என் மலர்
பஞ்சாப்
- என் பெற்றோர் 2 ஏக்கர் நிலங்களை விற்று, உறவினர்களிடமிருந்து பணம் கடன் வாங்கினார்கள்.
- ஏஜெண்டுகளால் முதலில் நான் மலேசியாவுக்குச் அழைத்துச்செல்லப்பட்டேன்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் நேற்று முன் தினமும் அமெரிக்க போர் விமானம் மூலம் நாடு கடத்தபட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.

அவர்களில் பஞ்சாபை சேர்ந்த சவுரவ் என்ற இளைஞர் தனது நிலை குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது, "ஜனவரி 27 அன்று நான் அமெரிக்காவிற்குள் நுழைந்தேன். அமெரிக்காவிற்குள் நுழைந்த 2-3 மணி நேரத்திற்குள் நானும் என்னுடன் இருதந்வர்களும் போலீசாரால் பிடிக்கப்பட்டோம்.
அவர்கள் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், 2-3 மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாங்கள் 15-18 நாட்கள் முகாமில் வைக்கப்பட்டோம்.
எங்கள் பேச்சைக் யாரும் பொருட்படுதவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களை வேறு முகாமுக்கு மாற்றுவதாகக் கூறப்பட்டது. நாங்கள் விமானத்தில் ஏறியதும், எங்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறப்பட்டது.
அங்கு செல்ல கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் செலவிட்டேன். இதற்காக என் பெற்றோர் 2 ஏக்கர் நிலங்களை விற்று, உறவினர்களிடமிருந்து பணம் கடன் வாங்கினார்கள். ஆனால் அதெல்லாம் சில மணி நேரங்களில் வீணானது. அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தனது பயணம் குறித்து விவரித்த சவுரப், நான் டிசம்பர் 17 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினேன். ஏஜெண்டுகளால் முதலில் நான் மலேசியாவுக்குச் அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு நான் ஒரு வாரம் தங்கினேன்.
பின்னர் அடுத்த விமானத்தில் மீண்டும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டேன். அங்கு நான் 10 நாட்கள் தங்கினேன். மும்பையிலிருந்து, நான் ஆம்ஸ்டர்டாமுக்கும், பின்னர் பனாமாவிலிருந்து தபச்சுலாவுக்கும்(Tapachula) அங்கிருந்து பின்னர் மெக்சிகோ நகரத்திற்கும் அழைத்துச்செல்லப்பட்டேன்.
மெக்சிகோ நகரத்திலிருந்து எல்லையைக் கடக்க எங்களுக்கு 3-4 நாட்கள் ஆனது.. பிடிபட்ட பின் நாங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்தோம்.
ஆனால் எங்கள் முறையீடுகளை யாரும் கேட்கவில்லை. எங்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் முகாமில் இருந்தபோது எங்கள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எங்களது குடும்பத்தை தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
நேற்று மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையும், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
3-வது கட்டமாக நேற்று அமிர்தசரஸ் வந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
இதுதொடர்பாக, அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்தியர்களின் 3வது குழு நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். நேற்று வந்த விமானத்தில் 112 பேர் வந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் டயப்பர்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம். எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து இருந்தோம். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
- முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
- இரண்டாவது கட்டமாக 116 இந்தியர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
சண்டிகர்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.
அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இன்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையம், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
- கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அவர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்ததை இந்திய எதிர்க்கட்சிகள் கண்டித்தன. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி இந்திய சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களும் கால்களில் சங்கிலி இடப்பட்டு, கைவிலங்கு பூட்டி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள குராலா கலான் கிராமத்தைச் தல்ஜித் சிங் என்பவர் நாடுகடத்தப்பட்ட 116 பேரில் ஒருவர். தங்களை சங்கிலியிட்டு அழைத்துவந்ததை இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் அனுப்பி வைப்பதாக கூறி தன்னை, சட்டவிரோதமாக டாங்கி ரூட் வழியாக ஒரு முகவர் ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, நாடுகடத்தப்பட்ட 116 பேரில், பாட்டியாலா மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரும் அடங்குவர். அவர்கள் வருவதை அறிந்து பாட்டியாலா போலீஸ் விமான நிலையத்தில் காத்திருந்தது. ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கு வைத்தே அவர்களை போலீஸ் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இவர்கள், சட்டவிரோதமாக எல்லை கடந்து தப்பித்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
- முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
- அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
சண்டிகர்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.
அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒருவர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவிய இவர்களது பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
- சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது.
- 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரை இறங்கியது. இதையடுத்து அங்கிருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது. 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.
இந்த நிலையில், விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* முதல் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இப்போது, இரண்டாவது விமானம் இங்கு தரையிறங்கும். விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.
* பிரதமர் மோடியும்- டிரம்பும் சந்தித்த நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டிப்போட்டிருக்க வேண்டும். டிரம்ப் கொடுத்த பரிசு இதுதானா?
* லாகூர் அமிர்தசரஸிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில் உள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான், அமிர்தசரஸ் அருகில் உள்ளது என்று தெரிந்தும், இந்த விமானங்களை இங்கே தரையிறக்க மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது? இது என்ன வகையான வெளியுறவுக் கொள்கை? விமானங்களை தேசிய தலைநகரில் தரையிறக்க வேண்டும் அங்கிருந்து நம் மக்களை அழைத்து வருவோம்...
* பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோத குடியேறிகள் என்று சித்தரிக்க வேண்டுமென்றே அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பா.ஜ.க. எப்போதும் பஞ்சாபை அவதூறு செய்ய சதி செய்கிறது. அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிப்பதில்லை, அது அதற்கு ஏற்றதல்ல என்று கூறி, இப்போது அமெரிக்காவிலிருந்து விமானங்கள் ஏன் வருகின்றன?...
* விமானத்தை டெல்லி அல்லது அகமதாபாத்தில் தரையிறக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
முன்னதாக, டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக பதிலடி.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியது. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியின் 30 எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான மல்விந்தர் சிங் கங் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மல்விந்தர் சிங் கங் கூறியதாவது:-
அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களும் உங்களுடன் தொடர்பில் உள்ளனரா?. அவர்கள் இருந்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அபோஹர் எம.எல்.ஏ. சந்தீப் ஜகார் எங்கே? ராஜ்குமார் சபேவால் (தற்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்த வெளியேறினார்) கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்?.
பிரதாப் சிங் பஜ்வாலின் சொந்த சகோதரர் பெடாஜங் பஜ்வா பாஜகவில் இணைந்தார். அதைக்கூட அவரால் தடுக்கமுடியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர்கள், எம.எல்.ஏ-க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குறித்து பாஜ்வா கவலைப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு மல்விந்தர் சிங் கங் தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான்.
- பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோல்வியை தழுவினர். 10 வருடங்களாக ஆம் ஆத்மி வசம் இருந்த டெல்லி தற்போது கைநழுவியுள்ளது.
இதற்கிடையே பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்து வரும் ஆம் ஆத்மியின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் விரிசல் ஏற்படக்கூடும் என்று பஜ்வா கணித்ததுள்ளார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜக பக்கம் சாய்ந்ததை போன்ற முடிவை, பகவந்த் மான் தனது அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கக்கூடும் என்று மறைமுகமாக பஜ்வா தெரிவித்துள்ளார்.
"இந்த மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான் ஆவார்" என்று பஜ்வா கூறினார். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் - பகவந்த் மான் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து டெல்லி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- வழக்கில் சாட்சியம் அளிக்க சோனுவை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்பினர்.
- அவர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
லூதியானா:
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா ஐகோர்ட் நீதிபதி ராமன்பிரீத் கவுர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
லூதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா. இவர் மோகித் சுக்லா என்பவர்மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், அவர் போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு லூதியானா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சோனு சூட்டுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாத நிலையில், சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சோனு சூட்டுக்கு முறைப்படி சம்மன் அல்லது வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்துகொள்ளத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டை கைதுசெய்து ஆஜர்படுத்தும்படி லூதியானா கோர்ட் உத்தரவிட்டது.
- இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
- 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்க முடிவு.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதற்கிடையே முதற்கட்டமாக 205 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் வரும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கசென்டுற்கொண்டிருந்தனர்.
- ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார்.
பஞ்சாபில் இன்று காலை லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாபில் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை வேனில் சென்றுகொண்டிருந்தனர்.
பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராம் அருகே காலை 7.45 மணியளவில் வாகனம் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் செல்போனுடன் சேர்த்து அந்த பெண்ணையும் இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், ஒரு இளம்பெண் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இதை நோட்டமிட்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, போனுடன் அந்த பெண்ணையும் சேர்த்து இழுக்கிறான்.
அப்போதும் அந்த பெண் செல்போனை விடாமல் பிடித்து கொள்ள திருடன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை இழுத்து செல்கிறான். பின்னர் அந்த பெண்ணை விட்டுவிட்டான். அதன் பிறகு பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.






