என் மலர்
கேரளா
- கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
- 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. அதாவது மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்ய இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மேற்கொண்டு கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
- கடந்த 30 ஆம் தேதி வயநாட்டில் பயங்கர பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் EMI பிடித்தம் செய்ததற்கு மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
- ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 1,786 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயில் 43 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. பயண நேரம் 32 மணி நேரம் ஆகும்.
இந்நிலையில் இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டது. காசர்கோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பீரிச்சேரி ரெயில்வே கேட் பகுதயில் இரவு 8 மணியளவில் சென்றது. அப்போது என்ஜினில் ஏதோ சிக்கியது போல் பயங்கர சத்தம் கேட்டது.
இதுகுறித்து என்ஜின் பைலட், ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் கிடந்தன. அவற்றின் மீது ஏறியதால் தான் ரெயில் என்ஜினில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.

ஆனால் தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் போட்டது யார்? என்பது தெரியவில்லை. ரெயிலை கவிழ்க்க மர்மநபர்கள் செய்ய சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இகுறித்து தகவலறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தின் குறுக்கே போடப்பட்ட கற்களின் மீது நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியபோதும், அந்த ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
- முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அடிக்கடி பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்களை சுங்கத்துறையினர் பிடித்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் குவைத்தில் இருந்து கொச்சி நெடும்பசேரி விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்தனர்.
இதில் ஒரு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பையில் செயற்கை பூக்கள் மற்றும் ஸ்குரு டிரைவர்கள் இருந்துள்ளது. அதனை சோதனை செய்தபோது நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
செயற்கை பூக்களின் கைப்பிடியை தங்ககம்பிகளாக்கி அதனை இரும்பு நிற பொருட்களால் பூசியும், ஸ்குரு டிரைவர்களின் கைப்பிடிக்குள் வைத்தும் ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை கடத்தி வந்த பெங்களூரைச் சேர்ந்த முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையின் பெரும்பகுதி மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளது.
- ஆற்றங்கரையோரம் மட்டும் வாழ்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது எனவும் ஆய்வு செய்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரமலை, முண்டகை உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.
புவி அறிவியலுக்கான தேசிய மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. நிலச்சரிவுகள் ஏற்பட்ட பகுதி மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பானதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு கேட்டிருந்தது.
அதன்படி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சூரமலையின் பெரும்பகுதி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். புஞ்சுரிமட்டம் ஆற்றங்கரையோரம் வாழ்வதை தவிர்ப்பது நீண்ட கால பாதுகாப்பு என மத்தாய் தெரிவித்துள்ளார்.
வயநாடு மேப்பாடி பஞ்சாயத்தில் உளள் முண்டகை மற்றும் சூரமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பகுதியும் ஏறக்குறை அழிந்துபோனது.
வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, நிலச்சரிவின் மையப்பகுதியான புஞ்சிரிமட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டது. மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்தனர்.
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 212 உடல்களின் பாகங்கள் மீட்கப்பட்டதாக கேரள மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.
- தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் பினராஜி விஜயன் உரையாற்றினார்.
- மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும்.
வயநாடு நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தால் நாட்டில் உள்ள அனைவரும் சோகமாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக வாழ்ந்து முன்னேற வேண்டிய நேரம் இது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் பினராஜி விஜயன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினாலும், நாட்டில் அறிவியல் விழிப்புணர்வு பாதிக்கப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கைகள், தீங்கான பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் மீண்டும் நுழைந்தன.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, பேரழிவைத் தொடர்ந்து துக்கத்தில் இருக்கும் நேரத்தில் கேரளாவும், நாடும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
ஆனால், சோகமாக இருக்க முடியாது. மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும். எனவே, இந்த ஆண்டு சுதந்திர தினம், மாநிலத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்யும் கூட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.க்ஷ
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேறிய போதிலும், நாடு இன்னும் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து, அதன் மூலம் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முடியவில்லை.
இது தீவிரமான சிந்தனைக்கு தகுதியான ஒன்று. இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை. உலகின் பிற பகுதிகளில் உள்ள அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான்.
தேசம் அந்த நிலையை அடைய மத்திய அரசு முறையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் சமமான வளர்ச்சியால் மட்டுமே நாட்டின் எழுச்சியை உறுதி செய்ய முடியும் என்றும்.
சாதி மற்றும் மதத்தை ஆயுதங்களாகப் பயன்படுத்தி சில சக்திகள், நாம் கடந்து வந்த இருளை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
இது நமது மதச்சார்பின்மையை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது என்பதை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து எட்டு தசாப்தங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்திற்காக நாம் போராடிய போது நமது கனவுகள் என்ன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணமாக இது அமைய வேண்டும்.
கேரள மாநிலம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும், மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது.
நாட்டிலேயே மிகக் குறைந்த குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு விகிதங்களைக் கொண்ட கேரளா. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே PSC-ன் கீழ் அதிக நியமனங்களைச் செய்கிறது.
கேரளாவை புதிய மற்றும் மேம்பட்ட மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடையாளம் காணப்படாத 401 உடல்கள், உடல் உறுப்புக்கான டி.என்.ஏ. பரிசோதனை முடிந்துள்ளது.
- மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நள்ளிரவு வேளையில் அரங்கேறிய இந்த கோரம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையெ, அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நேற்று நிறைவடைந்தது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
- முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
- மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது.
கண்டுபிடிக்காமல் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விரிவான தேடுதல் பணி கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
சூரல்மலை பகுதியில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டியது. இதனால் சாலியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணுவ வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் அந்த வழியாக மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல ராணுவவீரர்கள் அமைத்திருந்த பெய்லி பாலம் மூடப்பட்டது. இந்த மழையால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடிய மர்த்தும் பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கி உள்ளது.

நிலச்சரிவில் சிக்கி பலியான பலரது உடல்கள் சிதைந்து உருக்குலைந்த நிலையிலும், பலரது உடல்கள் துண்டுதுண்டாகிய நிலையிலும் மீட்கப்பட்டதால் பலியான பலரை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று அந்த பணி நடைபெற்றது. அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்தது. இதுகுறித்து கேரள மாநில வருவாய்த் துறை மந்திரி ராஜன் கூறிய தாவது:-
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 401 உடல்கள்-உடல் பாகங்களின் டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 52 உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்துள்ளதால் அவை கூடுதல் பரிசோதனை செய்யவேண்டும். மீதமுள்ள 349 பேரில் 194 உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுடையது.
மீதமுள்ள உடல் உறுப்புகள் 54 நபர்களுடையது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. டி.என்.ஏ. சோதனைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 248 உடல் உறுப்புகள் 121 ஆண்களுக்கும், 127 பெண்களுக்கும் சொந்தமானது.
நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களில் 1,505 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாடகை வீடுகளுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ6ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
- கடந்த 30 ம் தேதி கேரள முதலைமைச்சர் நிவாரணம் ஒதிக்கி 50 லட்சம் இந்த வங்கி நிர்வாகம் வழங்கியது.
வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்த கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலைமைச்சர் நிவாரணம் நிதி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது 5 நாட்கள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரன நிதிக்கு வழங்கினர்.
இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேர் இந்த வங்கியில் கடன் வைத்திருக்கிறார்கள் என்ற விவராம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், கூடுதலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
- வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் ஏற விமான நிலையத்துக்கு வந்த 42 வயதான மனோஜ் குமார் என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்தபோது, எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
அவர் எதோ ஜோக் அடிப்பது போல் இதைக் கேட்டிருந்தாலும், வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாணை நடந்த அவரை உள்ளூர் போலீசிடம் பாதுகாப்பு அதிகரிகள் ஒப்படைத்தனர்.
- டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அதேநேரத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்தது அந்த டாக்டர் கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார்.
அப்போது ஒரு கும்பல் அவரிடம் காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த இர்ஷானா(வயது34) என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்தது. இர்ஷானாவை திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த கும்பல் டாக்டரிடம் பேசியிருக்கிறது. இளம்பெண் என்பதால் அதற்கு டாக்டரும் சம்மதித்திருக்கிறார்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இர்ஷானாவின் சகோதரர் என்று அறிமுகமாக ஒரு நபர் உள்ளிட்டோர் கோழிக்கோட்டில் வைத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரையும் குடியமர்த்த வீடு பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதன்பேரில் டாக்டர் ரூ.5 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்டதும் டாக்டரை ஒரு மசூதி முன்பு விட்டு விட்டு இர்ஷானா உள்ளிட்ட அனைவரும் மாயமாகினர். அவர்கள் டாக்டரின் செல்போன், டேப் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டனர். அதன்பிறகே இர்ஷானா உள்ளிட்ட நபர்கள் திருமண மோசடியில் ஈடுபட்டதை டாக்டர் அறிந்தார்.
தன்னிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி கோழிக்கோடு போலீசில் டாக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபிரசாத் தலைமையிலான போலீசார் மோசடி கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் திருமண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இர்ஷானா, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பறித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
- ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (12-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
கோவில் நடையை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறக்கிறார். நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக அச்சன்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகிறது.
பூஜைக்கு பிறகு பக்தர் களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேி மாலை திறக்கப்பட உள்ளது.
மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






