என் மலர்tooltip icon

    குஜராத்

    • இந்திய அணியின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் சதமடித்தார்.
    • மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 196 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். சுப்மன் கில்லும் அரை சதமடித்தார்.

    104 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது.
    • இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஹர்ட்லி ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித், ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை ஜடேஜா அவுட் ஆக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 281வது விக்கெட்டாக அமைந்தது.

    இந்நிலையில், ஜடேஜா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த 5-வது இந்திய பவுலர் என்ற சாதனையை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

    அனில் கும்ப்ளே 350 விக்கெட்டும், அஸ்வின் 347 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டும், கபில்தேவ் 219 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.

    முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் டக்கெட் 153 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. பென் டக்கெட் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    • டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • தோஷியும், அமிதாவும் காரில் அம்பாஜி கோவிலுக்கு சென்று திரும்பினர்
    • காயங்களுடன் காரிலிருந்து வெளியேற முடியாமல் அமிதா சிக்கி கொண்டார்

    குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பரேஷ் தோஷி. இவரது மனைவி அமிதா.

    பரேஷ் தோஷி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன் தோஷி, தனது மனைவி அமிதாவுடன், காரில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திரும்பி வரும் வழியில், சபர்காந்தா பகுதியில், தான் மஹுதி கிராமத்தில் கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அவர்கள் காரின் குறுக்கே ஒரு நாய் வந்தது.


    அந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க தோஷி காரை திருப்பிய போது, அது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தூண்கள் மற்றும் சாலை தடுப்புகளிலும் மோதியது.

    அப்போது சாலை தடுப்புகளில் ஒன்று அவர்களது கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அமிதாவை தாக்கியது. இதில் காரிலிருந்து இறங்க முடியாமல், பலத்த காயங்களுடன் அமிதா சிக்கித் தவித்தார்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், விபத்தை கண்டு உதவ ஓடி வந்தனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே அமிதாவை வெளியே மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அமிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற தோஷி, கவனக்குறைவாக கார் ஓட்டிய குற்றத்தை புரிந்ததாக தனது பெயரிலேயே முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து கொண்டார்.

    ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களால், பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், காலையில் நடைபயிற்சி செய்வதும் கடினமாகி வருவதாக, கடந்த வருடம், அம்மாநில உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முந்த்ரா நகரில் 1.2 பில்லியன் மதிப்பீட்டில் காப்பர் ஆலை உருவாகி வருகிறது
    • மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு காப்பர் ஒர் இன்றியமையாத தேவை

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி (61). இவரது நிறுவனம், அதானி குழுமம் (Adani Group).

    பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம், துறைமுக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.

    இவை தவிர, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம், மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானம், சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.

    இது முழு செயல்பாட்டிற்கு வந்ததும் காப்பர் தேவைக்காக அயல்நாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை பெருமளவு குறைந்து விடும்.

    சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது.


    2029 வருட காலகட்டத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டவுள்ளது.

    ஒவ்வொரு நாட்டிற்கும் படிம எரிபொருள் (fossil fuel) சார்பு நிலையில் இருந்து பசுமை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற தேவைப்படும் கட்டமைப்பிற்கும், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சோலார் செல்கள், பேட்டரிகள், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தின் உருவாக்கத்திற்கும் காப்பர் தேவைப்படுகிறது.

    இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட, 4 லட்சம் டன்கள் உற்பத்தி திறன் படைத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதன் உரிமையாளரான வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

    எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு அடுத்த நிலையில் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படும் உலோகமாக காப்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, உலகின் பெருமளவு காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சிலி (Chile) மற்றும் பெரு (Peru) ஆகிய இரு நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
    • ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.

    அகமதாபாத்:

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

    இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரசின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலம் மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுடா தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் அவர் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

    ராமர் கோவில் விவகாரத்தில் தனது கட்சியின் அணுகுமுறை பிடிக்கவில்லை எனக்கூறிய அவர், விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

    • குஜராத்தில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வதோதரா படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
    • விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.

    குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

    மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • அறக்கட்டளை நடத்தும் ராமானந்த் கண் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த முகாமில் 21 பேர் கண்புரை ஆபரேஷன் செய்து கொண்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் அகமதாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளை நடத்தும் ராமானந்த் கண் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த முகாமில் 21 பேர் கண்புரை ஆபரேஷன் செய்து கொண்டனர். இதில் 17 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் ஆமாதாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற 12 பேரும் ராமானந்த் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ×