என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
    • போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது.

    பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் நிங் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் நடைபெற்ற சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலையில் வெடிபொருள் தயாரிப்புப் பிரிவின் தொடக்க விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராணுவத் தளவாட உற்பத்தி என்பது ஒருகாலத்தில் பொதுத்துறையை மட்டுமே சார்ந்திருந்தது. தற்போது ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பை அளிக்கிறது.

    மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. வெடிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுகிறது. வெடிபொருள் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்காகும்.

    போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. எந்த வகையான போராக இருந்தாலும் தனியார் துறையின் வலுவான பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவையே இப்போதைய தேவையாகும்.

    பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 50% அளவுக்குத் தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.30,000 கோடியாகும்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்று மதி தற்போது ரூ.25,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதை வரும் 2029 - 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று தெரிவித்தார். 

    • மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம்.
    • எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரசுக்கு 4 மாநகராட்சி கிடைக்கிறது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க. அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், எம்.என்.எஸ்-6 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு-24 இடங்களும் கிடைத்தன. அகில இந்திய மஜ்லிஸ்-8, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-3, சமாஜ்வாடி-2, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-1 இடங்களை கைப்பற்றின.

    பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டால் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. மேயர் பதவியை பெறும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க. துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மேயர் பதவி கனவுக்கு ஷிண்டே முட்டுக்கட்டை போடுகிறார்.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தானே மாநகராட்சியில் 75 இடங்களை வென்று பலத்தை நிரூபித்துள்ள ஷிண்டே மும்பையில் சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளார்.

    இது தொடர்பாக ஷிண்டே ஆதரவாளர்கள் கூறும்போது, பா.ஜ.க.விடம் மேயரை நியமிக்க போதுமான இடங்கள் இல்லை. இதனால் அந்த பதவியை பகிர்ந்து அளிக்க வேண்டும். நிலைக்குழு தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய குழு பதவிகளையும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஷிண்டே கட்சியின் கவுன்சிலர்கள் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தங்கள் கட்சியின் கவுன்சிலர்கள் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் ஏக்நாத் ஷிண்டே அவர்களை ஓட்டலில் தங்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கவுன்சிலர்களை இழுப்பது குறித்த தகவல்களை பா.ஜ.க. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம். எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும். எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. எல்லாம் சுமூகமாக நடக்கும். நாம் அனைவரும் இணைந்து மும்பையை திறமையாக நிர்வகிப்போம்.

    இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.

    இதற்கிடையே ஆளும் கூட்டணிக்கு சவால் விடுவதற்கு தேவையான பலம் எதிர்கட்சிகளிடம் உள்ளது என்றும், ஆனால் தாங்கள் ஜனநாயகத்தை மதிப்போம் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெங்களூரு அணி 169maha ரன்கள் எடுத்து வென்றது

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.

    பெங்களூரு அணியின் லாரன் பெல், சயாலி சத்கரே ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிரேமா ராவத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடி சதத்தை நழுவவிட்டார். அவர் 96 ரன்னில் அட்டாகினர். ஜார்ஜியா ஒலி 52 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.2 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 4வது வெற்றியைப் பதிவுசெய்தது.

    • மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
    • இதில் ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேட்சையாக நின்று வென்றார்.

    மும்பை:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஸ்ரீகாந்த் அப்போதைய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.

    ராதா யாதவ் 66 ரன்னும், ரிச்சா கோஷ் 44 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் அணியின் சோபி டிவைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

    பெங்களுரு அணியின் ஷ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட்டும், லாரன் பெல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

    • காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
    • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.

    காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.

    மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இங்கியுள்ளது.

    இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி பா.ஜ.க. 58 இடங்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தாக்கரே சிவசேனா 45 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

    அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது. பா.ஜ.க. 22 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கிலேயே உள்ளன.

    நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. 73 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    122 வார்டுகளை கொண்ட நாசிக்கில் பா.ஜ.க. 10 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 3 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளன.

    புனேவில் பா.ஜ.க. 48 இடங்கள், அஜித் பவார் என்.சி.பி. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 4 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

    தானேவிலும் பா.ஜ.க. கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 இடங்கள், சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    • மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது.
    • தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

    தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலில், 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.

    காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

    புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.

    மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இறங்கியுள்ளது.

    இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

    இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 35 இடங்களிலும், சிவசேனா-உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகித்தது.

    மும்பை மாநகராட்சியில் 227 இடங்களில் 60 இடங்களுக்கான முன்னிலை விவரங்கள் தெரியவந்துள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 15 இடங்களிலும், ஷிண்டேவின் கட்சி 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் யு.பி.டி. 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எம்.என்.எஸ். 6 இடங்களிலும், சரத் பவாரின் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    151 வார்டுகளை கொண்ட நாக்பூரில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

    நாட் ஸ்கீவர் பிரண்ட் 65 ரன்னில் அவுட்டானார். அமன் ஜோத் கவுர் 38 ரன்னும், நிகோலா கேரி 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களமிறங்கியது. மெக் லானிங் 25 ரன்னும், கிரன் நவ்கிரே 10 ரன்னும், லிட்ச் பீல்டு 25 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்லின் தியோல் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னும், சோலே டிரியான் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், உ.பி. வாரியர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
    • 227 கவுன்சிலர் இடங்களுக்கு 1700 பேர் போட்டி.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் மேலும் 28 மாநராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் 46 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பின்னர் சரியான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்கு தேர்தல நடைபெற்றது. அப்போது 55.53 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்முறையாக தேர்தலை சந்தித்த ஜால்னா மற்றும் இசால்கராஞ்சி மாநகராட்சிகளில் 56.35 சதவீத வாக்குகள் பதிவாகின.

    வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளா்ர.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும், தாக்கரே சகோதரர்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 227 கவுன்சிலர் இடங்களை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1700 பேர் போட்டியிட்டனர்.

    மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய தேர்தல், தற்போது நடத்தப்பட்டுள்ளது.

    • மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

    இதனிடையே மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார. மேலும், இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.

    • மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும்.

    மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

    மேலும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளைமுதல் முதல் ஜனவரி 18 வரை நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 7 அன்று நடைபெறும்

    • பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மும்பை:

    டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.

    நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.

    193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

    இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ×