என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா லட்டு
Byமாலை மலர்23 Aug 2019 9:45 AM GMT (Updated: 23 Aug 2019 9:45 AM GMT)
கிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/4 டம்ளர்
நெய் - அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு - 10
செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.
குறிப்பு :
* பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
ரவை - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/4 டம்ளர்
நெய் - அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் - 4 (பொடித்தது)
செய்முறை :
ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.
குறிப்பு :
* பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
* ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X