என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
    • எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கூட்டணி கணக்குகளை 2026 ஆம் ஆண்டு மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்."

    "கடைசியாக ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வரமுடியாமல் ஆகிவிட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்கிறேன். அவரின் மனம் முழுமையாக இன்று நம்மோடு தான் இருக்கும்," என்று தெரிவித்தார். 

    • எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது.
    • அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

    சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?"

    "இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்."

    "இன்று நடக்கும் பிரச்சினைகள், கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக. இதையெல்லாம் நாம் படிக்கிறோம், பார்த்து, மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம்."

    "இவை எல்லாவற்றுக்குமான தீர்வு என்ன தெரியுமா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும், இதைத் தான் மிகவும் எளிமை என்று கூறினேன்."

    "இங்கு தினந்தோரும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்று எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்காக இதையெல்லாம் சில நேரங்களில் செய்ய வேண்டியதாகி விடுகிறது."

    "மக்கள் உரிமைகளுக்காகவும், அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன்," என்று தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு சென்னை வருகை.
    • நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணி.

    ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர்.

    புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.

    குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து, மத்திய குழு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதன்படி, ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்தியக் குழு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர், "ஃபெஞ்சல் புயல் மழை சேத பாதிப்புகளைக் கண்டறிந்து அறிக்கையை விரைவாக மத்திய அரசிடம் வழங்கி, தமிழ்நாட்டுக்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுங்கள்" என்றார்.

    • சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
    • நூல் வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஒரு வேளை திரு. அம்பேத்கர் இன்று உயிருடன் நம்முடன் இருந்தால் அவர் என்ன நினைப்பார். இன்றைய நம் இந்தியாவை நினைத்து அவர் வெட்கப்படுவாரா, பெருமைப்படுவாரா. ஒருவேளை வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார். இன்று நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும்."

    "அதற்கான பொறுப்பு, கடமை நம் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த பொறுப்போடும், கடமையோடும் தான் இதை கூறிக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆனி வேர் சுதந்திரமான, நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தான் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றியது."

    "அது அமைய தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் மட்டும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே என் வலிமையான கோரிக்கை. ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள். அன்று தான் நம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உரிமைகள் பிறந்த தினம். இதனால் அந்த தேதியை இந்தியர்களின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள். இதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்.
    • நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்.

    சென்னையில் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அத்தனை சக்திகளும் தடையாக இருந்த போது 100 ஆண்டுகளுக்கு முன்னரே நியூ யார்க் சென்று சாதித்தவர் அம்பேத்கர் என்று தெரிவித்தார். மேலும் எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்னைக்கும் நிறைய பேரிடம் உங்களுக்கு பிடித்த சுற்றுலா இடம் எது என்றால் நியூ யார்க் என்று தான் கூறுவார்கள். ஆனால் நூறு ஆண்டுக்கு முன்பே நியூ யார்க் சென்று உலக புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்று சாதித்த அசாத்தியமானவர் இருந்தார். அவர் எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்."

    "அன்றைக்கு அந்த மாணவரிடம், நீ இந்த சாதியில் பிறந்திருக்கிறாய் உனக்கெல்லாம் படிக்க தகுதியில்ல, நீயெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவர் பிறந்த சமூகமே அவரை தடுத்தது. அதைமீறி பள்ளிக்கூடம் சென்றாலும் சக மாணவர்களோடு உட்கார்ந்து படிக்க அவருக்கு அனுமதியில்லை. தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கூட இல்லை. அப்படி அத்தனை சக்திகள் அவருக்கு எதிராக இருந்தது."

    "ஆனால் ஒரே சக்தி மட்டும் தான் நீ தொடர்ந்து படி என்று கூறிக் கொண்டே இருந்தது. அது தான் அந்த மாணவருக்குள் இருந்த வைராக்கியம். எப்படி அந்த சின்ன வயதில் அந்த மாணவருக்கு அந்த வைராக்கியம் வந்தது என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது."

    "எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் யாரும் இப்படியொரு மாற்றத்தை கண்டிருக்க மாட்டார்கள். அந்த மாணவர் வேறு யாருமில்லை, நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான். வன்மத்தை மட்டுமே காட்டிய இந்த சமூகத்திற்கு திரும்பி அவர் என்ன செய்தார் என்பதை படித்து பார்க்கும் போது, அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது."

    "பிறப்பால் நாம் அனைவரும் சமம், நீ எந்த சாதியில் பிறந்து இருந்தாலும், எந்த மதத்தை நீ பின்பற்றினாலும், சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் நம் அரசியல் சாசனத்தை வழங்கி நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்."

    "இன்னைக்கு வெளியாகும் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற இந்த புத்தகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமே இருக்கிறது. அதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது அவர் எழுதிய சுயசரிதை தான். அதற்கு தலைப்பு "வெயிடிங் ஃபார் ஏ விசா" என்று வைத்திருந்தார். அதில் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்கள், அவரை பாதித்த விஷயங்கள் என ஆறு சம்பவங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் இரு விஷயங்கள் என்னை பாதித்தது," என்று தெரிவித்தார்.

    • "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.

    தமிழகத்தின் வெற்றிக்கு பெரியார் கொள்கைகளே காரணம். அப்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றியவர் திருமாவளவன்.

    அம்பேத்கர் பற்றி தலித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தது போய், தற்போது தலித் அல்லாத விஜய்யும் பேசுகிறார்.

    புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாகக்கூடிய மேடையாக இது இருக்கும்.

    இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக இருந்தபோது முதல்முறையாக தமிழகம் வென்று காட்டியது.

    மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.

    2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது.

    கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை.

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்.

    சாதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் அரசியல் தான் இங்கு பெரிய பிரச்சினை.

    தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீதம் தான் ஓட்டு, இங்கு மத பெரும்பான்மைக்கு ஆதரவு கிடையாது. மத பெரும்பாபன்மை என்று பாஜகவை விமர்சிக்கும் நாம், அதை தான் ஜாதியை வைத்து இங்கு செய்கிறோம்.

    மலம் கலந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    25 சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா ? இதை கேட்டால் சங்கி என்று கூறுவார்கள்.

    சாதியை ஒழிப்பதற்காக தான் திருமாவளவனோடு நான் கைகோர்த்தேன்.

    பெரியால் கொள்கையும், அம்பேத்கர் கொள்கையும் இணைந்து பயணித்தால் புதிய மாற்றம் ஏற்படும்.

    ஏழைகள் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் நகரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
    • நூல் வெளியீட்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மேடையில் ஏறினர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்று விகடன் குழும நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் உரையாற்றினார். அதன்பிறகு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

     


    இதைத் தொடர்ந்து வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், வி.சி.க. கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூலை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட அதன் முதல் பதிப்பை எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்ப்டே பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி கே. சந்துரு இரண்டாவது பிரதியை பெற்றுக் கொள்ள, அடுத்த பிரதியை ஆதவ் அர்ஜூனா மற்றும் விகடன் குழும நிர்வாக தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு சென்னை வருகை.
    • நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணி.

    ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர்.

    புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.

    குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து, மத்திய குழு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    • த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கலந்து கொள்ள முன்கூட்டியே அரங்கிற்கு வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய், விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலையுடன் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.
    • மத்திய குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.

    ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர்.

    புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.

    குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    மத்திய குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.

    அதற்கு முன்பு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "இந்திய அரசியலமைப்பின் பிரதான சிற்பி அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

    சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் கண்ட கனவினை நிறைவேற்ற பாடு படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை" என்றார்.

    இதைதொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "

    கங்கை இங்கு வரவேண்டும் குமரி கடலை தொட வேண்டும் என்பதற்கேற்ப கங்கை நதியை குமரி கடலில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கி உள்ளேன்.

    இந்தத் திட்டம் விவசாயத்திற்கு பெரிதும் உதவும். மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளை தடுக்கவும் இது வழிவகை செய்யும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பெரும் லாபத்தினையும் ஈட்டி தரும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலை குமரிக்கடலை தொடும்" என்றார்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோடு, தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றனர்.

    இதையடுத்து ரமேசின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவினாசியை சேர்ந்த சையது இர்பான் (24) என்பவர் தனது நண்பர் ஜானகிராமன் மூலம் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து ரமேசை கொலை செய்ய கூறியதும், இதைத்தொடர்ந்து கூலிப்படை மூலம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சையது இர்பான், ஜானகி ராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ரமேஷின் மனைவி விஜயலட்சுமி (40) கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ், மனைவி விஜயலட்சுமியின் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் பணம், தொழில் என்று எப்போதும் இருந்துள்ளார். பாசமாக இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வரும் சையது இர்பான் கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று ஸ்நாக்ஸ்கள் வாங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகினார். தினமும் செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

    ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் 2 பேரின் கள்ளக்காதல் விவகாரம் ரமேஷிற்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இது குறித்து இர்பானிடம் தெரிவிக்கவே, அவர் தனது நண்பர் ஜானகிராமன் இருக்கிறார். அவர் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என்று 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பணம் செலவாகும் என இர்பான் கேட்கவே, விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை இர்பானிடம் கொடுத்துள்ளார். அவர் அவினாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அதில் ரூ.4 லட்சத்தை முதல் கட்டமாக ஜானகி ராமன் மூலம் கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை வழக்கு செலவுக்கு செலவழிக்க வைத்திருந்தார். ஜானகிராமன் 5 பேர் அடங்கிய கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். கொலை நடந்த அன்று ரமேஷ், வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு சென்ற தகவலை விஜயலட்சுமி, இர்பானிடம் கூறவே, கூலிப்படையினர், அங்கு சென்று ரமேசை வெட்டிக்கொன்றுள்ளனர். இர்பானுக்கும், ரமேசுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திய போது இந்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×