்த வகையில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றே கூறலாம். இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. மேலும் கனமழை பெய்யாததால் கரையோர பயிர்களான வாழை, அன்னாசி, தென்னை போன்றவை ஒரு சில இடங்களில் வாடிய நிலையில் காணப்பட்டன.
இந்தநிலையில் தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்த மழை நேற்று அதிகாலை முதல் பலத்த மழையாக பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. மதியம் முதல் கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையில் விடிய விடிய நீடித்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
சென்னை:
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. அதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
அதே நேரத்தில் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். ஏற்கனவே அதற்கு 12 சதவீத வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ரூ.2,500-க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும்போது ரூ.2,500-க்கு மேல் பில் வந்தால் பிரித்து, பிரித்து பில் போட சொல்கின்றனர். அதாவது ரூ.2,500 விலை வருவதால் ஜி.எஸ்.டி.யை குறைக்க இதுபோல் செய்கின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கு எல்லோரும் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரு ஆடையின் விலை மட்டும் ரூ.2,500 மேல் இருந்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம். மற்றப்படி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்றனர்.
அதே போலபஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்று ரூ.2,500-க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் தான் வரி.
- காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
- தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
காதல்... இரு மனங்கள் ஒன்றிணைவது காதல்.
புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலக்கட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லைமீறும் செயல்களில் களமிறங்குகிறார்கள், இன்றைய பல காதல் ஜோடிகள்.
இதற்காக கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பலனில்லை.
அந்தவகையில் ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பதாகை (பேனர்) ஒன்று வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என விசாரணை நடந்து வருகிறது.
- என்னுடைய அப்பா கிடைத்த படிப்பை படித்து ஒரு டிகிரி வாங்கினார்.
- அவரது மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என 2 டிகிரி படிக்க வைத்தார்.
சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டுப் போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது.
உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரெயில் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற, கை நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லாருடைய முன்பு கவுரவமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பதுதான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் நிறைய சாதனையாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது.
- பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தமிழகத்தின் காலை உணவு, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த கல்வியாண்டு மதல் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் என என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசின் கல்வி திட்டங்களை பாராட்டினர்.
இந்த நிலையில் திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சியை பாராட்டுவதற்காக தெலுங்கானா முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். அப்படியா தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி உயர்ந்திருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கை குறைந்துவிட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை அரசாங்கள் அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருப்பதாக, தவறான செய்தி வெளியீட்டு இந்த போட்டோ ஷூட், அதையெல்லாம் வெளிப்படுத்தி விளம்பர மாடல் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் தேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டை பார்த்து பெருமைப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு ஓரே மாதிரியான சமூக நீதி சிந்தனை உள்ளது. கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கை தெலங்கானாவில் உள்ளவர்களை மிகவும் ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது.
- மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம். 1000 ஆண்டுகளாக சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்டது. சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி இன்று வேகமாக நடைபோடுகிறது.
மாணவர்கள் படித்து முன்னேறும்போது அவர்களுடைய குடும்பமும் முன்னேறுகிறது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.
கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்வதற்காக தான் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே நம்முடைய இலக்கு. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது. உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கானூர்பட்டி, சர்க்கரைஆலை, குருங்கும், நாகப்பஉடையான்பட்டி, தங்கப்பஉடையான்பட்டி, தோழகிரிபட்டி, சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
- லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
மதுரை:
மதுரை மாநகராட்சி மேலக்கால் மெயின் ரோடு ராஜா கார்டன் பகுதியில் உள்ள குடிநீர் வால்வு, ஹெச்.எம்.எஸ்.காலனி மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணிகள், டி.பி.மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (26, 27) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வைகை தென்கரை மற்றும் வடகரை பகுதிகளான வார்டு எண். 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 மற்றும் 76, 77, 85, 89 ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.
இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






