என் மலர்
குஜராத்
- இந்தியாவிலேயே மிக நீண்ட கேபிள் பாலமாகும்.
- பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
காந்திநகர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார்.
இன்று காலை அவர் பெய்ட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி காலை 8.30 மணியளவில் ஒகா பெருநிலப் பகுதியையும், பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை திறந்து வைத்தார்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi visits and offers prayers at Dwarkadhish temple. pic.twitter.com/4nFBFrFRgS
— ANI (@ANI) February 25, 2024
இது இந்தியாவிலேயே மிக நீண்ட கேபிள் பாலமாகும். 2.32 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் சுதர்சன சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாலத்தில் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு ஒரு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பாலம் போக்கு வரத்தை எளிதாக்குகிறது. துவாரகா மற்றும் பெய்ட் துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாக குறைக்கும். பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பக்தர்கள் பெய்ட் துவாரகா செல்ல படகு போக்கு வரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
4 வழிச்சாலை கொண்ட 27.20 மீட்டர் அகலம் உள்ள பாலத்தில் ஒவ்வொரு 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi at Sudarshan Setu, country's longest cable-stayed bridge of around 2.32 km, connecting Okha mainland and Beyt Dwarka. pic.twitter.com/uLPn4EYnFM
— ANI (@ANI) February 25, 2024
இந்த பாலத்துக்கு மோடி 2017 அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார். இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று அவர் கூறி இருந்தார். இந்த பாலத்தை இன்று அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி துவாரகாவில் ரூ.4,150 கோடிக்கு அதிகமான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாலை 3.30 மணியளவில் மோடி ராஜ்கோட் செல்கிறார். ராஜ்கோட், பகின்டா, ரேபரேலி, கல்யாணி மற்றும் மங்களகிரி ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மாலை 4.30 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தை ரூ.48,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
- குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார்
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்" என உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான, ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இன்று அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, கடந்த பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்.
- கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள தாராப் என்ற இடத்தில் வாலிநாத் மகாதேவ் கோவிலை திறந்து வைத்து பிரார்த்தனை செய்த பின்னர் பொது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இதற்கிடையே, 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
அயோத்தியில் இன்று, ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, எதிர்மறையாக வாழும் மக்கள் வெறுப்பின் பாதையை விட்டு வெளியேறவில்லை.
கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.
நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார்.
- வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
காந்தி நகர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.45 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். அங்கு கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாடத்தில் அவர் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து மெஹ்சானா, நவ்சாரில் நடைபெறும் 2 பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். மெஹ்சானாவில் வாலிநாத் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
மெஹ்சானாவில் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலை 4.15 மணியளவில் பிரதமர் மோடி நவ்சாரி செல்கிறார். அங்கு சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வதோதரா-மும்பை விரைவு சாலை, பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டத்தின் முக்கிய பகுதிகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மாலை 6.15 மணியளவில் கக்ரபார் அனல்மின் நிலையத்தை பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார். அங்கு உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குகிறார். துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை செய்து தரிசனம் செய்கிறார்.
காலை 11.30 மணியளவில், துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாளை நினைவு கூறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 1.45 மணிக்கு வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
- கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
- அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
போலியான அரசு அலுவலகத்தை திறந்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு நிதியை பறித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த ஊழல் தொடர்பாக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
அமளியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒருநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். காங்கிரசின் பலம் 15 ஆகும். அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.
- திடீரென மார்க்கெட் யார்டில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள பலன்பூரில் பெரிய மார்க்கெட் யார்டு உள்ளது. இன்று காலையில் இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்னர். பல நேரம் ஆகியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.
இந்த பயங்கர தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
- 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.
ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
- இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்களில் டிக்ளேர் செய்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.

557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.
வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
- 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்தார்.
- சர்ப்ராஸ் கான் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.
ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.
- 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினர்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.
ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது.
நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜெய்ஸ்வால் 149 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- ராஜ்கோட்டில் டெஸ்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார்.
- குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகினார்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.
திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் 3வத் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.






