search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் சர்மா, ஜடேஜா அபார சதம்: முதல் நாள் முடிவில் இந்தியா 326/5
    X

    ரோகித் சர்மா, ஜடேஜா அபார சதம்: முதல் நாள் முடிவில் இந்தியா 326/5

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×