என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மட்டன் நுரையீரல் கிரேவி
Byமாலை மலர்16 Aug 2019 8:45 AM GMT (Updated: 16 Aug 2019 8:45 AM GMT)
சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் நுரையீரல் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆட்டு நுரையீரல் - 250 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 1
தயிர் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
திக்கான தேங்காய் முதல் பால் - 1 கப்
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறிது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் ஊற வைத்த நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பாதி வெந்த பின்பு அதில் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.
நுரையீரல் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஆட்டு நுரையீரல் - 250 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 1
தயிர் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
திக்கான தேங்காய் முதல் பால் - 1 கப்
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறிது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் ஊற வைத்த நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பாதி வெந்த பின்பு அதில் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.
நுரையீரல் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான மட்டன் நுரையீரல் கிரேவி தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X