என் மலர்tooltip icon

    குஜராத்

    • உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இந்தியா.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர்.
    • தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் நேரில் வருகை தரவுள்ளனர்.

    இதேபோல், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    தொடர்ந்து, உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வருகை தருகின்றனர்.

    மேலும், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி ஆகியோரும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர். 

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.

    இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்களை எடுத்தது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார்.
    • சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கதிர்காம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கவுதம் ஜோஷி மற்றும் போலீசார் அல்காபுரி பகுதியில் பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வேகமாக வருவதை கண்ட போலீஸ்காரர் கவுதம் ஜோஷி அந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தவில்லை. மாறாக போலீஸ்காரர் கவுதம் ஜோஷி மீது மோதினார்.

    இதில் கார் பேனட்டில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரரை சுமார் 400 மீட்டர் தூரம் வரை கார் டிரைவர் இழுத்து சென்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் கார் சென்றபோது பேனட்டில் இருந்து போலீஸ்காரர் கவுதம் ஜோஷி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றனர்.

    எனினும் அந்த கார் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் கவுதம் ஜோஷியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கவுதம் ஜோஷி கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் மீது மோதிய கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.
    • கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கட்டி போட்டனர்.

    பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப் மற்றும் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும், காரையும் கொள்ளையடித்துள்ளனர்.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயதான வீட்டு பணிப்பெண்ணை கொள்ளை கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் 2 பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த அந்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு பக்கத்து மாவட்ட போலீசாரையும் உஷார் படுத்தினர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கொள்ளை கும்பல் பஞ்சாப் நோக்கி தப்பி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது ஒரு பஸ்சில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வாலிபர் உத்தரபிரதேசத்தையும், ஒரு வாலிபர் மத்திய பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 5 பேரும் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

    தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முன்பாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டி அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டதும், அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பெண் தனியாக வசித்து வருவதையும் அறிந்து அவரது வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 286 ரன்களை சேர்த்தது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இறங்கினர்.

    ஹெட் 11 ரன்னிலும், வார்னர் 15 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித் 44 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லபுசேன் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேமரூன் கிரீன் 47 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
    • கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்

    கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

    ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

    இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.

    • உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பண பரிவர்த்தனை தொடர்பாக சில தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    பாலன்பூர் ஜகத்நாத் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    எட்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, மணீஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து சூரத்தின் துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பரோட் கூறுகையில், "சூரத்தின் பாலன்பூரில் உள்ள சித்தேஷ்வர் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினர் வசித்து வந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்தோம். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஒரே குடும்பத்தில் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆறு பேர் விஷம் குடித்து ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உள்ளனர். தற்கொலைக் குறிப்பும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பண பரிவர்த்தனை தொடர்பாக சில தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

    • பாக் பக்ரி நிறுவனம் தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.
    • இளம் வயதில் தொழில் அதிபர் இறந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சூரத்:

    குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாக் பக்ரி நிறுவனம் தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. உள்நாட்டிலும் தேயிலை விற்பனை செய்து வருகிறது.

    இந்த குழுமத்தின் செயல் இயக்குனராக இருந்து வந்தவர் பராக் தேசாய் (வயது 49). மிகப்பெரிய கோடீசுவரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்தது. இதனால் பயந்து போன அவர் ஓட்டம் பிடித்தார். இருந்த போதிலும் நாய்களும் அவரை துரத்தியது. இதில் பராக் தேசாய் கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இளம் வயதில் தொழில் அதிபர் இறந்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • துர்கா தேவியை மையமாக வைத்து பாடுபொருளாக இசைக்கப்படுவது கர்பா பாடல்கள்.
    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

    அகமதாபாத்:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

    நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

    இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

    ×