என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்"

    • இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
    • 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்க முடிவு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதற்கிடையே முதற்கட்டமாக 205 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    விமானத்தில் வரும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வழக்கு விசாரணை இன்றி அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #USmigrants #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோரின் விசா நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார்.

    அதேபோல், சட்ட விரோதமாக அந்நாட்டிற்குள் அகதிகளாக நுழைபவர்களை தடுத்து நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    புதிய குடியேற்ற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள டிரம்ப், எல்லைகளின் வழியே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை தனியாக பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தார். ஆனால், பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அகதிகள் குடியேற்றம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், ‘‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகளின் தலையீடு ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடனடியாக  திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை நாம் அனுமதிக்க முடியாது.

    மேலும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அமெரிக்காவை துண்டாட முயற்சி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வலிமையான எல்லைகளே குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கும், புகலிடம் கோரி அமெரிக்காவில் தஞ்சம் அடைபவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் டிரம்ப் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து வெள்ளை மாளிகை, இன்னமும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #USmigrants #DonaldTrump 
    ×