என் மலர்
சமையல்
பருப்புக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்புக்கீரை, சம்பா கோதுமை சேர்த்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - 2 கப்
பச்சரிசி - அரை கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10
உப்பு - தேவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பருப்புக் கீரை - 1 கட்டு
சிறிய வெங்காயம் - 10

செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இந்த மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும செய்து வைத்த அடையை தவாவில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க வேகவைத்து எடுங்கள்.
சம்பா கோதுமை - 2 கப்
பச்சரிசி - அரை கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10
உப்பு - தேவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பருப்புக் கீரை - 1 கட்டு
சிறிய வெங்காயம் - 10
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இந்த மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும செய்து வைத்த அடையை தவாவில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க வேகவைத்து எடுங்கள்.
சுவையான சத்தான பருப்புக் கீரை கோதுமை அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான் 65-ஐ தனியாகவும், டீ மற்றும் காப்பியுடன் சேர்த்தோ சுவைக்கலாம். இனி சுவையான காளான் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
சோள மாவு - 25 கிராம்
தனியா பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - தேவையான அளவு
சீரகம் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு துள், சீரக தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.
பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து ஒரு சேர பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த காளானை போட்டு வறுத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான காளான் 65 தயார்.
குறிப்பு: காளான் கலவை தயார் செய்யும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. காளானில் இருக்கும் தண்ணீரே கலவை தயார் செய்யப் போதுமானது. காளான் கலவையை அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் காளான் கலவை நீர்த்துப் போகும். விருப்பமுள்ளவர்கள் சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை மாவுக்கலவையில் சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.
காளான் - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
சோள மாவு - 25 கிராம்
தனியா பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - தேவையான அளவு
சீரகம் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு துள், சீரக தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.
பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து ஒரு சேர பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த காளானை போட்டு வறுத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான காளான் 65 தயார்.
குறிப்பு: காளான் கலவை தயார் செய்யும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. காளானில் இருக்கும் தண்ணீரே கலவை தயார் செய்யப் போதுமானது. காளான் கலவையை அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் காளான் கலவை நீர்த்துப் போகும். விருப்பமுள்ளவர்கள் சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை மாவுக்கலவையில் சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பர்களுக்கு சம்பா கோதுமை ரவை மிகவும் உகந்தது. இன்று சம்பா கோதுமை ரவை, கேரட் சேர்த்து இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை - 1/2 கப்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
பச்சைமிளகாய் - 1,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
ஈனோ சால்ட் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
சம்பா கோதுமை ரவையை சூடான கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் கொத்தமல்லியை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சம்பா ரவையை தாளித்த கலவையில் சேர்த்து நன்கு ஆறியதும் தயிர், மஞ்சள் தூள், கேரட் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
உடனே ஈனோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி இட்லியாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து பரிமாறவும். ஈனோ சால்ட் சேர்த்தவுடன் மாவை உடனே இட்லியாக ஊற்ற வேண்டும்.
சம்பா கோதுமை ரவை - 1/2 கப்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
பச்சைமிளகாய் - 1,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
ஈனோ சால்ட் - 1 டீஸ்பூன்.

சம்பா கோதுமை ரவையை சூடான கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் கொத்தமல்லியை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சம்பா ரவையை தாளித்த கலவையில் சேர்த்து நன்கு ஆறியதும் தயிர், மஞ்சள் தூள், கேரட் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
உடனே ஈனோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி இட்லியாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து பரிமாறவும். ஈனோ சால்ட் சேர்த்தவுடன் மாவை உடனே இட்லியாக ஊற்ற வேண்டும்.
சுவையான சத்தான சம்பா கோதுமை ரவை கேரட் இட்லி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/4 டம்ளர்
நெய் - அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.
குறிப்பு :
* பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/4 டம்ளர்
நெய் - அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் - 4 (பொடித்தது)

செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.
குறிப்பு :
* பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
* ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும்; மலச்சிக்கலை நீக்கும்; உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கி உற்சாகத்தைத் தரும்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய வெண்பூசணி - 200 கிராம்,
தயிர் - 100 கிராம் (ஒரு கப்),
கொத்தமல்லி சிறிதளவு,
குழைய வேக வைத்த சாதம் - அரை கப்
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
தாளிக்க
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை :
வெண் பூசணியின் தோலைச் சீவிவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெண் பூசணியை கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பூசணி நன்றாக வெந்ததும் அதில் ஒரு கப் தயிர், சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூசணி கலவையில் சேர்க்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலையைத் தூவி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.
நறுக்கிய வெண்பூசணி - 200 கிராம்,
தயிர் - 100 கிராம் (ஒரு கப்),
கொத்தமல்லி சிறிதளவு,
குழைய வேக வைத்த சாதம் - அரை கப்
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
தாளிக்க
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை :
வெண் பூசணியின் தோலைச் சீவிவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெண் பூசணியை கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பூசணி நன்றாக வெந்ததும் அதில் ஒரு கப் தயிர், சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூசணி கலவையில் சேர்க்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலையைத் தூவி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.
சுவையான சத்தான வெண் பூசணி - தயிர்சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட அருமையான உணவு சாம்பார் சாதம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
விருப்பமான காய்கறிகள் - 1 கப்
(கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)
புளி கரைசல் - 1/4 கப்
சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 10
நெய் - 1 தேவையான அளவு
பச்சைமிளகாய் - 5
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க :
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காய தூள் - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.
பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.
காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
அரிசி - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
விருப்பமான காய்கறிகள் - 1 கப்
(கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)
புளி கரைசல் - 1/4 கப்
சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 10
நெய் - 1 தேவையான அளவு
பச்சைமிளகாய் - 5
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க :
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காய தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.
பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.
காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சிம்பிளாக செய்யக்கூடிய சாம்பார் சாதம் ரெடி”.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புரதச்சத்து நிறைந்த இந்த உணவு எதிர்ப்பு சக்தி கொண்டது; குழந்தைகளை உற்சாகமாக வைக்கும். உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் இது உகந்தது.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 50 கிராம்,
நிலக்கடலை - 25 கிராம்,
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சை பழம் - பாதி

செய்முறை :
பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் சேர்த்து வெங்காயம், தக்காளி, கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன்மீது பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம்.
பச்சைப் பயறு - 50 கிராம்,
நிலக்கடலை - 25 கிராம்,
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சை பழம் - பாதி

செய்முறை :
பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் சேர்த்து வெங்காயம், தக்காளி, கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன்மீது பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம்.
சத்தான முளைகட்டிய தானிய சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அச்சுமுறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1/2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
ஏலப்பொடி - சிறிது,
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு, ஏலப்பொடி, பொடித்த சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சேர்த்து பஜ்ஜி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அச்சுமுறுக்கு அச்சியை சூடான எண்ணெயில் போட்டெடுத்து மாவில் முக்கி மறுபடியும். எண்ணெயில் போடவும்.
முறுக்கு சிறிது நேரம் கழித்து அச்சிலிருந்து அதுவாகவே பிரிந்து எண்ணெயில் மிதக்கும். சிவந்ததும் எடுத்து விடவும்.
குறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சை எண்ணெயில் தோய்த்தெடுத்த பிறகே மாவில் முக்க வேண்டும்.
சூப்பரான அச்சுமுறுக்கு ரெடி.
மைதா - 1/2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
ஏலப்பொடி - சிறிது,
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
தண்ணீர் - 1/4 கப்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு, ஏலப்பொடி, பொடித்த சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சேர்த்து பஜ்ஜி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அச்சுமுறுக்கு அச்சியை சூடான எண்ணெயில் போட்டெடுத்து மாவில் முக்கி மறுபடியும். எண்ணெயில் போடவும்.
முறுக்கு சிறிது நேரம் கழித்து அச்சிலிருந்து அதுவாகவே பிரிந்து எண்ணெயில் மிதக்கும். சிவந்ததும் எடுத்து விடவும்.
குறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சை எண்ணெயில் தோய்த்தெடுத்த பிறகே மாவில் முக்க வேண்டும்.
சூப்பரான அச்சுமுறுக்கு ரெடி.
இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவகோடாவில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. அவகோடாவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இன்று அவகோடா, பச்சைப்பயிறு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - 1 கப்
அவகோடா - 2
முளைகட்டிய பச்சைப்பயிறு - அரை கப்

செய்முறை
சிவப்பு அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் முளைகட்டிய பச்சைப்பயிறு, அவகோடா சேர்த்து (அவகோடா கொட்டையை நீக்கி விடவும்) தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சிவப்பு அரிசி - 1 கப்
அவகோடா - 2
முளைகட்டிய பச்சைப்பயிறு - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
சிவப்பு அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் முளைகட்டிய பச்சைப்பயிறு, அவகோடா சேர்த்து (அவகோடா கொட்டையை நீக்கி விடவும்) தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான அவகோடா பச்சைப்பயிறு தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
குடைமிளகாய் - 2,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறு துண்டு,
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,

செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
குடைமிளகாய் - 2,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறு துண்டு,
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.
தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் அதிகளவில் உள்ளது. இன்று முளைகட்டிய நவதானியங்களை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் - ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

செய்முறை :
முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் - ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.
தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து - 1 கப்
சீனி கல்கண்டு - அரை கப் (தூளாக்கவும்)
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்போது கல்கண்டை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வடை தயார் செய்வதற்கு ஏற்ப மாவு கலவை கெட்டியாக இருக்க வேண்டும். அதிக வழுவழுப்பாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை வடைகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியை சிறு தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் போட்டு வடைகளாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான கல்கண்டு வடை ரெடி.
உளுந்து - 1 கப்
சீனி கல்கண்டு - அரை கப் (தூளாக்கவும்)
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்போது கல்கண்டை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வடை தயார் செய்வதற்கு ஏற்ப மாவு கலவை கெட்டியாக இருக்க வேண்டும். அதிக வழுவழுப்பாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை வடைகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியை சிறு தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் போட்டு வடைகளாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான கல்கண்டு வடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






