என் மலர்
குஜராத்
- உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.
- மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிக வேகத்தில் அந்த தெருவை நோக்கி செல்கிறது. அதில் பின்பக்கமாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.
இரண்டு மாணவிகளும் வலியுடன் இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். உடனே அருகில் மாணவில் ஒருவரை தூக்கி அருகில் உள்ள வீட்டில் அமர வைக்கிறார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் அனைவரின் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
ஓட்டுநரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்துள்ளனர்.
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தைத் தொடர்ந்து, மாணவர் பாதுகாப்பில் குஜராத் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
- விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார்.
- பல மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் 45-50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க பல மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணி வீணானது.
அம்ரேலியில் உள்ள சுர்கபாரா கிராமத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அம்ரேலி மீட்புக்குழுவினரும், 108 அவசரக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
45 முதல் 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து 108 அவசர குழு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்கு முதலில் ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கியது. மீட்புக்குழுவினர் கேமராக்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியைத் தொடங்கினர். இதையடுத்து நடைபெற்ற பல மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
முன்னதாக, இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுமியை மீட்க மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறது. குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் கீழ்நோக்கி சிக்கியுள்ளது. சிறுமியின் முகம் மட்டுமே தெரிகிறது என்றார்.
- இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
- இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு குடியேறுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திறன்மேம்பாடு கழகத்தில் பணி செய்து வரும் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
இந்த குடியிருப்பில் மொத்தம் 462 வீடுகள் உள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினர்.
மேலும் அந்த கடிதத்தில், ஹர்னி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிலோமீட்டருக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கூட இல்லை. இப்போது இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பெண் குடியேறுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

7 வருடமாக இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குடியிருப்புவாசிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குடியிருப்புவாசிகளின் தொடர் எதிர்பால் இஸ்லாமியப் பெண் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
- போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
- வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் நவி பார்டி கிராமத்தில் உள்ள தேசிய தொழிற்பேட்டையில் உள்ள குடோன் மற்றும் கலுடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.
குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், ஈனோ பிராண்டை பிரதிபலிக்கும் இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களை பயன்படுத்தி போலி ஈனோ சோடாவை அவர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரியவந்தது.
குடோனில் ஈனோ பிராண்ட் சோடாவை பேக் செய்யும்போது இரண்டு பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பினால் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போலீசார், போலி ஈனோ சோடா, மங்கல் தீப் தூபக்குச்சிகள் மற்றும் வீட் முடி அகற்றும் கிரீம்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகன இருவரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 15-20 நாட்களாக போலி தயாரிப்புகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவன அதிகாரியின் புகாரின் அடிப்படையில், வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
- சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
குஜராத்தில் ரூ.130 மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரின் அருகே மிதி ரோகார் கிராமத்தில் வைத்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர். அதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அதிகபட்ச கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு மத்தியில் நிழலுலகில் செயல்பட்டுவரும் வரும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா இந்தியாவிலும் சந்தையை திறக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- 292 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
- இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 289 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 236 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கேமிங் சென்டர்கள் எந்தவித பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் 2 வ வருடங்களாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று (மே 27) நடந்த விசாரணையின்போது, கேமிங் சென்டரில் சில காலங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய புகைப்படங்களை நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்தது.
புகைப்படங்களை வாங்கி பார்த்த நீதிபதி, "யார் இந்த அதிகாரிகள்? அவர்கள் அங்கு விளையாட சென்றார்களா? என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான இந்த கேமிங் சென்டர்கள் எந்த அனுமதியும் இன்றி 2 வருடமாக இயங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாநில அரசும் இவ்வளவு காலமும் தூங்கிக்கொண்டிருந்ததா என கேள்வியெழுப்பிய அவர், இனியும் இந்த அரசை நம்பப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். அரசு இயந்திரங்கள் வேலை செய்யாதது காரணமாகவே மக்கள் இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

- விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தீ விபத்திற்கு விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்ட வெல்டிங் பணி காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் சிசிடிவி காட்சி சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வளாகத்தின் மேற்கூரையில் வெல்டிங் செய்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் தீப்பிடித்ததைக் காட்டுகிறது.
தீப்பொறிகள் அருகில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் தீ மளமளவென பரவியது. மேலும், நுழைவாயில் அருகில் இருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கினர். இதுவும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜ்கோட் மாநகராட்சி இத்தகைய விளையாட்டு வளாகத்தை அனுமதித்திருக்கக் கூடாது.
- தீ விபத்து குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையின்போது, தீ விபத்து ஏற்பட்ட டிஆர்பி விளையாட்டு வளாகம் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழை பெறவில்லை என வழக்கறிஞர் அமீத் பாஞ்சல் தெரிவித்துள்ளார்.
மேலும், "ராஜ்கோட் மாநகராட்சி இத்தகைய விளையாட்டு வளாகத்தை அனுமதித்திருக்கக் கூடாது
அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட உயிர் பலியால் அவர்களது குடும்பங்களை துயரில் ஆழ்த்திய இந்த தீ விபத்து அடிப்படையில் மனிதர்களால் ஏற்பட்ட பேரிடர்.
தீ விபத்து குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப்ரஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கின் நகலை ராஜ்கோட் மாநகராட்சி, குஜராத் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஒரே ஒரு அவசர வழி மட்டுமே அங்கு இருந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தீ விபத்து நடந்த விளையாட்டு வளாகம், அரசின் தீயணைப்பு அனுமதிக்கான தடையில்லா சான்று பெறாமலேயே இயங்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் விளையாட்டு திடல் உரிமையாளர் பெறவில்லை. மேலும், ஒரே ஒரு அவசர வழி மட்டுமே விளையாட்டு திடலில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த நிகழ்வில் அலட்சியம் காட்டப்படாது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவர்களிடம் பேசினேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கெள்கிறேன். மேலும், குஜராத் அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் விரைவான நீதியை வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.






