

விழாவில் கலந்து கொள்ள முன்கூட்டியே அரங்கிற்கு வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய், விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலையுடன் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.