என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.
    • ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர்.

    புனே:

    மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கட்சியின் 25-வது நிறுவன தினம் புனேயில் உள்ள அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    ஆட்சி அதிகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி கைகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களின் ஆணை அவர்களுக்கு சாதகமாக இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற இடங்களை ஒப்பிடுகையில், இந்த முறை அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அவர்களின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.

    ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறவில்லை என்றால், அவர்கள் பெரும்பான்மையை பெறுவது கடினமாகிவிடும்.

    கடந்த 5 ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர். நாட்டை பற்றி பரந்த கண்ணோட்டத்தில் அவர்கள் சிந்திக்கவில்லை. அதிகாரத்தை மையப்படுத்த அவர்கள் விரும்பினர்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்கள் நிலையை உணர்ந்து அதிகாரம் ஒன்று அல்லது 2 பேரின் கைகளில் குவிவதை தடுக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்.

    முழு அதிகார பரவல் நடக்கவில்லை என்றாலும், அதிகார பரவலாக்கத்தின் பாதையில் செல்லும் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக செயல்முறையை தொடங்கி உள்ளனர்.

    தற்போது மராட்டிய சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றுவதும், உழைப்பதும் என்னுடைய மற்றும் உங்களின் கூட்டு பொறுப்பாகும். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகாரம் உங்களிடம் இருக்கும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
    • மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.

    மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    • கோடைகால வெப்ப மண்டல விருந்து என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது இந்த உணவு தயாரிப்பை விமர்சனம் செய்துள்ளனர்.
    • பிரியாணி மற்றும் மாம்பழத்திற்கு நீதி வழங்குங்கள் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

    சமூக வலைதளங்களில் சமையல் குறிப்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகளவில் பகிரப்படுகிறது. சில பெண்கள் வித்தியாசமான உணவு தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில உணவு வகைகள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது.

    அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் மாம்பழ பிரியாணி தயாரிப்பது குறித்து வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கனவே பார்பி மற்றும் ஸ்பைடர் மேன் பிரியாணி வகைகளை தயாரித்து வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். அவை ஏற்கனவே சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோவிலும் ஒரு பானையில் மஞ்சள் நிற பிரியாணியுடன் அவர் நிற்கிறார்.

    பின்னர் பிரியாணியில் துண்டுகளாக்கப்பட்ட மாம்பழத்தை சேர்த்து மாம்பழ பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. கோடைகால வெப்ப மண்டல விருந்து என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது இந்த உணவு தயாரிப்பை விமர்சனம் செய்துள்ளனர்.

    பிரியாணி மற்றும் மாம்பழத்திற்கு நீதி வழங்குங்கள் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இந்த உணவு பரிசோதனை பீட்சாவுடன் அன்னாசி பழம் சாப்பிடுவதை போன்றது என பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சில பயனர்கள் ஹீனாவின் இந்த புதிய தயாரிப்பை ஆதரித்து பதிவிட்டனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
    • மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை

    மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    • இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சிறிது நேரத்தில் பெரும் விபத்துக்கு வழிவகுத்து இருக்கும்.

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு விமானம் மற்றொரு விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இச்சம்பவம் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் சனிக்கிழமை அதிகாலையில் இந்தோரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் 6E 5053 ஓடுபாதையில் தரையிறங்கியது, அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் AI657 திருவனந்தபுரம் சர்வதேசத்திற்கு புறப்படும் பணியில் இருந்தது விமான நிலையம்.

    விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான நெருங்கிய நேரம் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியது, இது சிறிது நேரத்தில் பெரும் விபத்துக்கு வழிவகுத்து இருக்கும். ஆனால் எந்தவித விபத்து ஏற்படவில்லை. இந்த வீடியோ வைரலால் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
    • இதற்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மாநில பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து கட்சித் தலைவராகத் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். உணர்ச்சிகள் அல்லது தேர்தல் பின்னடைவுக்கான சோகத்தால் நான் தூண்டப்படவில்லை.

    ஆளும் மகாயுதி கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியாக போராடுவேன் என வெளியான தகவல் வெறும் புரளி.

    நான் எங்கும் ஓடிப்போக மாட்டேன். நான் மீண்டும் பலத்துடன் போராடுவேன். சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான் என தெரிவித்தார்.

    • பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது.
    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.

    நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன.

    பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

    இந்த நிலையில், நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பதில் அளித்த என்.டி.ஏ., 'என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பேசிய அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், "நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. நீட் தேர்வு, மாணவர்களை வஞ்சிப்பதாகவும், மகாராஷ்டிரா மாணவர்களை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

    "நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

    • கருத்துக் கணிப்பு அடுத்த நாளில் மும்பை பங்குச் சந்தை தாறுமாறாக எகிறியது.
    • பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியதால் வாக்கு எண்ணிக்கை நாளில் தலைகீழாக இறங்கியது.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்போது மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.

    நிலையான ஆட்சி அமைகிறதா? நிலையறற ஆட்சி அமைகிறதா? என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டார்கள் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள்.

    அதேபோன்றுதான் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பிரதமர் மோடி மீண்டும் பதவி வகிப்பார் என தகவல் வெளியானது.

    இதனால் திங்கட்கிழமை (ஜூன் 3-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் தாறுமாறுமாக ஏறி வர்த்தகம் ஆனது.

    வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை வர்த்தகம் 73,961.31 புள்ளிகளுடன் முடிவடைந்தது. திங்கட்கிழமை காலை அதாவது ஜூன் 3-ந்தேதி காலை சுமார் 1600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் தொடங்கியது. அன்றைய தினம் 46,468.78 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டது.

    செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும். பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை நிலவியதால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் பாதாளத்திற்கு சென்றது. அன்றைய தினம் சுமார் 4 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    76468.78-ல் இருந்து 72079.05-க்கு இறங்கியதால் முதலீட்டார்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர் எனத் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய மோசடி. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

    பின்னர் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளுடன் நிலையான ஆட்சி அமைக்கப் போவதாகவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் எனவும் உறுதியான தகவல் வெளியானது.

    அத்துடன் ஆர்பிஐ வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்படாது. இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் எனத் தெரிவித்தது. இதனால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்ட்டது.

    5-ந்தேதி 3 சதவீதம் உயர்ந்து 74,382 புள்ளியுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றும் ஏறுமுகமாக இருந்து 75,074 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை 75,031 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் ஏறிக்கொண்டு இருந்தது. இறுதியாக 76,606 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 76,790.63 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிலான உச்சமாகும்.

    • பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
    • இதனால் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றார் பட்னாவிஸ்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்து ஆலோசிக்க அம்மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜ.க. மேலிடம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகாராஷ்டிரா அரசியலில் வில்லன் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம்.

    பட்னாவிஸ் பல குடும்பங்களை அழித்துள்ளார் மற்றும் அரசியல் பழிவாங்கலை நாடியுள்ளார்.

    மோடி வலுக்கட்டாயமாக ஆட்சி அமைக்க முயன்றால் அது நீடிக்காது என என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

    மோடிக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு மாற்று வழி தேடும் முயற்சியில் சங்கத்தின் உயர்மட்ட தலைமை செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • மும்பையில் நேற்று காலை பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது.
    • மும்பை, தானே மற்றும் ராய்காட் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்க உள்ளது. மும்பையில் நேற்று காலை பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது. நேற்று பெய்த பலத்த மழையால் அங்கு நிலவி வந்த கடுமையான வெப்பம் நீங்கியது.

    மேலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு, குளிர்ச்சியான சூழல் நிலவியது. தானே மாவட்டத்திலும் மழை பெய்தது. நேற்று தொடங்கிய மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் மும்பை, தானே மற்றும் ராய்காட் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 400 இடங்களை இலக்காக கொண்டு பாஜக களம் கண்டது.
    • 400 இடங்களை இலக்காக கொண்டு பாஜக களம் கண்டது.

    மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடிக்க முடியவில்லை.

    தேர்தலுக்கு முன்னதாக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு பாஜக களம் இறங்கியது. தங்களை ஒரு தோற்கடிக்க முடியாத கட்சியாக பாஜக கருதியது. பாஜக-வை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாகியது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வால் தனித்து பெரும்பான்மை பெற முடியாமல் போனது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவு, பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதை காட்டுகிறது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் "பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. பாஜக-வை தோற்கடிக்க முடியாது என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்களை உத்தவ் தாக்கரே சந்தித்து வருகிறார். அவர்கள் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. குறைந்த இடங்களில் வென்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.
    • புதிய வியூகம் தயாரித்து மக்கள் மத்தியில் செல்வோம் என்றார் பட்னாவிஸ்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது. எனவே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைய வாய்ப்புள்ளது.

    தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக கணிசமான இடங்களை இழந்துள்ளது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. குறைந்த இடங்களில் வென்றதற்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் கட்சிக்கு தலைமை தாங்கினேன். வரும் தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்காக என்னை அரசு பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பா.ஜ.க. மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    மகாராஷ்டிராவில் நடந்த இந்த தோல்வியால் எங்கள் இடங்கள் குறைந்துவிட்டன. இதற்கு முழு பொறுப்பும் என்னுடையது. இந்தப் பொறுப்பை ஏற்று குறை எதுவோ அதை நிறைவேற்ற முயற்சிப்பேன். நான் ஓடிப்போகும் ஆள் இல்லை. புதிய வியூகம் தயாரிப்போம், புதிய வியூகம் தயாரித்து மக்கள் மத்தியில் செல்வோம் என தெரிவித்தார்.

    ×