search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருப்புக் கீரை கோதுமை அடை
    X
    பருப்புக் கீரை கோதுமை அடை

    சத்து நிறைந்த பருப்புக் கீரை கோதுமை அடை

    பருப்புக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்புக்கீரை, சம்பா கோதுமை சேர்த்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை - 2 கப்
    பச்சரிசி - அரை கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 10
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிது
    பருப்புக் கீரை - 1 கட்டு
    சிறிய வெங்காயம் - 10
    தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

    பருப்புக் கீரை கோதுமை அடை

    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

    மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள்.  

    இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    இந்த மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும செய்து வைத்த அடையை தவாவில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க வேகவைத்து எடுங்கள்.

    சுவையான சத்தான பருப்புக் கீரை கோதுமை அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×