என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.
    • செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.

    ஆந்திராவில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்வதற்காக நகராட்சி நிர்வாகத் துறை புரமித்ரா என்ற செல்போன் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுத்து இந்த ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் பிரச்சினையை ஆய்வு செய்ய வருகிறார்கள். சிறிய பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. பெரிய பிரச்சினைகள் 3 முதல் 15 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 3 மாதங்களில் மக்கள் 10,421 பிரச்சினைகளுக்கு பதிலளித்தனர். இவற்றில் இதுவரை 9889 தீர்வு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்க்கப்படாவிட்டால், அதிகாரிகளே பொறுப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் நகராட்சி பகுதிகளில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செல்போன் ஆப் ஆந்திர முழுவதும் தற்போது பரவி வருகிறது.

    • பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.
    • அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்காலி மண்டலத்தின் பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம் வயலில் கிடந்தது. அதனை எடுத்த பெண் மகிழ்ச்சி அடைந்தார். இது கிராம மக்களிடம் பரவியது. அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆந்திராவில் விவசாய நிலங்களில் தொடர்ந்து வைரம் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
    • படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்று கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பல ராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.

    கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இவர்களது மீன்பிடி வலையில் 100 கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீன் சிக்கியது. வலையில் சிக்கிய மீனை யர்ரைய்யாவால் இழுக்க முடியவில்லை. அப்போது மீன் யர்ரைய்யாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. தங்கள் கண்ணெதிரிலேயே சகோதரரை மீன் கடலுக்குள் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் அவர் மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து கொர்லைய்யா மீனவ கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
    • மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    சீனிவாச ராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த பிடரி கிராமத்தை சேர்ந்த திருடன் ஒருவன் சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வார். திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார்.

    பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான். இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சீனிவாச ராவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறுகிறார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    • காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
    • காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.

    ஆந்திர மாநிலம், கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்தவர் திலீப் (வயது 25). கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் வினய் (20). இவர் திருச்சானூரிலுள்ள சகோதரர் வீட்டில் தங்கி இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் அடுத்த கலுவ கட்டா பகுதிக்கு காரில் வந்தனர். அப்போது காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.

    ஏ.சி இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்ததால் காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ஏ.சி வேலை செய்யவில்லை. இருவரும் அதிக மது போதையில் இருந்ததால் ஏசி வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை. காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர். கார் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்ததால் காரில் இருப்பவர்கள் வெளியே தெரியவில்லை.

    நேற்று காலை திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றினார். அப்போது மகன்கள் இருவரும் காரிலேயே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரில் ஏசியை ஆன் செய்து விட்டு மதுபோதையில் தூங்கினால் இது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் குடிமகன்கள் உஷாராக இருக்க வேண்டும்என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். நேற்று மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் வந்த வேன் இன்று அதிகாலை அன்னமைய்யா மாவட்டம், குரு பல கோட்டா, சென்ன மாரி மிட்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் வேன் இரண்டாக பிளந்தது. வேனில் இருந்த மேகர்ஸ் (வயது 17), சரண் (17), ஸ்ரவாணி(28) ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
    • திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். 2 மலை சாலைகள் அலிபிரி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் திடீர் நோய் காரணமாக இறப்பு, நடைபாதையில் காட்டு விலங்குகள் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விபத்துகள் திடீர் மாரடைப்பு மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்கு தாக்குதல்களில் இறப்பவர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.

    தற்போது திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    இப்போது பக்தர்கள் அலிபிரிக்கு திருமலைக்கும். திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் வரை காப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

    அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்களுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்கள் வசூலிக்கும் பிரீமியம் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

    இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் மீது மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய ஜெகன் மோகனின் புல்லட்ப்ரூப் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்.

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

    இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

    ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

    முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.

    விபத்துக்குப் பிறகு, சிங்கையாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள், சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆந்திராவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி. இவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இதை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
    • கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

    இன்று பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    பக்தர்கள் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 90,087 பேர் தரிசனம் செய்தனர். 41891 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×