என் மலர்tooltip icon

    சமையல்

    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    தேவையான பொருட்கள்

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து  தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் ஸ்டாக் செய்ய...

    சிக்கன் - கால் கிலோ,
    வெங்காயம், கேரட் - தலா பாதி,
    செலரி -1,
    பூண்டு - 3 பல்,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    தண்ணீர் - 1 லிட்டர்.

    சூப் செய்ய...

    ஸ்வீட்கார்ன் - முக்கால் கப்,
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
    ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு,
    கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு,
    முட்டை - 1.

    ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

    செய்முறை :

    மிளகு, பூண்டை இடித்துக் கொள்ளவும்.

    கால் கப் ஸ்வீட்கார்னை அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.

    கார்ன்ஃப்ளார் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் செய்ய கொடுத்த பொருட்களை போட்டு 1 மணி நேரம் வேகவைக்கவும். பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும்.

    சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட்கார்ன் மற்றும் 3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப்  சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு கரைத்த கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    கடைசியாக அடித்த முட்டையை கொதிக்கும் சூப்பில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும்.

    ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - 1 கப்
    தேங்காய் -1 மூடி
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் - 5
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தேங்காய் பூரண கொழுக்கட்டை

    செய்முறை :

    மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.

    மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

    கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.

    மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

    இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சூப் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    கல்யாண முருங்கை இலை - 1 கப்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சீரக தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - காலி டீஸ்பூன்
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கல்யாண முருங்கை இலை

    செய்முறை :

    முதலில் கல்யாண முருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டி வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சூடானதும் அதில் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சீரகத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கல்யாண முருங்கை இலையை போட்டு வதக்கவும்.

    கல்யாண முருங்களை இலை சற்று வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக கொதித்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கல்யாண முருங்கை இலை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 200 கிராம்,
    பச்சரிசி மாவு - 50 கிராம்,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    ஓமம் - சிறிதளவு,
    எண்ணெய் - கால் கிலோ,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

    காரா சேவ்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காரா சேவ் ரெடி.

    இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுப்பது உடலுக்கு நல்லது. அந்த வகையில் இன்று ஓட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 10
    காய்ந்த திராட்சை - 10
    ஓட்ஸ் - அரை கப்
    ஏலக்காய் - 2
    சர்க்கரை - அரை கப்
    பால் - இரண்டு கப்
    ஐஸ் கட்டி - இரண்டு துண்டு
    முந்திரி துண்டுகள் - ஐந்து, அலங்கரிக்க

    ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்

    செய்முறை :

    பாதாம், காய்ந்த திராட்சையை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும்.

    வறுத்த ஓட்ஸ், ஏலக்காய், சர்க்கரை, பால், ஐந்து நிமிடம் ஊறவைத்த பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு, அதில் ஐஸ் கட்டி சேர்த்து ஒரு அடிஅடித்து ஒரு கப்பில் ஊற்றி முந்திரி துண்டுகள் துவி பரிமாறவும்.

    சத்தான ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - அரை கப்
    பன்னீர் - அரை கப்
    கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப

    காளான் பன்னீர் வடை

    செய்முறை

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் உகந்தது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - அரை கப்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
    பச்சை மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவைகேற்ப
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    தேங்காய் பால் - கால் கப்
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்

    ஓட்ஸ் வெஜிடபிள் தேங்காய்ப்பால் சூப்

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை, கேரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வறுத்த ஓட்ஸ், தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

    உடல் இலைக்க மிக சிறந்த உணவு இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தட்டை - 12
    கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
    காரச் சட்னி - 6 டீஸ்பூன்
    புதினா சட்னி - 6 டீஸ்பூன்
    மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
    சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    சேலம் தட்டு வடை செட்

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும்.

    அதன் மேலே சிறிது சிறிதாக கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும்.

    பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும்.

    மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.

    சேலம் தட்டு வடை செட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது வேப்பம் பூ. இன்று இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய்த் துருவல் - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    வேப்பம் பூ - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    வேப்பம் பூ துவையல்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

    உளுந்தம் பருப்பு நன்றாக வறுபட்டதும் இதனுடன் தேங்காய்த் துருவல், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் ஆற வைக்கவும்.

    சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

    சூப்பரான வேப்பம் பூ துவையல் ரெடி.

    தோசைக்கு மிகச்சிறந்த சைட் டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வாழைக்காய் கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வாழைக்காய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    மீடியம் சைஸ் தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியா தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    வாழைக்காய் கறி

    செய்முறை:

    வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள்.

    இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்.

    இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான வாழைக்காய் கறி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று தித்திப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    சர்க்கரை - 1 ½ கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    கிராம்பு - சிறிதளவு
    அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    நெய் - அரை கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தித்திப்பு பூரி

    செய்முறை:

    வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்துக்கு வரும்வரை மாவை பிசைந்து ஊற வைக்கவும்.

    வாணலியில் சர்க்கரையை கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    மாவு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போன்று தயார் செய்து கொள்ளவும். அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    அந்த பூரிகளை சர்க்கரை பாகில் முக்கி பரிமாறலாம்.

    இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை பாகு கெட்டியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×