என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை
Byமாலை மலர்14 Aug 2019 4:22 AM GMT (Updated: 14 Aug 2019 4:22 AM GMT)
தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 1/4 கிலோ
முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
வெங்காயம் - 2
பச்சரிசி - கால் கப்
உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)
பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.
கேழ்வரகு - 1/4 கிலோ
முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
வெங்காயம் - 2
பச்சரிசி - கால் கப்
உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)
பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.
தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X