என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பெண்கள் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்களின் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. தற்போது பெண்கள் நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளுவது அதிகரித்து வருகிறது. முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.
குட்டை முடி:
* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.
* அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.
* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.
* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.
நீளமான முடி:
* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும். ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.
* சதுர முகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும்.
* குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.
* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.
* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.
* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.
குட்டை முடி:
* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.
* அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.
* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.
* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.
நீளமான முடி:
* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும். ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.
* சதுர முகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும்.
* குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.
* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.
* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.
* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை வசதிகள், வளங்கள் இருந்தாலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத தேசம், வாழ தகுதியற்ற நாடாகத்தான் கருதப்படும்.
வாய்ப்புகள்-வசதிகள் பெருகி சமுதாயத்தில் வாழ்க்கை தரம் முன்னேற முன்னேற குற்றங்களும் அதிகரிக்கின்றன.
எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டுப்பாடுடன் இருந்த மனிதன், நாகரிக வாழ்க்கையின் சுவையை அறிந்த பின்னர் தான் குற்றங்களை செய்ய ஆரம்பித்தான்.
நம் வீட்டில் இருக்கும் தாத்தா-பாட்டிகளிடம் கேட்டால் தெரியும்.. “நாடே ரொம்ப கெட்டுப்போய்விட்டது” என்று அங்கலாய்ப்பார்கள். “எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி வெட்டு, குத்து, கொலைகள், பாலியல் வன்முறைகள் நடந்தது கிடையாது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். இப்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது” என்று ஆதங்கப்படுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த வருத்தம் நாட்டு நடப்பை படம்பிடித்து காட்டுவதாக அமைந்து இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது.
நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவாயின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம் மற்றும் மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு காரணம்தான் என்ற போதிலும், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் குற்றங்களை கல்வி அறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் மூலமும் குறைக்க முடியும்.
ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன.
அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் நிறைந்தாகவும் உள்ளன.
அதனால் தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் பயமின்றி சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றும், தண்டனை வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு கடந்த மாதம் சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.
இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.
இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ப்புகள்-வசதிகள் பெருகி சமுதாயத்தில் வாழ்க்கை தரம் முன்னேற முன்னேற குற்றங்களும் அதிகரிக்கின்றன.
எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டுப்பாடுடன் இருந்த மனிதன், நாகரிக வாழ்க்கையின் சுவையை அறிந்த பின்னர் தான் குற்றங்களை செய்ய ஆரம்பித்தான்.
நம் வீட்டில் இருக்கும் தாத்தா-பாட்டிகளிடம் கேட்டால் தெரியும்.. “நாடே ரொம்ப கெட்டுப்போய்விட்டது” என்று அங்கலாய்ப்பார்கள். “எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி வெட்டு, குத்து, கொலைகள், பாலியல் வன்முறைகள் நடந்தது கிடையாது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். இப்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது” என்று ஆதங்கப்படுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த வருத்தம் நாட்டு நடப்பை படம்பிடித்து காட்டுவதாக அமைந்து இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது.
நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவாயின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம் மற்றும் மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு காரணம்தான் என்ற போதிலும், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் குற்றங்களை கல்வி அறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் மூலமும் குறைக்க முடியும்.
ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன.
அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் நிறைந்தாகவும் உள்ளன.
அதனால் தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் பயமின்றி சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றும், தண்டனை வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு கடந்த மாதம் சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.
இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.
இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலக்கீரை, கேரட் இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்,
நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப்,
கேரட் துருவல் - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:
பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான பாலக் - கேரட் தோசை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை மாவு - ஒரு கப்,
நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப்,
கேரட் துருவல் - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:
பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான பாலக் - கேரட் தோசை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரை இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
பெயர் விளக்கம் : ‘அர்த்த’ என்றால் பாதி. இந்த ஆசனம் பத்மாசனத்தின் பாதி நிலையாக இருப்பதால் அர்த்த பத்மாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை : முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது காலை மடக்கி உள்ளங்காலை வலது தொடையின் அடிப்பகுதியில் சேர்த்து வைக்கவும். வலது காலை மடக்கி இடது தொடையின் மேல் வைக்கவும். இரண்டு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். முழங்கைகள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும். முதுகு, கழுத்து, தலை, ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும் தடைக்குறிப்பு:- இடுப்பு சந்துவாரம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள் : முதுகெலும்பு நேராக நிமிர்ந்து நிற்பதாலும் கால்கள் அழுத்தப்படுவதாலும் உடலின் கீழ் பகுதியிலிருந்து மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்பட்டு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
பெயர் விளக்கம் : ‘அர்த்த’ என்றால் பாதி. இந்த ஆசனம் பத்மாசனத்தின் பாதி நிலையாக இருப்பதால் அர்த்த பத்மாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை : முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது காலை மடக்கி உள்ளங்காலை வலது தொடையின் அடிப்பகுதியில் சேர்த்து வைக்கவும். வலது காலை மடக்கி இடது தொடையின் மேல் வைக்கவும். இரண்டு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். முழங்கைகள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும். முதுகு, கழுத்து, தலை, ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும் தடைக்குறிப்பு:- இடுப்பு சந்துவாரம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள் : முதுகெலும்பு நேராக நிமிர்ந்து நிற்பதாலும் கால்கள் அழுத்தப்படுவதாலும் உடலின் கீழ் பகுதியிலிருந்து மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்பட்டு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடைபிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.
நிறைய உடல் நல செய்திகளை இன்று பத்திரிகைகளும், ஊடகங்களும் தரும் காரணத்தினால் நிறையவே தெரிந்து கொள்கிறோம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி இவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றோம். ஆனால் சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடை பிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.
அவரவர் உயரம், எடைக்கு ஏற்ப body man index BMI) வேண்டும். இதனை தமிழில் உடல் நிலை குறியீட்டெண் என்று சொல்வார்கள். உயரம், எடைக்கேற்ப இந்த குறியீட்டெண் சரியாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பது பல நோய்களில் குறிப்பாக Etatolic Syndrome எனப்படும் சரக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்டிரால், அதிகமாக வயிற்றில் கொழுப்பு.
இதன் காரணமாக இருதய பாதிப்பு, பக்க வாதம் எனும் பிரச்சினைகளை எளிதில் கூட்டி வந்து விடும். இவை இந்தியர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகவே ஏற்படுகின்றன. கர்ப்பமாக திட்டமிடும் மணமான பெண்கள் முதலிலேயே நல்ல மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் நல்ல கொழுப்பு இருந்து கெட்ட கொழுப்பு நீங்க நல்ல உடற்பயிற்சி, நடை பயிற்சி மட்டுமே கை கொடுக்கும்.
* முழு ரத்த பரிசோதனை
கொழுப்பு பரிசோதனை
சிறு நீரக பரிசோதனை
கல்லீரல் பரிசோதனை
சர்க்கரை அளவு பரிசோதனை
ஆகியவை இன்றைய கால சூழ்நிலையில் பல நேரங்களில் அவசியமாகின்றது.
கிட்டத்தட்ட 60-75 சதவீத பெண்கள் ரத்த சோகை பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். மேலும் பரம்பரையாக குடும்ப நபர்களுக்கு பாதிப்பு இருப்பின் அடுத்த தலைமுறை கண்டிப்பாய் அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
அதிக கார்போ ஹைடிரேட் அதாவது மாவு சத்து உணவுகளைக் குறைத்து விடுங்கள். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் இதிலிருந்து வந்து விடும். பெண்ணே எந்த வயதிலும் ஆரோக்கியமாய் வாழலாமே!
அவரவர் உயரம், எடைக்கு ஏற்ப body man index BMI) வேண்டும். இதனை தமிழில் உடல் நிலை குறியீட்டெண் என்று சொல்வார்கள். உயரம், எடைக்கேற்ப இந்த குறியீட்டெண் சரியாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பது பல நோய்களில் குறிப்பாக Etatolic Syndrome எனப்படும் சரக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்டிரால், அதிகமாக வயிற்றில் கொழுப்பு.
இதன் காரணமாக இருதய பாதிப்பு, பக்க வாதம் எனும் பிரச்சினைகளை எளிதில் கூட்டி வந்து விடும். இவை இந்தியர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகவே ஏற்படுகின்றன. கர்ப்பமாக திட்டமிடும் மணமான பெண்கள் முதலிலேயே நல்ல மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் நல்ல கொழுப்பு இருந்து கெட்ட கொழுப்பு நீங்க நல்ல உடற்பயிற்சி, நடை பயிற்சி மட்டுமே கை கொடுக்கும்.
* முழு ரத்த பரிசோதனை
கொழுப்பு பரிசோதனை
சிறு நீரக பரிசோதனை
கல்லீரல் பரிசோதனை
சர்க்கரை அளவு பரிசோதனை
ஆகியவை இன்றைய கால சூழ்நிலையில் பல நேரங்களில் அவசியமாகின்றது.
கிட்டத்தட்ட 60-75 சதவீத பெண்கள் ரத்த சோகை பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். மேலும் பரம்பரையாக குடும்ப நபர்களுக்கு பாதிப்பு இருப்பின் அடுத்த தலைமுறை கண்டிப்பாய் அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
அதிக கார்போ ஹைடிரேட் அதாவது மாவு சத்து உணவுகளைக் குறைத்து விடுங்கள். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் இதிலிருந்து வந்து விடும். பெண்ணே எந்த வயதிலும் ஆரோக்கியமாய் வாழலாமே!
கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நீர்ச்சத்தை அதிகம் இழந்தால் சிறுநீரகம் செயல்படுவது பாதிக்கப்படும்.
கோடையில், காலையில், மயங்கி விழுந்தனர் என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். கடுமையான வெயில் நேரத்தில் வெளியே நேரடியாகச் சூரிய வெப்பம் தாக்குமாறு போகாமல் இருப்பது நல்லது-. கண்களின் பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவது நல்லது-. மண்பானைகளில் நீர் ஊற்றி வைத்து அருந்துவது நல்லது.
மோர், தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியன உடலைக் குளிர்விக்கும். சாதத்தில் நீர் ஊற்றி வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பது உஷ்ணத்தைத் தணிக்கும். அத்துடன் மோர் கலந்து கொள்ளலாம். மோர் மற்றும் நீராகாரத்துடன் இஞ்சி, கறிவேப்பிலை, துளி பெருங்காயம், உப்புக் கலந்து குடித்தால் சுவை கூடும்.
கம்பு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ஆகவே கம்பு சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மோர் சேர்த்து சாப்பிடலாம். கம்பங் கூழ் செய்து, அத்துடன் மோர் கலந்து குடிப்பது நல்லது.
உடல்சூடு அதிகம் ஆவதால்தான் தோல் நோய்கள், கோடையில் அதிகரிக்கின்றன. ஆகவே உடல் சூட்டைக் குறைப்பது முதல்படி. திட ஆகாரத்தை நிறுத்தி விட்டு, அல்லது குறைத்து விட்டு திரவ உணவுகளை உட்கொள்வது மிக நல்லது. இதையெல்லாம் மறந்து -விட்ட நிலை இன்று!
36000 நோய்களை தண்ணீர் மட்டுமே குணப்படுத்துவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆகவே அடிக்கடி குளிர்ந்த நீர்அருந்த வேண்டும். அதனால்தான் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும்.
அதுவே உடலைச் சுத்தமாக்கும். 36000 நோயைக் குணமாக்கும் தண்ணீர் சத்தியே! என் உடல் நோயையும் குணப்படுத்து என்று வேண்டி காலையில் தண்ணீர் வெறும் வயிற்றில் அருந்துமாறு சொல்கிறார்கள். தாயைப் பழிந்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று ஒரு பழமொழி இருக்கிறது-.
கங்காமாதா என்று நீரைத் தெய்வமாகக் கொண்டாடும், ஆடிப் பெருக்கின்போது வழிபாடு நடத்தும், நமது மரபு தண்ணீரை வழிபாட்டுப் பொருளாகக் (பஞ்சபூத வழிபாடு) கொண்டாடியதில் வியப்பில்லை.
கங்கையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பேக்டிரியாக்கள் இயல்பிலேயே இருக்கின்றன. கங்கையில் புனிதமாய என்ற சொலவடையே இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது ஒவ்வொரு வீட்டுத் தண்ணீரிலும் கங்கை குடியிருப்பதாக ஐதீகம் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர்.
ஒவ்வொரு வீட்டிலும் கங்கா தீர்த்தம் பூஜையில் இருக்கும். வாழ்வின் இறுதியை எதிர்க்கொள்பவருக்கு அருந்தக் கொடுப்பர்.
இவ்வளவு புனிதமாக நமது மரபுகள் போற்றிய தண்ணீரை எவ்வளவு மாசு படுத்த முடியுமோ அவ்வளவு மாசு படுத்தி விட்டோம். இனி இதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்குபவர்களோடு கை கோர்ப்போம். உற்சாக பானங்கள் அருந்துவதை விட்டு, சுத்தமான தண்ணீர் மட்டும் அருந்துவோம். நமக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் தண்ணீர் தேவை. ஆகவே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோம்.
பழைய காலத்தில் வீடுகளில் தாமிரப் பானைகளில் (தவலை) குடி தண்ணீரைச் சேமிப்பர். தண்ணீர் அருந்தும் செம்பு, டம்ளர் ஆகியவை தாமிரத்தில் இருக்கும்.
தாமிர பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பிஎச் அளவு &7 ஆக இருக்கும். நமது உடலின் பிஎச் அளவும் அதுவே! இன்று மிகுந்த விலை கொடுத்து நாம் வாங்கிக் குடிக்கும் மினரல் வாட்டர் மற்றும் சுத்தப்படுத்தும் மெஷின்கள் வழியே எடுக்கும் தண்ணீர் ஆகியவற்றில் பிஎச் அளவு - 5 என்ற நிலையில் இருக்கும். அதனால், அதைக் குடிக்கும் போது, நமது உடலின்பிஎச்அளவுகுறையத் தொடங்கும். உடலில் அமிலச்சத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் அமிலத்தன்மை அதிகமாகும் போது நோய்கள் வரும் சூழல்உருவாகும். பிஎச் அளவு (ஆல்கலைன் அளவு) சரியாக இருக்கும் போது நோய்ச்சூழல் இருக்காது.
ஆகவே தாமிரபாத்திரத்தில் வைத்து அருந்துவதும் நல்லதே! நமது உடலில் 80 சதவீத நீர்ச்சத்து என்பர். 100சதவீத தண்ணீரைப் பாதுகாப்போம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்துவோம்.
காக்கை குருவி நமது ஜாதி என்று பாரதியார் பாடினார். ஒவ்வொரு வீட்டிலும் திறந்த வெளியில் தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பதுபோல, தண்ணீரும் வைப்போம்.
வெறும் தேனீ மட்டும் அழிந்து விட்டால் உலகம் 4 வருடத்துக்கு மேல் இயங்காது என்பர். மற்ற உயிரினமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயற்கையோடு (பஞ்சபூதம் - நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம்) இணைந்து வாழ்வோம்!
-டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422&2367200, 2313188, 2313194)
கோடையில், காலையில், மயங்கி விழுந்தனர் என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். கடுமையான வெயில் நேரத்தில் வெளியே நேரடியாகச் சூரிய வெப்பம் தாக்குமாறு போகாமல் இருப்பது நல்லது-. கண்களின் பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவது நல்லது-. மண்பானைகளில் நீர் ஊற்றி வைத்து அருந்துவது நல்லது.
மோர், தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியன உடலைக் குளிர்விக்கும். சாதத்தில் நீர் ஊற்றி வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பது உஷ்ணத்தைத் தணிக்கும். அத்துடன் மோர் கலந்து கொள்ளலாம். மோர் மற்றும் நீராகாரத்துடன் இஞ்சி, கறிவேப்பிலை, துளி பெருங்காயம், உப்புக் கலந்து குடித்தால் சுவை கூடும்.
கம்பு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ஆகவே கம்பு சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மோர் சேர்த்து சாப்பிடலாம். கம்பங் கூழ் செய்து, அத்துடன் மோர் கலந்து குடிப்பது நல்லது.
உடல்சூடு அதிகம் ஆவதால்தான் தோல் நோய்கள், கோடையில் அதிகரிக்கின்றன. ஆகவே உடல் சூட்டைக் குறைப்பது முதல்படி. திட ஆகாரத்தை நிறுத்தி விட்டு, அல்லது குறைத்து விட்டு திரவ உணவுகளை உட்கொள்வது மிக நல்லது. இதையெல்லாம் மறந்து -விட்ட நிலை இன்று!
36000 நோய்களை தண்ணீர் மட்டுமே குணப்படுத்துவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆகவே அடிக்கடி குளிர்ந்த நீர்அருந்த வேண்டும். அதனால்தான் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும்.
அதுவே உடலைச் சுத்தமாக்கும். 36000 நோயைக் குணமாக்கும் தண்ணீர் சத்தியே! என் உடல் நோயையும் குணப்படுத்து என்று வேண்டி காலையில் தண்ணீர் வெறும் வயிற்றில் அருந்துமாறு சொல்கிறார்கள். தாயைப் பழிந்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று ஒரு பழமொழி இருக்கிறது-.
கங்காமாதா என்று நீரைத் தெய்வமாகக் கொண்டாடும், ஆடிப் பெருக்கின்போது வழிபாடு நடத்தும், நமது மரபு தண்ணீரை வழிபாட்டுப் பொருளாகக் (பஞ்சபூத வழிபாடு) கொண்டாடியதில் வியப்பில்லை.
கங்கையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பேக்டிரியாக்கள் இயல்பிலேயே இருக்கின்றன. கங்கையில் புனிதமாய என்ற சொலவடையே இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது ஒவ்வொரு வீட்டுத் தண்ணீரிலும் கங்கை குடியிருப்பதாக ஐதீகம் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர்.
ஒவ்வொரு வீட்டிலும் கங்கா தீர்த்தம் பூஜையில் இருக்கும். வாழ்வின் இறுதியை எதிர்க்கொள்பவருக்கு அருந்தக் கொடுப்பர்.
இவ்வளவு புனிதமாக நமது மரபுகள் போற்றிய தண்ணீரை எவ்வளவு மாசு படுத்த முடியுமோ அவ்வளவு மாசு படுத்தி விட்டோம். இனி இதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்குபவர்களோடு கை கோர்ப்போம். உற்சாக பானங்கள் அருந்துவதை விட்டு, சுத்தமான தண்ணீர் மட்டும் அருந்துவோம். நமக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் தண்ணீர் தேவை. ஆகவே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோம்.
பழைய காலத்தில் வீடுகளில் தாமிரப் பானைகளில் (தவலை) குடி தண்ணீரைச் சேமிப்பர். தண்ணீர் அருந்தும் செம்பு, டம்ளர் ஆகியவை தாமிரத்தில் இருக்கும்.
தாமிர பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பிஎச் அளவு &7 ஆக இருக்கும். நமது உடலின் பிஎச் அளவும் அதுவே! இன்று மிகுந்த விலை கொடுத்து நாம் வாங்கிக் குடிக்கும் மினரல் வாட்டர் மற்றும் சுத்தப்படுத்தும் மெஷின்கள் வழியே எடுக்கும் தண்ணீர் ஆகியவற்றில் பிஎச் அளவு - 5 என்ற நிலையில் இருக்கும். அதனால், அதைக் குடிக்கும் போது, நமது உடலின்பிஎச்அளவுகுறையத் தொடங்கும். உடலில் அமிலச்சத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் அமிலத்தன்மை அதிகமாகும் போது நோய்கள் வரும் சூழல்உருவாகும். பிஎச் அளவு (ஆல்கலைன் அளவு) சரியாக இருக்கும் போது நோய்ச்சூழல் இருக்காது.
ஆகவே தாமிரபாத்திரத்தில் வைத்து அருந்துவதும் நல்லதே! நமது உடலில் 80 சதவீத நீர்ச்சத்து என்பர். 100சதவீத தண்ணீரைப் பாதுகாப்போம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்துவோம்.
காக்கை குருவி நமது ஜாதி என்று பாரதியார் பாடினார். ஒவ்வொரு வீட்டிலும் திறந்த வெளியில் தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பதுபோல, தண்ணீரும் வைப்போம்.
வெறும் தேனீ மட்டும் அழிந்து விட்டால் உலகம் 4 வருடத்துக்கு மேல் இயங்காது என்பர். மற்ற உயிரினமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயற்கையோடு (பஞ்சபூதம் - நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம்) இணைந்து வாழ்வோம்!
-டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422&2367200, 2313188, 2313194)
குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இன்று பூண்டு வெஜிடபிள் சேர்த்து சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கேரட் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு வெஜ் நூடுல்ஸ் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கேரட் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு வெஜ் நூடுல்ஸ் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.

தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர்.
அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம். உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும்.
பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும்.
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.

தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர்.
அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம். உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும்.
பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும்.
பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
* அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.
* உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.
* பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.
* நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.
* யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.
* விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.
இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும்.
ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
* அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.
* உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.
* பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.
* நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.
* யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.
* விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.
இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும்.
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு,
பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை :
மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பாலை நன்கு ஆற விடவும்.
கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.
சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு,
பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை :
மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பாலை நன்கு ஆற விடவும்.
கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.
சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.
கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.
* வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.
* சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
* சருமம் ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தால் வெள்ளரிக்காய் பயன்படுத்தி தீர்வு காணலாம். வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிய வேண்டும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
* வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.
* சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
* சருமம் ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தால் வெள்ளரிக்காய் பயன்படுத்தி தீர்வு காணலாம். வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிய வேண்டும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரைகளும் உள்ளன.
ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரைகளும் உள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
பெயர் விளக்கம்: ‘சின்’ என்றால் ஞானம். முத்திரை என்றால் அடையாளம். இம்முத்திரை ஞானத்தை உணர்த்தும் அடையாளமாக இருப்பதால் சின்முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும், கைகளை நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த கால்முட்டிகளின் மேல் வைக்கவும். கட்டை விரல்களின் நுனியில் ஆள்காட்டி விரலின் நுனிபடும் படியாகவோ அல்லது கட்டை விரலின் அடியில் நீட்டி வைக்கவும்.
தியானப் பயிற்சியின் போது கை விரல்களால் செய்யும் முத்திரைகளில் மிகச் சிறந்தது சின்முத்திரையாகும். தியான ஆசனத்தில் உள்ளங்கைகள் மேல்நோக்கியபடி வைத்து செய்யவும்.
பயன்கள்: கை மணிக்கட்டுகளின் இருப்பக்க ஓரத்திலும் இருதயத்தின் வேகமான துடிப்பை குறைக்கவும் நரம்புகள் செல்கிறது. இப்பயிற்சியில் கை மணிக்கட்டுகளின் ஓரப்பகுதி நன்கு அழுத்தப்படுவதால் இருதயம் மற்றும் நுரையீரலின் வேகமான இயக்கம் குறைக்கப்படுவதன் மூலம் மூச்சின் வேகமும் குறைந்து மனம் அமைதி அடைந்து தியானத்தில் முழுமையாக ஈடுபட உதவுகிறது.
பெயர் விளக்கம்: ‘சின்’ என்றால் ஞானம். முத்திரை என்றால் அடையாளம். இம்முத்திரை ஞானத்தை உணர்த்தும் அடையாளமாக இருப்பதால் சின்முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும், கைகளை நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த கால்முட்டிகளின் மேல் வைக்கவும். கட்டை விரல்களின் நுனியில் ஆள்காட்டி விரலின் நுனிபடும் படியாகவோ அல்லது கட்டை விரலின் அடியில் நீட்டி வைக்கவும்.
தியானப் பயிற்சியின் போது கை விரல்களால் செய்யும் முத்திரைகளில் மிகச் சிறந்தது சின்முத்திரையாகும். தியான ஆசனத்தில் உள்ளங்கைகள் மேல்நோக்கியபடி வைத்து செய்யவும்.
பயன்கள்: கை மணிக்கட்டுகளின் இருப்பக்க ஓரத்திலும் இருதயத்தின் வேகமான துடிப்பை குறைக்கவும் நரம்புகள் செல்கிறது. இப்பயிற்சியில் கை மணிக்கட்டுகளின் ஓரப்பகுதி நன்கு அழுத்தப்படுவதால் இருதயம் மற்றும் நுரையீரலின் வேகமான இயக்கம் குறைக்கப்படுவதன் மூலம் மூச்சின் வேகமும் குறைந்து மனம் அமைதி அடைந்து தியானத்தில் முழுமையாக ஈடுபட உதவுகிறது.






