காண்டாமிருகம் கொடூரமாக தாக்கியதில் ஒருவர் மரணம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

காண்டாமிருகம் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rhino Near Assam's Pobitora Wildlife Sanctuary
Published on

அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இப்பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்திச் சென்று கொடூரமாக தாக்கியது.

இதனால் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன் (37) என போலீசார் தெரிவித்தனர்.

வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து காண்டாமிருகம் எப்படி வெளியே வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com