என் மலர்tooltip icon

    கேரளா

    • நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
    • நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

    மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

    இதைதொடர்ந்து, நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ், இடைவேளை பாபு, ஜெயசூர்யா, மணியன் ஆகிய 4 பேர் மீது மலையாள நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் தெரவித்துள்ளார்.

    தொடர் பாலியல் புகார்களை அடுத்து, கேரள அரசு சார்பில் ஐ.ஜி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகைகளிடம் இருந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 

    • ஐ.ஜி தலைமையில் குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு.
    • தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி.

    கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

    தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.
    • குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    பலேரி மாணிக்கம் பட விவாதத்தின் போது அந்த படத்தின் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என நடிகை ஸ்ரீலேகா மித்ரா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து கேரள திரைப் பட அகாடமி பதவியில் இருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் ரஞ்சித் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நடிகரும் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மலையாள திரை உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.

    அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்த கோர முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எந்த புகாரும் இல்லை என்று அறிவித்தால் என்ன நடக்கும்? எனவே பிரச்சனைகளை எதிர்கொண்ட பெண்கள் புகார் அளிக்க தயாராகும் வரை எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்க முடியாது.

    கேரளா கலாசித்ரா அகாடமியின் தலைவர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் ராஜினாமா செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் என் நண்பர் மற்றும் சக ஊழியர். தான் நிரபராதி என அவர் கூறுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின.
    • இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.

    மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது. மேலும் எலிக்காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

    எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
    • மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ்.

    அசுரன், துணிவு திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நோட்டீசில், "மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த Footage படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது.

    அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது . ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று சீத்தல் தெரிவித்துள்ளார்.

    • சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.

    சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.

    சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
    • வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு தலைமைச் செயலாளராக இருப்பவர் டாக்டர் வி.வேணு. கடந்த ஆண்டு வேணு கேரள அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் வருகிற 31-ம் தேதியுடன் வேணு ஓய்வு பெறுகிறார். இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

    மந்திரி சபை கூட்டத்தில் புதிய தலைமை செயலாளராக வேணுவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி சாரதா முரளீதரனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இவர் திட்டக்குழு கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்.

    கேரளாவில் கணவரை தொடர்ந்து மனைவி தலைமை செயலாளராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    • விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • ஏர் இந்தியா விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மும்பையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 135 பேர் இருந்தனர்.

    இந்நிலையில் அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்னமாக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

    இதுகுறித்து அந்த விமானத்தின் விமானி, திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மேலும் மும்பை விமானம் தரையிறங்கியதும் சோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டன. இதையடுத்து ஏர் இந்தியா விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

    அந்த விமானம் வழக்க மாக காலை 8.10 மணிக்கு தரை யிறங்கும். வெடிகுண்டு மிரட்டல் வந்ததன் காரண மாக 10 நிமிடத்துக்கு முன்ன தாக 8 மணிக்கு தரை யிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

     பின்பு விமானத்துக்குள் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பயணி களின் இருக்கை, கழிவறை, லக்கேஜ் வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. விமா னத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தால் திருவ னந்தபுரத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

    • வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

    33-வது ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    • வயநாடு பேரழிவால் ஒரு வார ஓணம் கொண்டாட்டத்தை கேரள அரசு ரத்து செய்தது.
    • இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

    நிலச்சரிவில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வயநாடு பேரழிவால் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    • அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.
    • பிரதமர் மோடி செயலுக்கு உக்ரைன் அதிபர் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21 ஆம் தேதி போலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு 23 ஆம் தேதி பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருக்கிறார். ரஷியா உக்ரைன் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார்.

    முன்னதாக அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தற்போது உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "நான் அதை ஏற்கனவே வரவேற்று இருந்தேன். அது நல்ல விஷயம் என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மருத்துவமனைகளில் ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்த போது, பிரதமர் மோடி ரஷிய அதிபரை கட்டியணைத்த சம்பவதத்துக்கு உக்ரைன் அதிபர் கடுமையான அதிருப்தி தெரிவித்து இருந்தார்."

    "உலகில் இன்று நடைபெறும் ஏராளமான மோதல்களில் இந்தியாவுக்கும் சமபங்கு வகிக்கிறது. இதனால், மாஸ்கோ சென்றதை போல் பிரதமர் மோடி கீவ் நகருக்கும் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பது நல்ல விஷயமாகவே இருக்கும். மேலும், இருதரப்பு மீதும் அக்கறை செலுத்துவதாக இருக்கும். அமைதிக்கான விருப்பம் உள்ளிருந்து வரவேண்டும்."

    "அந்த வகையில் அவர்கள் இது குறித்து சிக்னல்களை அனுப்பினால் அதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படலாம். ஆனால், இத்தகைய முன்னெடுப்பே சாதனை தான். அமைதிக்கு தேவையான அளவுக்கு ஏதேனும் நடந்தால் நல்லது தான். ஆனால் அதுமட்டுமே அளவுகோலாக இருக்கக்கூடாது என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    • பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம்.
    • மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை. அவர்களை தேடும் பணி 20 நாட்களுக்கு மேலாக நடந்தது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இறுதிக்கட்டமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமானோர் என்ன ஆனார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர தொடங்கினர். கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வருகை அதிகரித்தது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதி இடிந்தநிலையில் இருப்பதால், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிலச் சரிவு பாதித்த இடங்களை பார்ப்பதற்கு வருகிறார்கள்.

    அதனை தடுக்கும் விதமாக முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ கூறியிருப்பதாவது:-

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார் வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×