என் மலர்
மகாராஷ்டிரா
- பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
- நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 27 வயதான சுற்றுலாப் பயணி ஷிவானி டேபிள் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டு, வடக்கு கோவாவில் உள்ள பாராகிளைடிங் நிறுவனத்தை தொடர்புக் கொண்டார்.
அதன்மூலம், நேற்று மாலை ஷிவானி டேபிள் என்பவர் பயிற்சியாளர் சுமல் (26) என்பவருடன் பாராகிளைடரில் பறந்தார். ஆனால், அவர்கள் பறந்த சிறிது நேரத்திலேயே கேரி என்கிற கிராமம் அருகே கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், " பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அந்நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய் சன்ஹிதாவின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை உடன் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ரஹானே உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- டகோடா ஜான்சன், பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார்.
- டகோடா ஜான்சன் பாடகர் கிறிஸ் மார்ட்டின் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.
ஹாலிவுட் நடிகை டகோடா ஜான்சன் இந்திய நடிகைகள் சோனாலி பிந்த்ரே மற்றும் காயத்ரி ஜோஷியுடன் இணைந்து மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் மூலம் புகப்பெற்ற நடிகை டகோடா ஜான்சன் கோவிலுக்கு செல்லும்போது நீல நிற பாரம்பரிய சல்வார் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக, டகோட்டா ஜான்சன் தனது காதலரும் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் தலைவரான கிறிஸ் மார்ட்டின் உடன் இணைந்து மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாபுல்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இருவரும் பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்தனர்.
கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தற்போது நவி மும்பையில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
- சைஃப் அலி கானை 6 இடங்களில் கத்தியால் குத்தியவர் இன்று பிடிபட்டார்
- இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டார்.
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மர்மநபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகானின் கழுத்து, கை உள்ளிட்ட 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த சைஃப் அலிகான் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் தேறி வரும் அவரும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
13 மாடிகள் கொண்ட வீட்டில் 4-வது மாடியில் சைஃப் அலிகான் வசித்து வந்தார். மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்பது புரியாத புதிராக இருந்தது. மேலும் வீட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிராக்கள் இருந்ததும், அதில் மர்மநபரின் உருவம் தெள்ளத்தெளிவாக பதிவாகாததும் மர்மநபரை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது.

இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வாலிபர் ரெயிலில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தப்பிச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை போலீசார் சத்தீஸ்கரில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேக நபரான ஆகாஷ் கனோஜியா என்பவரை மடக்கி பிடித்தனர்.
இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் என முதலில் தகவல் பரவியது. ஆனால் போலீசார் அதனை மறுத்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
சைஃப் அலிகான் வீட்டில் இருந்த சில சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாக இருந்த காட்சிகளின் பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
இதனடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய முகமது என்பவரை இன்று அதிகாலை போலீசார் தானேவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதான முகமது தானேவில் உள்ள ஒரு மதுபாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை சேகரித்து மும்பையில் பல்வேறு இடங்களிலும் ஒட்டி தீவிரமாக தன்னை தேடுவதை அறிந்த முகமதை தானேவிலேயே பதுங்கி இருக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தானேவில் உள்ள ஹிராநந்தினி தோட்டத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான பகுதிக்கு அருகே உள்ள தொழிலாளர் முகாமில் தங்கி உள்ளார். இரவு நேரத்தில் அங்குள்ள முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
போலீசார் அவரை சுற்றி வளைத்ததும், முதலில் தனது பெயர் விஜய் தாஸ் என கூறியுள்ளார். பின்னர் பிஜோய் தாஸ் எனவும், அதன் பிறகு முகமது சஜித் எனவும் கூறியுள்ளார்.
இறுதியாக விஜய் தாஸ் என பெயரை மாற்றிக்கூறி போலீசை ஏமாற்றி உள்ளார். எனினும் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பணிப்பெண்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முகமதை போலீசார் மும்பை பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் தீக் ஷித் குமார் நிருபர்களிடம் கூறியதாவது,
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தை சேர்ந்த அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார். அவரிடம் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் எதுவுமில்லை.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மும்பை வந்துள்ளார். இங்குள்ள வீட்டு வேலை பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபிறகு போலீஸ் விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
- உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
- 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி மற்றும் மகனை கொன்று 45 வயதான நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைபவ் ஹாண்டே என்பவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக ரூ.9 லட்சத்தையும் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் பணம் செலுத்துமாறு வைபவ்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது தவித்த வைபவ், மனைவி மற்றும் மகனுக்கு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைக்கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வைபவ் வீட்டிற்கு வந்த உறவினர் கதவை நீண்ட நேரம் தட்டினார். எந்தவித பதிலும் இல்லாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வைபவின் மனைவி சுபாங்கி ஹாண்டே (36) மற்றும் அவர்களது 9 வயது மகன் தன்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வைபவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் வைபவ் அளித்த வாக்குமூலத்தின் படி, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர்.
- பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதில், முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சந்தேகத்தின் பெயரில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச் சென்றனர்.
- சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தினர்.
மகாராஷ்டிராவில் மூதாட்டி ஒருவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு அவரை கிராமத்தினர் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி கடந்த டிசம்பர் 30 அன்று அக்கம்பக்கத்தினரால் இந்த சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வெளியூருக்கு வேலைக்கு சென்ற அவரின் மகனும் மருமகளும் ஜனவரி 5 அன்று திரும்பி வந்து மூதாட்டி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச்சென்று கட்டைகளால் அடித்தும், அறைந்தும் துன்புறுத்தி உள்ளனர். சூடான இரும்புக் கம்பிகளால் கைகளிலும் கால்களிலும் முத்திரை குத்தி உள்ளனர்.
அவரை சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அணிவகுத்து ஊர்வலாக அழைத்து சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை உள்ளூர் காவல்துறை மறைக்க முயன்றதாக கூறி மூதாட்டியின் மகனும் மருமகளும் தற்போது அமராவதி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய அமராவதி காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த், கிராமம் வனப்பகுதியின் உள்பகுதியில் உள்ளதால், சம்பவத்தை சரிபார்க்க போலீஸ் அதிகாரி அனுப்பப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் அளிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட காவல்நிலையம் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதா என்றும் சரிபார்க்கப்படும். அது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
- மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால், மகாராஷ்டிரா பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மகாராஷ்டிர காவல்துறை மற்றும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயாராக உள்ளது.
மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார். இந்த வழக்கில் விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த ஒரு சம்பவம் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒட்டுமொத்த மாநிலமும் சீரழிந்துவிட்டது என்று கூறுவது தவறாகும்.
இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- குற்றவாளியின் புதிய படத்தையும் மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- சயீஃப் அலிகான் போலீசாரிடம் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை:
பிரபல இந்தி நடிகர் சயீஃப் அலிகான் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்மநபரால் கத்தியால் குத்தப்பட்டார்.
6 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில், அவர் ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அவரது முதுகில் பாய்ந்திருந்த கத்தியின் ஒருபகுதி அகற்றப்பட்டது.

சயீஃப் அலிகானுக்கு நேற்று டாக்டர்கள் மேலும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் தற்போது, முழுமையாக குணமடைந்து வருகிறார். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை பிடிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறியபடி உள்ளனர். 20 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள். குற்றவாளியின் புதிய படத்தையும் மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சயீஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் எழுந்துள்ளன. சயீஃப் அலிகான் வீட்டுக்குள் மர்மநபர் எப்படி புகுந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. சயீஃப் அலிகான் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதில் துப்புதுலக்க இயலவில்லை.
அதுபோல, சயீஃப் அலிகான் வசிக்கும் 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து கிடப்பதால் குற்றவாளியின் நடமாட்டம் துல்லியமாக தெரியவில்லை. மர்ம நபர் நுழைவாயில் வழியாக வரும் போது காவலாளி அவரை பார்த்தாரா? இல்லையா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.
சயீஃப் அலிகானை 6 இடங்களில் குத்திவிட்டு மர்ம நபர் தப்பியதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. சயீஃப் அலிகான் தனது வீட்டின் கதவை பூட்டியிருந்தால், குற்றவாளி தப்பி இருக்க முடியாது. சயீஃப் அலிகானை தாக்கிய மர்ம நபர் சுமார் 30 நிமிடங்கள் அந்த வீட்டுக்குள் இருந்துள்ளார்..
அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வில்லை. சயீஃப் அலிகான் வீட்டு பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
பணியாளர்களில் யாராவது ஒருவருக்கு மர்ம நபர் தெரிந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சயீஃப் அலிகான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் வந்தது முதல் சென்றது வரை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த மர்ம நபர் தப்பிச் செல்லும் போது அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அவருக்கு அந்த பகுதி நன்கு தெரிந்திருக்கலாம் என்பது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கேமராக்கள் எதிலும் சிக்காதபடி அவர் நழுவிச் சென்றுள்ளார். இதன்மூலம் அவர் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு பல முறை வந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நடிகர் சயீஃப் அலிகான் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக அதிகம் வெளியில் பேச மறுக்கிறார்கள். சயீஃப் அலிகான் போலீசாரிடம் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவா் முதுகில் மர்ம நபர் கத்தியால் குத்திய போது 3 தடவை கத்திக்குத்து விழுந்து உள்ளது. அவரின் தண்டுவட பகுதிக்கு அருகே 2.5 அங்குலம் நீலத்துக்கு கத்தி பாய்ந்து உடைந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதும் போலீஸ் விசாரணையில் மர்மமாக உள்ளது.
மும்பை போலீசார் இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை காண தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாந்திராவில் உள்ள வீட்டில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயம்.
- குற்றவாளியை பிடிக்க 20 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தம் சொட்டசொட்ட ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சைஃப் அலி கான். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் ஐசியு-வில் சேர்க்கப்பட்டார். பின்னர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவரது உடல் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர் நடக்கிறார். வழக்கமான உணவு எடுத்துக் கொள்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், கையில் இரண்டு இடங்களிலும், வலது பக்ககம் கழுத்தின் ஒரு இடத்திலும் காயம் ஏற்பட்டது. முக்கியமாக அவரது முதுகு தண்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த கூர்மையான பொருளை அப்புறப்படுத்தி, காயம் சரி செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
சைஃப் அலி கானை கைத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளது. சைஃப் அலி கான் மீதான தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா பங்குகள் சரிவு.
- ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்று 77,042.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,069.19 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இறுதியாக 423.49 புள்ளிகள் சரிந்து 76,619.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 77,069.19 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 76,263.29 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 108.60 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 23,311.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை
23,277.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 23,292.10 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 23,100.35 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.60 புள்ளிகள் சரிந்து 23,203.20 புள்ளிகளில் வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுதல், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டு வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்போசிஸ் நேற்று 3-வது காலாண்டில் வருவாய் 11.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலும் அதன் பங்கு 6 சதவீதம் சரிந்துள்ளது.
ஐ.டி. பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவது இன்றைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ஆக்சிஸ் வங்கியின் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கோடக் மஹேந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகளில் பெரிய சரிவை சந்தித்துள்ளன.
உயர்வை சந்தித்த பங்குகள்
டிசம்பர் மாதம் காலாண்டில் நிகர லாபம் 7.4 சதவீதம் என அறிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு 2.50 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
- பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி மாநில அரசை கடுமையாக சாடினர்.
இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.
ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வழங்கி உள்ளனர்.
இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






