என் மலர்
கர்நாடகா
- தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றார்.
- அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார்.
இறந்தவர் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் ஆவார்.
டிசிஎஸ் ஊழியரான பிரகாஷ்,நேற்று, அருகிலுள்ள கரும்புக் கடைக்குச் சென்றுவிட்டு மதியம் 12.45 மணியளவில் வீடு திரும்பியதாகவும், பின்னர் தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரம் கழித்து, ஷூவின் அருகே பாம்பு இறந்து கிடப்பதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்தனர். பிரகாஷ் வாயில் நுரை தள்ளியதாகவும், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பின்னர் பிரகாஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் பிரகாஷின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் பின் பிரகாஷின் ஒரு காலில் எந்த உணர்வும் இல்லை. அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
- தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
- பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, ஷாஹாபூர் அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் போலீஸ் நலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்தபோது தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.
இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹர்ஷல் போயர் கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசம்பே கூறுகையில், பள்ளி ஊழியர்கள் மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
- கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆர்எஸ்எஸ் பாடலை பாடினார்.
- இது சர்ச்சை ஆன நிலையில் துணை முதல் மந்திரி மன்னிப்புக் கோரினார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் நடந்த கூட்டத்தொடரின்போது ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே....' என தொடங்கும் வரிகளைப் பாடினார். டிகே சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியது கர்நாடக அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை பாடி இருந்தேன். அதன்மூலம் ஐ.பி.எல். போட்டி தொடர்பான பிரச்சனை சார்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை பங்கேற்க செய்ய முயற்சித்தேன்.
ஏனெனில், எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
- கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20).
- இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20). இவரது கணவர் வெளியூரில் பணியாற்றி வருகிறார்.
தர்ஷிதாவுக்கு தனது உறவினர் சித்தராஜுவுடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருந்தது.
சமீபத்தில், தர்ஷிதா தனது மாமியார் சுமதாவின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தைத் திருடி, சித்தராஜுவுடன் கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்றார்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதாவும் சித்தராஜுவும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர்.

இந்நிலையில் திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) லாட்ஜ் அறையில் வைத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்தில், சித்தராஜு, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து குச்சியை தர்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்தார்.
இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது மொபைல் போன் வெடித்ததால் தான் இறந்ததாக லாட்ஜ் இருதவர்கள் மற்றும் அக்கபக்கத்தினரை சித்தராஜு நம்ப வைக்க முயன்றார்.
இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சித்தராஜுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது.
- கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு.
அவ்வகையில் பெங்களூருவில் மழைக்காலங்களில் ஆட்டோ பயணங்களுக்கு அதிக பணம் வசூலிப்பதாக இணையத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
அந்த பதிவில், ""நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்ய முயன்றார். அப்போது ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது. அதே நேரத்தில் கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது. இது குறுகிய கால பயணத்திற்கு மிகவும் விலை உயர்ந்தது. இதை பார்த்தவுடன் அவர் உடனடியாக, அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்" என்று தெரிவித்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக அதிகப்படியான ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.
- மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
- 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.
இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 வருடங்களுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
- தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
- பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை புதைத்ததாக ஒரு புகார் அளித்தார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைத்ததாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். தவறான தகவல்களை வழங்கிப் போலீசாரை ஏமாற்றியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
- அங்குள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. இதேபோல் இன்றும் 28 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் பெங்களூருவில் மேகமூட்டமாக வானிலை இருக்கும். இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார்
- தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்
நேற்று கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டி.கே. சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.
உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார். இதனால் எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் உடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் ஒரு அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன். என் வாழ்க்கை, என் இரத்தம் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியை வழிநடத்தி வரும் நான், ஒரு தூணாக நிற்பேன்.
ஆர்.எஸ்.எஸ் கீதத்தைப் பாடுவது குறித்து கேட்டபோது, "நான் ஜனதா தளம் மற்றும் பாஜகவை பற்றி படித்திருக்கிறேன். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு அரசியல் கட்சியைப் பற்றியும் எனக்குத் தெரியும். தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்.
அரசியல் ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு தலைவராக, என் எதிரிகளில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் அறியாமல் இருக்க முடியாது? அதனால்தான் நான் ஆர்எஸ்எஸ் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.
சில நேரங்களில் சில அமைப்புகளில் சில நல்ல குணங்கள் இருக்கும். அவற்றை நாம் கவனிக்க வேண்டும், இல்லையா? நான் அதைத்தான் செய்திருக்கிறேன்" என்று சிவகுமார் கூறினார்.
- பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
- உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டிகே சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.
உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் போட்டியில் ஆர்சிவி வெற்றியை கொண்டாட சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவின்போது வெளியே நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரவி, ஸ்வேதாவை காதலிப்பதாக அழுத்தம் கொடுத்தார்.
- உனக்காக குடும்பத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா (32). இவர் திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
ரவியும், ஸ்வேதாவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதனால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஸ்வேதா மீது ரவிக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல முறை தனது காதலை ஸ்வேதாவிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர் உங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நீங்கள் வாழுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ரவிக்கு ஸ்வேதா மீது உள்ள காதல் குறையவில்லை. தொடர்ந்து தான் வலியுறுத்தியும் ஸ்வேதா தனது காதலை நிராகரித்து வந்ததால் ரவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பத்தன்று ரவியும், ஸ்வேதாவும் ஒரே காரில் பயணித்தனர். அவர்கள் சந்தனஹள்ளி என்ற பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காரில் சென்றனர்.
அப்போதும் ரவி, ஸ்வேதாவை காதலிப்பதாக அழுத்தம் கொடுத்தார். மேலும் உனக்காக குடும்பத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார். ஆனாலும் ஸ்வேதா வழக்கம் போல் ரவியின் காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி காருடன் ஏரியில் பாய்ந்தார். இதில் காருக்குள் இருந்த ஸ்வேதா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். ஆனால் ரவி நீச்சல் அடித்துக்கொண்டு வெளியே தப்பி வந்து விட்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காருடன் ஏரியில் மூழ்கி இறந்த ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் தப்பிய ரவியிடம் விசாரணை நடத்திய போது கார் தற்செயலாக ஏரியில் விழுந்ததாகவும், தான் நீந்திக்கொண்டு வந்து உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 14ஆம் தேதி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார்.
- திரும்பி வராததால் போலீசில் புகார் அளித்த நிலையில், உடல் கண்டெடுப்பு.
அரசு கல்லூரி மாணவியன் உடல் பாதி எரிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த மாணவியின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கொலைக்கு அவரது முன்னாள் காதலன் காரணமாக? என்ற கோணத்தில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவி கடந்த 14ஆம் தேதி விடுதியில் விடுமுறை விண்ணப்பம் கொடுத்து விட்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் விடுதி திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, பின்னர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது, இந்த மாணவியின் உடல் என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த மாணவியின் முன்னாள் காதலனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது உடல்பரிசோதனை முடிவில்தான் தெரியவரும்.






