என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலுமிச்சைச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு,
வெங்காயம் - ஒன்று.
எலுமிச்சை தோல் - சிறிதளவு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம்.
புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலுமிச்சைச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு,
வெங்காயம் - ஒன்று.
எலுமிச்சை தோல் - சிறிதளவு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம்.
புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
4 அல்லது 5 வயதிற்குப் பின்னர் உங்கள் குழந்தைகளின் கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை எவ்வாறு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
அம்மாக்களுக்கு அழகும் அவசியம். ஆரோக்கியமும் அவசியம். குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கழுத்தைப் பிடிக்கிற அளவுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். அம்மாக்களுக்கான சில அழகான ஆலோசனைகள்!
தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.
கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.
பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம்.
தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.
கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.
பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம்.
மனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை. பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது.
மனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை. கண்ணை மூடி கொண்டே நடப்பவையெல்லாம் தெரிந்து கொண்டே படுத்து புரண்டு கொண்டிருப்பார்கள். இது மட்டுமல்லாமல் கண்ட கண்ட எண்ணங்கள் மனதை போட்டு வாட்டும். பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது.
மன அழுத்ததிலிருந்து விடுபட சரியான மருத்துவத்தை நாடி பயன்பெற்றால் தூக்கமின்மையை குணப்படுத்தி விடலாம். அதற்கு அக்குபஞ்சர் அரோமா பாத ரிப்லக்ஸாலஜி போன்ற முறைகள் அற்புதமான உடனடி, பக்கவிளைவுகள் இல்லாத தீர்வுகளை தரும்.
தூக்கம் வரவில்லை என்பதற்கு ஆத்திரமோ, கோபமோ அடைய கூடாது. முடிந்தளவு மூச்சை இழுத்து விட வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். முக்கியமாக அரோமா பாத ரிப்லக்ஸாலஜி மற்றும் தூக்கத்திற்கான சிறப்பு அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி சிகிச்சை மேற்கொண்டால் மிக எளிதாக தூக்கமின்மையினை குணப்படுத்தலாம். பிடித்த இசையை இரவில் கேட்கலாம். மனதிலுள்ள நல்ல விஷயங்களை அசைப்போட்டு எதிர்மறை எண்ணங்களை தூர போடவேண்டும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்து மனம் விட்டு சிரித்து பேசுவதினாலும் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதாலும் மனம் லேசாகி நன்றாக தூக்கம் வர வாய்ப்புள்ளது.
படுத்தவுடன் தூங்கி விட்டால் உண்மையில் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சுமார் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். அவ்வாறு தூங்கி எழும் போது மனசும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உள் மூச்சு வெளி மூச்சு ஆகியன நடக்கும் போது நமது மூளை அமைதியாக இருக்கும். மூக்கின் வழியே மூச்சை 4 நிமிடங்கள் உள் இழுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி பின்னர் வாய் வழியே 8 நொடிகள் மூச்சை விடவேண்டும். இதனை செய்யும் போது, ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும். இந்த தகவலை கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் உஷாரவி தெரிவித்துள்ளார்.
மன அழுத்ததிலிருந்து விடுபட சரியான மருத்துவத்தை நாடி பயன்பெற்றால் தூக்கமின்மையை குணப்படுத்தி விடலாம். அதற்கு அக்குபஞ்சர் அரோமா பாத ரிப்லக்ஸாலஜி போன்ற முறைகள் அற்புதமான உடனடி, பக்கவிளைவுகள் இல்லாத தீர்வுகளை தரும்.
தூக்கம் வரவில்லை என்பதற்கு ஆத்திரமோ, கோபமோ அடைய கூடாது. முடிந்தளவு மூச்சை இழுத்து விட வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். முக்கியமாக அரோமா பாத ரிப்லக்ஸாலஜி மற்றும் தூக்கத்திற்கான சிறப்பு அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி சிகிச்சை மேற்கொண்டால் மிக எளிதாக தூக்கமின்மையினை குணப்படுத்தலாம். பிடித்த இசையை இரவில் கேட்கலாம். மனதிலுள்ள நல்ல விஷயங்களை அசைப்போட்டு எதிர்மறை எண்ணங்களை தூர போடவேண்டும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்து மனம் விட்டு சிரித்து பேசுவதினாலும் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதாலும் மனம் லேசாகி நன்றாக தூக்கம் வர வாய்ப்புள்ளது.
படுத்தவுடன் தூங்கி விட்டால் உண்மையில் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சுமார் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். அவ்வாறு தூங்கி எழும் போது மனசும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உள் மூச்சு வெளி மூச்சு ஆகியன நடக்கும் போது நமது மூளை அமைதியாக இருக்கும். மூக்கின் வழியே மூச்சை 4 நிமிடங்கள் உள் இழுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி பின்னர் வாய் வழியே 8 நொடிகள் மூச்சை விடவேண்டும். இதனை செய்யும் போது, ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும். இந்த தகவலை கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் உஷாரவி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
வெங்காயம் - 2
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நூடுல்ஸ் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
வெங்காயம் - 2
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
காலை உணவுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்து மிகுந்த முட்டை, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஆற்றலை அது தருகிறது. முட்டையை ஆம்லெட்டாகவோ, வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடலாம். இளம் வயதைக் கடந்தவர்கள் வேகவைத்த முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.
முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும்.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும்.
வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும்.
வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும்.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும்.
வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும்.
வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் உங்களை தொடர்பு கொள்ளவும், உங்களது கவனத்தை பெறவுமே அழுகிறார்கள். இதனாலேயே குழந்தைகள் சௌகர்யமாக உணரும் போது அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் என்ன செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால், அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.

சில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக அதை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.
பல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.
குழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
குழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.

சில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக அதை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.
பல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.
குழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும், அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை.
காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது. நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.
உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.
பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.

பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள், சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும்.
எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.
பெண்களின் உடை, நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், பணிக்கு செல்லும் தங்களின் மனைவி, சகோதரி, மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.
காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது. நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.
உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.
பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.

பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள், சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும்.
எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.
பெண்களின் உடை, நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், பணிக்கு செல்லும் தங்களின் மனைவி, சகோதரி, மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.
சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். கோடையில் கிடைக்கும் கிர்ணிப்பழத்தை வைத்து மில்க்ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கிர்ணி பழம் - ஒன்று,
பால் - அரை லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:
பாலை காய்ச்சி ஆற விட்டு குளிர வைக்கவும்.
கிர்ணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.
துண்டுகளாக்கிய கிர்ணி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பருகலாம்.
குளுகுளு கிர்ணிப்பழ மில்க்ஷேக் ரெடி.
பலன்கள்: சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிர்ணி பழம் - ஒன்று,
பால் - அரை லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:
பாலை காய்ச்சி ஆற விட்டு குளிர வைக்கவும்.
கிர்ணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.
துண்டுகளாக்கிய கிர்ணி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பருகலாம்.
குளுகுளு கிர்ணிப்பழ மில்க்ஷேக் ரெடி.
பலன்கள்: சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்து விடுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
வெஜைனல் பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
வெஜைனல் பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
முளைக்கட்டிய பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முளைக்கட்டிய பச்சைப்பயறுடன் சத்து மாவு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சத்து மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - சிட்டிகை,
முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
நேந்திரன் பழத்துண்டுகள் - ஒரு கப்.

செய்முறை :
வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசறவும்.
அதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து கலக்கவும்.
இதனை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
கடலைக் கறியுடன் பரிமாறலாம்.
சூப்பரான சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சத்து மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - சிட்டிகை,
முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
நேந்திரன் பழத்துண்டுகள் - ஒரு கப்.

செய்முறை :
வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசறவும்.
அதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து கலக்கவும்.
இதனை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
கடலைக் கறியுடன் பரிமாறலாம்.
சூப்பரான சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். நாவிற்கு மட்டுமே இனிப்பைத்தந்து உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோசாக மாற்றி அமைக்கப்படுகின்றன. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக்கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்று அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரக கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், பரவலாக இருக்கும் நீரழிவு நோய் என இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.
குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை நோயாளியாக்குகிறோம். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும், வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும் நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும், கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துகள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய் மாரடைப்பு ஏற்படுகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டினுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் சூழலை உருவாக்குகிறது. காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்தினாலே போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சர்க்கரையின் தொந்தரவில் இருந்து முழுவதும் விடுபட்டவர்கள். ஆக, நாவிற்கு மட்டுமே இனிப்பைத்தந்து உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரக கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், பரவலாக இருக்கும் நீரழிவு நோய் என இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.
குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை நோயாளியாக்குகிறோம். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும், வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும் நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும், கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துகள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய் மாரடைப்பு ஏற்படுகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டினுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் சூழலை உருவாக்குகிறது. காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்தினாலே போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சர்க்கரையின் தொந்தரவில் இருந்து முழுவதும் விடுபட்டவர்கள். ஆக, நாவிற்கு மட்டுமே இனிப்பைத்தந்து உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.






