என் மலர்tooltip icon

    அசாம்

    • கவுகாத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது.
    • ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல

    அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 

    இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வின் முன் தற்போது விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைக்கின்றனரா? தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என்றும் என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

    • ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
    • அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.

    ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர்.

    இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.

    இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.

    இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.
    • விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

    அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

    ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.

    இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.

    லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    கவுகாத்தி:

    அசாமில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 5 விசாரணை கைதிகள், பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 அடி உயர சுவரில் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மோரிகான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிறையிலிருந்து வெளியேறி பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து 20 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    மேலும் பிரசாந்தா சைகியா என்ற ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து குவாஹாட்டியைச் சேர்ந்த இரண்டு உதவி ஜெயிலர்கள் சிறையை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • காண்டாமிருகம் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இப்பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்திச் சென்று கொடூரமாக தாக்கியது.

    இதனால் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்த நபர் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன் (37) என போலீசார் தெரிவித்தனர்.

    வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து காண்டாமிருகம் எப்படி வெளியே வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்துள்ளார்.
    • இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    நேற்று அசாம் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு அம்மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்வு முடிந்த பின்பு சமூக ஊடகங்களில் அப்பெண் இதுகுறித்து பகிர்ந்த பின்பு இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக வேறு சில பெண்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் அசாம் மாநிலத்தில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பெண் காவலர் சோதனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், "என்னைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானது. வடக்கு லக்கிம்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் டிஜிபி என்னிடம் தெரிவித்தார். அதே நாளில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையில் இருந்து மோசடி செய்வதற்கான பொருட்கள் கிடைத்தன" என்று தெரிவித்தார்.

    • கிராம மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஜுபாகிர் அலி, ஹைதர் அலி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனர்.
    • கடந்த திங்கள்கிழமை முதலே மக்களை வெளியேற்றி குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் 3 நாட்களாக பொறுமை காத்த ஊர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    அசாமில் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி அங்கிருந்தவர்களை விரட்ட அரசு அதிகாரிகள் முயன்றபோது அங்கு ஏற்பட்ட மொதலால் கிராமத்தினர் இருவரை போலீசார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள சோனாப்பூர் பகுதியிலஅமைந்துள்ள கோச்தொலி [Kochutoli] என்ற கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி அங்கு வசித்து வந்தவர்களை வெளியேற்றி அவர்களின் குடியிருப்புகளை அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் புல்டோசர்களால் இடிக்க முற்பட்டனர். 

    இதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து போலீசுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஜுபாகிர் அலி, ஹைதர் அலி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் குண்டடிபட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராம மக்கள் கையில் குச்சிகளுடனும் கற்களாலும் தங்களை நோக்கி தாக்குதல் நடத்தியதால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாகி விட்டது என்று அரசு அதிகாரி ஒருவர் அங்கு வந்த ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

    கடந்த திங்கள்கிழமை முதலே மக்களை வெளியேற்றி  குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் 3 நாட்களாக பொறுமை காத்த ஊர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

    கோச்தொலி கிராமத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே ஒருமுறை அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆனால் மீண்டும் அவர்கள் அங்கு வந்து குடியேறியுள்ளதாகவும் கூறபடுகிறது. அங்கிருந்து தற்போது வெளியேற்ட்டப்பட்ட 300 முதல் 400 முதலான கிராம மக்கள் அருகில் உள்ள ரெயில்வே டிராக்கில் தஞ்சம் புகுந்ததால் ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே துக்கப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என கூறி வீடுகள் உடனுக்குடன்  இடிக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது புல்டோசர் நடவடிக்கைகளை நீதிபதிகள் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும்.
    • சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC ) விண்ணப்ப ரசீது எண்ணை (ARN) சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும் என்றும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட போது தவறுதலாக பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட 9.55 லட்சம் மக்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக அளவிலான ஆதார் கார்டு விண்ணப்பங்கள் வந்தது என்றும் ஆதலால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    • அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா விலகினார்.
    • அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா திடீரென விலகி உள்ளார்.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், அசாமில் திரிணாமுல் கட்சி பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. திரிணாமுல் கட்சியை மேற்கு வங்கத்தின் பிராந்தியக் கட்சியாகக் கருதுவது உள்பட தொடர்ச்சியான பல சிக்கல்கள் எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இந்த கருத்தை எதிர்க்க நாங்கள் பல பரிந்துரைகளை வழங்கினோம்.

    இந்தச் சிக்கல்களை நீக்க உங்களை மற்றும் முதல் மந்திரி மம்தா தீதி ஆகியோரை சந்திக்க கடந்த ஒன்றரை ஆண்டாக பலமுறை முயற்சித்த போதிலும் நான் வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

    ரிபுன் போரா திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.

    அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் தொழுகை செய்ய உணவு நேரத்துக்குப் பின் வழங்கப்பட்டு வந்த 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான  பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று  தொழுகை இடைவேளை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேறியுள்ளது. அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த உத்தரவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 2 மணிநேர ஜும்ஆ இசைவேலையை ரத்து செய்யப்பட்டதன் மூலம் [சட்டமன்றத்தின்] செயல்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மற்றொரு [ஆங்கிலேய] காலனிய கால சடங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1937 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சையத் சாதுல்லாவால் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

     இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.  இதற்கிடையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நேற்று அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  மேலும் மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் ஹிமந்த பிஸ்வா பேசி வருவதாக அசாமில் உள்ள  18 எதிர்க்கட்சிகள் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததது குறிப்பிடத்தக்கது.

     

    • முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் சட்ட மசோதா தாக்கல்.
    • சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும்- அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா.

    அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்ட மசோதாவை ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் அமளியில் ஈடுபட்டது.

    இருந்தபோதிலும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மதக்குருக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள்தான் திருமணத்திற்கு சாட்சி.

    இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டால் இனிமேல் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இந்த சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள பெண், 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதன்மூலம் சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்டத்தை நாட்டின் முதல் மாநிலமாக கொண்டு வந்தது. தற்போது அசாம் அதே வகையிலான சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

    திருமணம் தொடர்பான இதற்கு முந்தைய சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த புதிய சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில், தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுப்படுத்துவதற்கான இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    தன்னுடைய அரசு திருமணங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வரும் என ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால், ஆறு மாதத்திற்கு முன்பே அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதில் கலப்பு திருமணங்களும் அடங்கும்.

    ×