search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடைமிளகாய் புதினா புலாவ்
    X
    குடைமிளகாய் புதினா புலாவ்

    குடைமிளகாய் புதினா புலாவ்

    குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    குடைமிளகாய் - 2,
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,  
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

    குடைமிளகாய் புதினா புலாவ்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

    அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

    வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.

    தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×