என் மலர்tooltip icon

    சமையல்

    பாலக்கீரை உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இன்று பாலக்கீரையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பாலக் கீரை - 2 கட்டு
    பாசுமதி அரிசி - 1 கப்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1 ஸ்பூன்
    கிராம்பு, ஏலக்காய், பட்டை - 3 நம்பர்
    சின்ன வெங்காயம் - 1 கப்
    தக்காளி  - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4 நம்பர்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெந்தயம் - 1 ஸ்பூன்

    Palak rice

    செய்முறை

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

    வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
     
    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

    சுவையான பாலக் கீரை சாதம் தயார்.

    இதனுடன் கேரட், வெள்ளிரிக்காய், வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளை கிழங்கு - 3
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
    ரெட் கலர் - பின்ச்
    பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு- 1 தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)
    பிரட் தூள்
    பிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)

    ஆலு லாலி பாப்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து ஆறியதும் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.

    மசித்த உருளைக்கிழங்குடன் கலர், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.

    வடிவமைத்த உருளைக்கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு லாலி பாப்பை சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு, ராகி மாவு - தலா 100 கிராம்,
    உருளைக்கிழங்கு - 2,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    கரம் மசாலாத்தூள் - - சிறிதளவு,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
    கடுகு - கால் ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.

    அதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடித்து பரிமாறவும்.

    அருமையான ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் நுரையீரல் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆட்டு நுரையீரல் - 250 கிராம்
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    தயிர் - 2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    திக்கான தேங்காய் முதல் பால் - 1 கப்

    மட்டன் நுரையீரல் கிரேவி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறிது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதனுடன் ஊற வைத்த நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    பாதி வெந்த பின்பு அதில் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

    நுரையீரல் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சுவையான மட்டன் நுரையீரல் கிரேவி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேபி கான், காளானில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 20,
    காய்கறி வேக வைத்த தண்ணீர்  - 2 கப்,
    மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் - 1 கப், 
    வெங்காயம் - 1,
    பூண்டு -  6 பல்,
    பொடியாக நறுக்கிய செலரி -  கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகுத்தூள் - சிறிது,
    சில்லி சாஸ் - கால் டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 4 துளிகள்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய் -  தேவைக்கேற்ப.

    மஷ்ரூம் பேபி கான் சூப்

    செய்முறை :

    காளானை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான், பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், கறிவேப்பிலை சேர்க்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    கடைசியாக செலரி இலையை தூவிப் பரிமாறவும்.

    சத்தான மஷ்ரூம் பேபி கான் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோவக்காய் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவக்காய்கால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    புளி - எலுமிச்சையளவு

    வறுத்து அரைக்க:

    காய்ந்த மிளகாய் - 2
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்
    அரிசி - ஒரு டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1 கப்
    பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - தேவைக்கேற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு பல் - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

    கோவக்காய் புளிக்குழம்பு

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.

    கோவக்காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 2 கைப்பிடி,
    துவரம்பருப்பு - 1/4 கப்,
    பூண்டு பற்கள் - 4,
    தக்காளி - 2
    ப.மிளகாய் - காரத்திற்கு
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    தாளிக்க :


    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.

    பாலக்கீரை பருப்பு கூட்டு

    செய்முறை :

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

    வேக வைத்த பருப்புடன் பாலக்கீரையை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பாலக்கீரையை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி மத்தினால் மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரையில் சேர்த்து நன்றாக கலந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பாலக் கீரை பருப்பு கூட்டு ரெடி.

    இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும், மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை பூசணி - 800 கிராம்
    தண்ணீர் - 2 லிட்டர்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 600 கிராம்

    வெள்ளைப் பூசணி முரப்பா

    செய்முறை :

    வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு முள் கரண்டியால் நறுக்கிய துண்டுகள் முழுவதும் குத்தி எடுக்கவும். சர்க்கரைப்பாகை உறிஞ்சி கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    இந்த எலுமிச்சை நீரில் நறுக்கிய பூசணி துண்டங்களை 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நீரை வடிகட்டி துண்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் பூசணி துண்டங்களை எலுமிச்சையின் புளிப்பு போகும் வரை அலசி எடுக்கவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து பூசணி துண்டுகள் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கண்ணாடி போல் பூசணித்துண்டுகள் வேகும் வரை வேகவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் 600 கிராம் சர்க்கரைக்கு 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்கும் சர்க்கரை நீரில் பூசணி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

    இந்த சர்க்கரை நீரிலே எட்டு மணிநேரம் விடவும்.

    எட்டுமணி நேரம் கழித்து வெள்ளை பூசணி துண்டுகளை ஒர் இரவு முழுவதும் உலரவிடவும்.

    தயாரான இனிப்பை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உண்ணலாம்.

    சுவையான வெள்ளைப் பூசணி முரப்பா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    ராகி முருங்கைக்கீரை தோசை

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.

    தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 1 கப்
    கோதுமை மாவு - 3/4 கப்
    வெல்லம் துருவியது - 1/2 கப்
    தேங்காய் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    நெய் - 1/4 கப்
    சமையல் சோடா - சிறிதளவு

    நெய்யப்பம்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

    பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்,  மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.

    பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சுவையான நெய்யப்பம் தயார்.

    இன்றைய செய்முறையில் வாழைப்பழம் சேர்க்கவில்லை, விருப்பப்பட்டால் நீங்கள் கனிந்த ஒரு வாழைப் பழத்தை மசித்து இதே செய்முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வழக்கமான முட்டைகோஸ் பொரியல் உடன் கேரட் மற்றும் பட்டாணி சேர்க்கும் பொழுது மேலும் சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைகோஸ் - 100 கிராம்
    கேரட் - 1
    பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
    வெங்காயம் -1
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    கடலை பருப்பு - தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு தேவையான அளவு

    முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்

    செய்முறை

    முட்டைகோஸ், கேரட்டை நன்றாக கழுவிய பின்னர் துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாக கிளறி விடவும்.

    காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் சேர்த்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - ஒரு கப்
    பாஸ்மதி அரிசி - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு -  2 பல்
    கேரட் - 1
    பீன்ஸ் - 7
    வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி - கால் கப்
    வெங்காயத்தாள் பச்சைப் பகுதி - அரை கப்
    உப்பு, மிளகு - தேவையான அளவு
    எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    பன்னீர் பிரைடு ரைஸ்

    செய்முறை :

    ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள்.

    இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள்.

    இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும்.

    இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.

    சூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×