என் மலர்
பஞ்சாப்
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
இது மட்டுமின்றி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், காவல் துறை மற்றும் சிறப்பு படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் அரசியல் தலைவர்கள், முப்படை வீரர், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு அட்டாரி- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.
- போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், பயிற்சியாளர் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
- பஞ்சாப் சென்றுள்ள தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்புடன் உள்ளனர்.
தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.
போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்ட போது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தமிழக பயிற்சியாளர் தாக்கப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேக்நாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் பாண்டியன் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. பயிற்சியாளர் விசாரணைக்கு மட்டுமே அழைத்து செல்லப்பட்டார்.
பஞ்சாப் சென்றுள்ள தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் போலீஸ் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது.
- தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்ததால், தற்போது பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு வழங்கி வரும் பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்ப பெற்றுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில் "பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் வருவதாக அவ்வப்போது எங்களுக்கு தகவல் வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். டெல்லி போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பஞ்சாப் மாநில போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளோம்.
எங்களுடைய கவலையை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். டெல்லி போலீசுடன் எங்களுடைய தகவலை பகிர்ந்து கொள்வோம்" என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாஃப் உள்பட 63 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பஞ்சாப் மாநில மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஹதுர்கே சாலையில் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணும், அவரது 3 மகள்களும் அங்கிருந்து ஆடைகளை திருடியதாக தொழிற்சாலை ஊழியர்கள் சந்தேகப்பட்டனர். அதன்பேரில் அந்த பெண்ணையும், அவரின் 3 மகள்களையும் பிடித்து விசாரணை நடத்திய சிலர் அவர்களின் முகத்தில் கருப்பு புள்ளிகள் குத்தியதோடு நான் ஒரு திருடன், என் தவறை ஒப்புக்கொள்கிறேன் என்று எழுதப்பட்ட பலகைகளை அந்த பெண் மற்றும் அவரின் 3 மகள்கள் மீதும் அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொழிற்சாலை உரிமையாளரான பர்விந்தர்சிங், மேலாளர் மன்பிரீத்சிங் மற்றும் முகமது கைஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த செயலை குழந்தைகள் உரிமை மீறல் என்று கூறியுள்ள ஆணைய தலைவர் கன்வர்தீப்சிங், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைப்போல பஞ்சாப் மாநில மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சிகிச்சை பெற ஜக்ஜித் சிங் சம்மதம் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பிப்ரவரி 14-ம் தேதி சந்திப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 54 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. சந்திப்பு குறித்து மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, சிகிச்சை பெற ஜக்ஜித் சிங் சம்மதம் தெரிவித்தார்.
எனினும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று மற்றொரு விவசாய சங்க தலைவரான சுக்ஜித் சிங் ஹர்டோஜாண்ட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜக்ஜித் சிங் தலேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விவசாயிகள் வெளியிட்டனர்.
- ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- ஒரு குழு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு. மற்றொரு குழு டெல்லி நோக்கி பேரணி நடத்த முடிவு.
101 விவசாயிகளை கொண்ட குழு வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் அரியானா எல்லையில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணியை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலைக்கு சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைளை ஏற்க வேணடும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இந்த பேரணியை தொடங்குகின்றனர். கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் இதை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட எல்லைகளில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
மத்திய அரசை கண்டித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய மூன்று முறை ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி செல்ல முயன்றனர். ஆனால் அரியானாவில் பாதுகாப்புப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்றோடு 52-வது நாளை எட்டியுள்ளது. அவருக்கு ஆதரவாக நேற்று கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கத்தின் 111 விவசாயிகள் கொண்ட குழு கனௌரி எல்லை அருகே அரியானா பக்கத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் 101 விவசாயிகள் கொண்ட குழு டெல்லி நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. மத்திய அரசு எங்களுடன் பேசத் தயாராகவில்லை. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
சண்டிகர்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் யார் என்ற விவரத்தை அணி நிர்வாகம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
ஐ.பி.எல். வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2-வது வீரர் என்ற பெருமையை பெற்ற ஷ்ரேயாஸ் அய்யர், பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அவரின் நகைக்கடைக்கு வெளியே வைத்து சிமர்பால் சிங் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது அதில் பதிவாகி உள்ளது.
- குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்டு, துப்பாக்கியுடன் ஜெய்பால் ஜூவல்லர்ஸ் கடைக்கு ஜஸ்தீப் திரும்பினார்.
பஞ்சாபில் தொழில் தகராறில் நகைக் கடை முதலாளி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டாலிவேல் சவுக்கில் தகராறில் நகைக்கடை உரிமையாளர் சிமர்பால் சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அவரின் நகைக்கடைக்கு வெளியே வைத்து சிமர்பால் சிங் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது அதில் பதிவாகி உள்ளது.
ஜெய்பால் ஜூவல்லர்ஸ் உரிமையாளராக இருந்த சிமர்பால் சிங்கை தங்க பேரம் தொடர்பாக மற்றொரு நகை வியாபாரியான ஜஸ்தீப் சிங் சான் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அணுகியுள்ளனர்.
கடையில் வைத்து சிமர்பால் மற்றும் ஜஸ்தீப் குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஜஸ்தீப் தனது குடும்பத்தினருடன் கடையை விட்டு வெளியேறினார்.
குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்டு, துப்பாக்கியுடன் ஜெய்பால் ஜூவல்லர்ஸ் கடைக்கு திரும்பிய ஜஸ்தீப், சிமர்பால் சிங்கின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.
சிமர்பால் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தலையில் குண்டு காயம் காரணமாக இறந்தார்.
தங்கம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் உறுதி செய்தனர். தப்பியோடியஜெஸ்தீப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய் ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோவை மன்தீப் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
- இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விலங்குகளை துன்புறுத்தும் விதமாக ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மன்தீப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மன்தீப் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராமில், கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய்கள் கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக யுவி என்ற நபர், விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மன்தீப் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த நாயை போலீசார் மீட்டனர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி கை தவறுதலாக பட்டதில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குர்பிரீத் பாசி கோகி, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, தவறுதலாக சுடப்பட்டதில் காயமடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குர்பிரீத் பாசி கோகி உடல் டி.எம்.சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்த அவரை சக விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- டிசம்பர் 18 அன்று, மற்றொரு விவசாயி ரஞ்சோத் சிங் அதே போராட்ட தளத்தில் [ஷம்பு எல்லையில்] தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் அவர்களை தலைநகர் டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கடந்த மூன்று வாரங்களில் அதே இடத்தில் நடந்த இரண்டாவது தற்கொலை.
பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பஹுவிந்தைச் சேர்ந்த ரேஷம் சிங் ஒரு வருட கால போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் நேற்று விபரீத முடிவை எடுத்துளளார். விஷம் குடித்த அவரை சக விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததால் அவர் விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ரேஷம் சிங்கின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் , உறவினர்களுக்கு வேலை வாய்ப்பும், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தும் அரசு அறிவிக்கும்வரை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறாது. இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயியின் உடல் பிணவறையில் தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக டிசம்பர் 18 அன்று, மற்றொரு விவசாயி ரஞ்சோத் சிங் அதே போராட்ட தளத்தில் [ஷம்பு எல்லையில்] தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொருபுறம் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது போராட்டம் 46 வது நாளை எட்டியுள்ள நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே குடியரசு தினத்தன்று விவசாயிகள் நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.
- 44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
- உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பை அறிவித்துள்ளனர்.
44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமான உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளுக்கு இடையே விவசாயிகள் கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் டெல்லி நோக்கி பலமுறை செல்ல முயன்றனர். ஆனால் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்தனர். எனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் முகாமிட்டுள்ளனர்.

விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடத்த 2021 செப்டம்பரில் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனமயமாக்க இந்த சட்டங்கள் அவசியம் என்று அரசு கூறினாலும் , இந்த சீர்திருத்தங்கள் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்கும்படி விவசாயிகள் தள்ளப்படுவதாக கூறி அவர்கள் போராட்டத்தை துவங்கினர்.
அவர்களின் ஒரு வருட போராட்டத்தின் பலனாக நவம்பர் 2021 இல் விவசாய சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. 2021 குடியரசு தினத்தை ஒட்டியும் செங்கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீஸ் உடனான மோதலில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.






