search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காளான் பன்னீர் வடை
    X
    காளான் பன்னீர் வடை

    சூப்பரான காளான் பன்னீர் வடை

    மாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - அரை கப்
    பன்னீர் - அரை கப்
    கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப

    காளான் பன்னீர் வடை

    செய்முறை

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×