என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.
என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள். இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.
சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.
ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.
தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.
இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள். இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.
சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.
சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.
ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.
தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.
இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு

செய்முறை :
மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.
அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் தளதளவென்று அல்வா வந்ததும், வறுத்த முந்திரியை சேர்த்து சிறிது நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் அல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ அல்வா தயார்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாம்பழம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு

செய்முறை :
மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.
அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் தளதளவென்று அல்வா வந்ததும், வறுத்த முந்திரியை சேர்த்து சிறிது நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் அல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ அல்வா தயார்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொடுகு தொல்லையால் கூந்தல் அதிகளவு உதிர ஆரம்பிக்கும். பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.
கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.
அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.
வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.
வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்சனைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.
தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினாலும் பொடுகு மறையும்.
அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.
வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.
வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்சனைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.
தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினாலும் பொடுகு மறையும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய்ப்பால் குடிப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமை. அதைக்கொடுப்பது தாயின் கடமை. அன்னையை நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தைக்கு தாயார் 6 மாதம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் சதவீதம் தமிழகத்தில் 50 சதவீதம்தான் இருக்கிறது.
இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குழந்தை பெற்ற தாய்மார்கள் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தடைபடுகிறது. இதனால் டப்பா பால், பவுடர் பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு புகட்டும் நிலை உருவாகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்தான் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தடிமன் குறைவாக இருக்கும். டப்பா பால், பவுடர் பால் கொடுத்து குழந்தைப் பருவத்தில் தடிமனாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவை வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய், வாந்தி-பேதி, நிமோனியா, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் அவர்களது உடல் வாகு, மனது இலகுவாகும். பெண்களின் அழகும் அதிகரிக்கும்.
அரசு துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கு பிரசவ கால விடுப்பாக முதலில் 6 மாதம் வழங்கப்பட்டது. தற்போது 10 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும்போதும் இடைவேளை நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்ப்பாலை எடுத்து 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தட்ப-வெப்ப நிலையில் வைத்திருந்தும் குழந்தைகளுக்கு புகட்டலாம்.
பிரசவத்துக்குப்பிறகு பதற்றம், இனம்புரியாத பயம், மன அழுத்தம், சந்தேகம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதனால் பிரசவமான பெண்கள் மன அழுத்தம், பயம் போன்றவற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குழந்தை பெற்ற தாய்மார்கள் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தடைபடுகிறது. இதனால் டப்பா பால், பவுடர் பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு புகட்டும் நிலை உருவாகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்தான் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தடிமன் குறைவாக இருக்கும். டப்பா பால், பவுடர் பால் கொடுத்து குழந்தைப் பருவத்தில் தடிமனாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவை வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய், வாந்தி-பேதி, நிமோனியா, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மேலும் அவர்களது உடல் வாகு, மனது இலகுவாகும். பெண்களின் அழகும் அதிகரிக்கும்.
அரசு துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கு பிரசவ கால விடுப்பாக முதலில் 6 மாதம் வழங்கப்பட்டது. தற்போது 10 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும்போதும் இடைவேளை நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தாய்ப்பாலை எடுத்து 6 முதல் 8 மணி நேரம் வரை சாதாரண தட்ப-வெப்ப நிலையில் வைத்திருந்தும் குழந்தைகளுக்கு புகட்டலாம்.
பிரசவத்துக்குப்பிறகு பதற்றம், இனம்புரியாத பயம், மன அழுத்தம், சந்தேகம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறது. அதனால் பிரசவமான பெண்கள் மன அழுத்தம், பயம் போன்றவற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கை வைத்து சுவையான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று நுங்கு சேர்த்து மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப்,
கடைந்த மோர் - கால் லிட்டர்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி - தலா சிறிதளவு,
பச்சை மிளகாய் - சிறியது ஒன்று,

செய்முறை :
இஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.
பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப்,
கடைந்த மோர் - கால் லிட்டர்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி - தலா சிறிதளவு,
பச்சை மிளகாய் - சிறியது ஒன்று,

செய்முறை :
இஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.
பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
பெயர் விளக்கம்: ‘நாசாக்ர’ என்றால் நாசியின் நுனிப்பகுதி என்று பொருள். இரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: வலது கை மோதிர விரலோடு சிறுவிரலை சேர்த்து வைத்து ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை நீட்டி வைக்கவும்.
எப்பொழுது பயிற்சி செய்யலாம்: நாடி சோதனா போன்ற சில குறிப்பிட்ட பிராணாயாமத்தின் போது இந்த முத்திரை பயன்படுகிறது.
பயன்கள்:- பிராணாயாமப் பயிற்சியில் நாசிகளில் அளவாக காற்றை இழுக்கவும், குறிப்பிட்ட நாசியை அடைத்து மற்றொன்றின் வழியாக சுவாசத்தை நடத்தவும் பயன்படுகிறது.
செய்முறை: வலது கை மோதிர விரலோடு சிறுவிரலை சேர்த்து வைத்து ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை நீட்டி வைக்கவும்.
எப்பொழுது பயிற்சி செய்யலாம்: நாடி சோதனா போன்ற சில குறிப்பிட்ட பிராணாயாமத்தின் போது இந்த முத்திரை பயன்படுகிறது.
பயன்கள்:- பிராணாயாமப் பயிற்சியில் நாசிகளில் அளவாக காற்றை இழுக்கவும், குறிப்பிட்ட நாசியை அடைத்து மற்றொன்றின் வழியாக சுவாசத்தை நடத்தவும் பயன்படுகிறது.
வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளில் உள்ள மின் சாதனங்களில் இணைப்பு பழுது ஏற்பட்டு மின்சார அதிர்ச்சிக்கு பலரும் உள்ளாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து விடுகின்றன.
வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அனைத்திலும் தக்க இணைப்புகள் மற்றும் ஒயர்கள் மூலம் மின்சார பயன்பாடு இருந்து வருகிறது. அவற்றில் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுவாக அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளில் உள்ள மின் சாதனங்களில் இணைப்பு பழுது ஏற்பட்டு மின்சார அதிர்ச்சிக்கு பலரும் உள்ளாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து விடுகின்றன.
எச்சரிக்கை குறிப்புகள்
மின்சாரம் மூலம் இயங்கும் வீட்டு உபயோக பொருட்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும், பாதிப்புகளை தவிர்க்க அவற்றில் எந்த விதங்களில் பழுது ஏற்படலாம் என்பதை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்பட மின்பொறியியல் வல்லுனர்கள் மற்றும் எலக்ட்ரிஷியன்கள் ஆகியோர் அளிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம்.
மூன்று விதங்கள்
பொதுவாக, மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகள் மூன்று விதங்களாக உள்ளன. அதாவது, ஒப்பன் சர்க்கியூட் பால்ட் (Open Circuit Fault), சார்ட் சர்க்கியூட் பால்ட் (Short Circuit Fault) மற்றும் எர்த் அல்லது லீக்கேஜ் பால்ட் (Earth fault and Leakage Fault) ஆகியயனவாகும்.

மின் சுற்றில் தடை (Open Circuit Fault)
மின் கடத்தா பொருட்கள் மூலம் தக்க பாதுகாப்பு உறைகள் கொண்டு மூடப்பட்ட ஒயர்கள் மூலம் மின்சாரம் வீடுகளுக்குள் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஒயர்கள் ஏதாவது காரணங்களால் பாதிக்கப்படும்போது மின் பாதையில் தடை ஏற்பட்டு, மேற்கொண்டு மின்சாரம் செல்வதில்லை. சம்பந்தப்பட்ட உபகரணங்களை இணைக்கும் ஒயர்கள் துண்டிக்கப்படுவது, எரிந்து விடுவது, துரு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது அல்லது தளர்வான இணைப்பு ஆகியவற்றால் மின் சுற்றில் தடை ஏற்படலாம்.
குறை மின்னழுத்த பாதிப்பு (Short Circuit Fault)
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் தேவையான அளவை விடவும் குறைவான அழுத்தத்தில் அல்லது கூடுதலான அழுத்தத்தில் மின்சாரம் செல்லும்போது, அதற்கான பியூஸ் இணைப்பு எரிந்து, மின்சார இணைப்பு தடுக்கப்படுகிறது. பொதுவாக, தளர்வான இணைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பாதிப்பு ஆகியவற்றால் குறை மின்னழுத்த பாதிப்பு ஏற்படுத்துகிறது.
தரை இணைப்பு மற்றும் மின்கசிவு
பொதுவாக, கிரைண்டர் போன்ற சாதனங்களுக்கு ‘எர்த்திங்’ எனப்படும் தரை இணைப்பு அவசியமானது. அவ்வாறு தரை இணைப்பு கொடுக்கப்படாத சமயங்களில் பியூஸ் இணைப்பில் பாதிப்பு உண்டாகும்போது மின் சாதனங்கள் மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மின் சாதனங்களில் உள்ள ஒயர் இணைப்புகள் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியான மின்னோட்டம் காரணமாக அதை தொடுபவர்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்படுகிறது.
எச்சரிக்கை குறிப்புகள்
மின்சாரம் மூலம் இயங்கும் வீட்டு உபயோக பொருட்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும், பாதிப்புகளை தவிர்க்க அவற்றில் எந்த விதங்களில் பழுது ஏற்படலாம் என்பதை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்பட மின்பொறியியல் வல்லுனர்கள் மற்றும் எலக்ட்ரிஷியன்கள் ஆகியோர் அளிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம்.
மூன்று விதங்கள்
பொதுவாக, மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகள் மூன்று விதங்களாக உள்ளன. அதாவது, ஒப்பன் சர்க்கியூட் பால்ட் (Open Circuit Fault), சார்ட் சர்க்கியூட் பால்ட் (Short Circuit Fault) மற்றும் எர்த் அல்லது லீக்கேஜ் பால்ட் (Earth fault and Leakage Fault) ஆகியயனவாகும்.

மின் சுற்றில் தடை (Open Circuit Fault)
மின் கடத்தா பொருட்கள் மூலம் தக்க பாதுகாப்பு உறைகள் கொண்டு மூடப்பட்ட ஒயர்கள் மூலம் மின்சாரம் வீடுகளுக்குள் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஒயர்கள் ஏதாவது காரணங்களால் பாதிக்கப்படும்போது மின் பாதையில் தடை ஏற்பட்டு, மேற்கொண்டு மின்சாரம் செல்வதில்லை. சம்பந்தப்பட்ட உபகரணங்களை இணைக்கும் ஒயர்கள் துண்டிக்கப்படுவது, எரிந்து விடுவது, துரு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது அல்லது தளர்வான இணைப்பு ஆகியவற்றால் மின் சுற்றில் தடை ஏற்படலாம்.
குறை மின்னழுத்த பாதிப்பு (Short Circuit Fault)
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் தேவையான அளவை விடவும் குறைவான அழுத்தத்தில் அல்லது கூடுதலான அழுத்தத்தில் மின்சாரம் செல்லும்போது, அதற்கான பியூஸ் இணைப்பு எரிந்து, மின்சார இணைப்பு தடுக்கப்படுகிறது. பொதுவாக, தளர்வான இணைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பாதிப்பு ஆகியவற்றால் குறை மின்னழுத்த பாதிப்பு ஏற்படுத்துகிறது.
தரை இணைப்பு மற்றும் மின்கசிவு
பொதுவாக, கிரைண்டர் போன்ற சாதனங்களுக்கு ‘எர்த்திங்’ எனப்படும் தரை இணைப்பு அவசியமானது. அவ்வாறு தரை இணைப்பு கொடுக்கப்படாத சமயங்களில் பியூஸ் இணைப்பில் பாதிப்பு உண்டாகும்போது மின் சாதனங்கள் மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மின் சாதனங்களில் உள்ள ஒயர் இணைப்புகள் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியான மின்னோட்டம் காரணமாக அதை தொடுபவர்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்படுகிறது.
நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
வைட்டமின்கள், தாது உப்புகள் பற்றி நிறைய தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அதனை சரியாகப் பெறுகின்றோமா, பயன் படுத்துகின்றோமா என்றால் முழுமையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கு சிறிதளவு பலன் கூட கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை அவர்கள் மருத்துவரிடம்சென்று பெறவில்லை என்றே சொல்லலாம்.
அதில் வைட்டமின் பி12 பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.
நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ரத்த சிகப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறிப்பிட்ட பிரிவு ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் பொழுது ரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக சோர்வு, சக்தியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த வைட்டமின் பி12 அதிக அசைவ உணவுகளான மீன், முட்டை, பால், மாமிச உணவுகள் இவற்றில் உள்ளது. சோயா, பாதாம் இவற்றிலும் உள்ளது.
வைட்டமின் பி12 இருதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு பாதிப்பு குறைகிறது.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
பி12 உங்கள் நரம்பு மண்டலத்தினை மிகச் சிறப்பாக பாதுகாக்கின்றது. இதில் குறைபாடு இருக்கும் பொழுது கை, கால் விரல் நுனிகளில் மரத்து போதல், ஊசி குத்துவது போல் இருத்தல், குறுகுறுப்பு போன்ற பாதிப்பினை உணர்வீர்கள். வைட்டமின் பி12 மையலின் என்ற ஒரு உறையினை நரம்புகளின் மீது அளித்து நரம்பினை பாதுகாக்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நரம்பு மண்டலம் சீராய் இராது.
வைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்
* கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, குறுகுறுப்பு போன்றவை.
* ரொம்பவும் ஓய்ந்து போகுதல்
* வெளிரிய அல்லது மஞ்சள் நிற சருமம்.
* வைட்டமின் பி12 குறைபாடு மஞ்சள் காமாலையினைக் கூட ஏற்படுத்தலாம்.
* மிக அதிக அளவு பி12 குறைந்து இருந்தால் சில வகை புற்று நோய் பாதிப்பிற்கான ஆய்வுகள் செய்யப் படுகின்றன.
* சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
* நெஞ்செரிச்சல் பாதிப்பு உடையவர்கள் அதற்கான மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* அதிக ஞாபக மறதி ஏற்படுகின்றதா? உங்கள் பி12 அளவினை மருத்துவர் மூலம் சோதித்து குறைபாட்டினை சரி செய்து கொள்ளுங்கள்.
* 50 வயதினைத் தாண்டியவர்களுக்கு வயிற்றில் ஆசிட் சுரப்பது குறைந்து இருக்கும். வயிற்றில் ஆசிட் பி12 சத்தினை உறிஞ்சிக் கொள்வதற்குத் தேவையாகின்றது. எனவே 50 வயதினைத் தாண்டியவர்கள் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுங்கள்.
* உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தினைப் பற்றி கூறிவிடும். பி12 குறைபாடு நாக்கில் வீக்கத்தினைக் கொடுக்கும். இதனால் சாப்பிட, பேச கடினமாய் இருக்கும்

வைட்டபின் பி 12 குறைபாடு கண் நரம்பியல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம். பி12 குறைபாடு தொடரும் பொழுது நடப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு விழுந்து விடலாம். சருமம் பொலிவின்றி இருக்கலாம். பி12 குறைபாடு வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ உதவியுடன் பி12 எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கம்பீரமான தோற்றம்: நிமிர்ந்து நிற்றல், கூன் போடாது இருத்தல், நாற்காலியில் நத்தை போல் சுருண்டு அலுங்காது நிமிர்ந்து அமருதல். இவை அனைத்தும் நம் தோற்ற மதிப்பினைக் கூட்டும். தன்னம்பிக்கையினைத் தரும். உடலினை ஆரோக்கியமாய் வைக்கும். நடக்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ, வண்டி வாகனம் ஓட்டும் பொழுதோ முதுகு நிமிர்ந்து இருப்பதே சரியானது. உங்களை நீங்களே கவனித்து பாருங்கள்.
இவ்வாறு நீங்கள் இல்லை என்று உங்களுக்கே புரியும். அநேகமாக நீங்கள் அமரும் நாற்காலி முறையானதாக இல்லாது இருக்கும். பைக், சைக்கிள் இவற்றில் செல்பவர்கள் கூட படிந்து, கோணலாகத்தான் செல்கின்றனர். இதன் பெயர் ஸ்டைல் என்று கூறிக் கொள்கின்றனர். முறையான வழிகளை நீங்கள் கடை பிடிக்காவிட்டால் உங்கள் தண்டு வடம் சுருண்டு, உருவிழந்து ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நிமிர்ந்து அமருதல்: நிமிர்ந்து அமருவதன் மூலம் நம் மூளைக்கு நாமே செல்லித் தருகின்றோம். ‘நான் ஆரோக்கியமாய் இருக்கின்றேன்’ என்று. கூன் போட்டு, வளைந்து உட்காருவது நம் மூளையினை ரொம்ப சோர்வாக, மன உளைச்சலுடன் உணரக் செய்யும். ஆக நாம் மேலும் சோர்வாக மன உளைச்சலுடன் இருப்போம்.
நிமிர்ந்து அமருவது நம்மை ஆக்கப் பூர்வமாகவும் மகிழ்வாகவும் ஆக்கும். மேலும் மடங்கி சுருங்கி அமர்பவர்கள் எப்போதும் சோகமாக, அழிவுப் பூர்வமாகவே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாம். நிமிர்ந்து அமர்தல் முறையான சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும். மடிந்து, கோணலாக அமரும் பொழுது சீரான ரத்த ஓட்டம் இருப்பதில்லை.
நிமிர்ந்த தோற்றம் ஜீரண சக்தியினை சீராக்கும். நிமிர்த்த தோற்றம் தலைவலி பாதிப்பு இல்லாது இருக்கும். கழுத்து இறுகாது, வலு விழக்காது இருக்கும்.
நிமிர்ந்த தோற்றம் முதுகு வலி இல்லாது இருக்கச் செய்யும். இவற்றினைப் படித்த பிறகு நிமிர்ந்த நடை, கூனின்றி அமர்தல், முறையாக வண்டி ஓட்டுதல் ஆகியவற்றினைச் செய்வோமாக.
அதில் வைட்டமின் பி12 பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.
நீங்கள் சோர்வாக அசதியாக இருக்கின்றீர்கள் என்றால் எந்த காரணமும் சொல்லாமல் உங்கள் வைட்டமின் பி12 சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ரத்த சிகப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது குறிப்பிட்ட பிரிவு ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் பொழுது ரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக சோர்வு, சக்தியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த வைட்டமின் பி12 அதிக அசைவ உணவுகளான மீன், முட்டை, பால், மாமிச உணவுகள் இவற்றில் உள்ளது. சோயா, பாதாம் இவற்றிலும் உள்ளது.
வைட்டமின் பி12 இருதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு பாதிப்பு குறைகிறது.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
பி12 உங்கள் நரம்பு மண்டலத்தினை மிகச் சிறப்பாக பாதுகாக்கின்றது. இதில் குறைபாடு இருக்கும் பொழுது கை, கால் விரல் நுனிகளில் மரத்து போதல், ஊசி குத்துவது போல் இருத்தல், குறுகுறுப்பு போன்ற பாதிப்பினை உணர்வீர்கள். வைட்டமின் பி12 மையலின் என்ற ஒரு உறையினை நரம்புகளின் மீது அளித்து நரம்பினை பாதுகாக்கின்றது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நரம்பு மண்டலம் சீராய் இராது.
வைட்டமின் பி12 குறைபாட்டை காட்டும் அறிகுறிகள்
* கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, குறுகுறுப்பு போன்றவை.
* ரொம்பவும் ஓய்ந்து போகுதல்
* வெளிரிய அல்லது மஞ்சள் நிற சருமம்.
* வைட்டமின் பி12 குறைபாடு மஞ்சள் காமாலையினைக் கூட ஏற்படுத்தலாம்.
* மிக அதிக அளவு பி12 குறைந்து இருந்தால் சில வகை புற்று நோய் பாதிப்பிற்கான ஆய்வுகள் செய்யப் படுகின்றன.
* சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
* நெஞ்செரிச்சல் பாதிப்பு உடையவர்கள் அதற்கான மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* அதிக ஞாபக மறதி ஏற்படுகின்றதா? உங்கள் பி12 அளவினை மருத்துவர் மூலம் சோதித்து குறைபாட்டினை சரி செய்து கொள்ளுங்கள்.
* 50 வயதினைத் தாண்டியவர்களுக்கு வயிற்றில் ஆசிட் சுரப்பது குறைந்து இருக்கும். வயிற்றில் ஆசிட் பி12 சத்தினை உறிஞ்சிக் கொள்வதற்குத் தேவையாகின்றது. எனவே 50 வயதினைத் தாண்டியவர்கள் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுங்கள்.
* உங்கள் நாக்கு உங்கள் ஆரோக்கியத்தினைப் பற்றி கூறிவிடும். பி12 குறைபாடு நாக்கில் வீக்கத்தினைக் கொடுக்கும். இதனால் சாப்பிட, பேச கடினமாய் இருக்கும்

வைட்டபின் பி 12 குறைபாடு கண் நரம்பியல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம். பி12 குறைபாடு தொடரும் பொழுது நடப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு விழுந்து விடலாம். சருமம் பொலிவின்றி இருக்கலாம். பி12 குறைபாடு வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ உதவியுடன் பி12 எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கம்பீரமான தோற்றம்: நிமிர்ந்து நிற்றல், கூன் போடாது இருத்தல், நாற்காலியில் நத்தை போல் சுருண்டு அலுங்காது நிமிர்ந்து அமருதல். இவை அனைத்தும் நம் தோற்ற மதிப்பினைக் கூட்டும். தன்னம்பிக்கையினைத் தரும். உடலினை ஆரோக்கியமாய் வைக்கும். நடக்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ, வண்டி வாகனம் ஓட்டும் பொழுதோ முதுகு நிமிர்ந்து இருப்பதே சரியானது. உங்களை நீங்களே கவனித்து பாருங்கள்.
இவ்வாறு நீங்கள் இல்லை என்று உங்களுக்கே புரியும். அநேகமாக நீங்கள் அமரும் நாற்காலி முறையானதாக இல்லாது இருக்கும். பைக், சைக்கிள் இவற்றில் செல்பவர்கள் கூட படிந்து, கோணலாகத்தான் செல்கின்றனர். இதன் பெயர் ஸ்டைல் என்று கூறிக் கொள்கின்றனர். முறையான வழிகளை நீங்கள் கடை பிடிக்காவிட்டால் உங்கள் தண்டு வடம் சுருண்டு, உருவிழந்து ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நிமிர்ந்து அமருதல்: நிமிர்ந்து அமருவதன் மூலம் நம் மூளைக்கு நாமே செல்லித் தருகின்றோம். ‘நான் ஆரோக்கியமாய் இருக்கின்றேன்’ என்று. கூன் போட்டு, வளைந்து உட்காருவது நம் மூளையினை ரொம்ப சோர்வாக, மன உளைச்சலுடன் உணரக் செய்யும். ஆக நாம் மேலும் சோர்வாக மன உளைச்சலுடன் இருப்போம்.
நிமிர்ந்து அமருவது நம்மை ஆக்கப் பூர்வமாகவும் மகிழ்வாகவும் ஆக்கும். மேலும் மடங்கி சுருங்கி அமர்பவர்கள் எப்போதும் சோகமாக, அழிவுப் பூர்வமாகவே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாம். நிமிர்ந்து அமர்தல் முறையான சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும். மடிந்து, கோணலாக அமரும் பொழுது சீரான ரத்த ஓட்டம் இருப்பதில்லை.
நிமிர்ந்த தோற்றம் ஜீரண சக்தியினை சீராக்கும். நிமிர்த்த தோற்றம் தலைவலி பாதிப்பு இல்லாது இருக்கும். கழுத்து இறுகாது, வலு விழக்காது இருக்கும்.
நிமிர்ந்த தோற்றம் முதுகு வலி இல்லாது இருக்கச் செய்யும். இவற்றினைப் படித்த பிறகு நிமிர்ந்த நடை, கூனின்றி அமர்தல், முறையாக வண்டி ஓட்டுதல் ஆகியவற்றினைச் செய்வோமாக.
சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்த கோதுமை சேமியாவை வைத்து எளிய முறையில் சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை சேமியா - 250 கிராம்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று ,
பீன்ஸ் - 3,
கேரட் - ஒன்று,
பிரிஞ்சி இலை - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
உருளைக்கிழங்கு - ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை சேமியா - 250 கிராம்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று ,
பீன்ஸ் - 3,
கேரட் - ஒன்று,
பிரிஞ்சி இலை - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
உருளைக்கிழங்கு - ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்! “மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால், உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம். பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது. சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது. மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு. ஆனால் அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால், உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம். பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது. சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது. மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு. ஆனால் அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு ஆகும். இயற்கை முறையில் அஜீரண பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகளை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, ஜீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
சாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோவக்காய் - அரை கிலோ,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க :
தேங்காய் - ஒரு சில்லு,
வரமிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 4,
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கோவக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்.
கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கோவக்காய் பொரியல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோவக்காய் - அரை கிலோ,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க :
தேங்காய் - ஒரு சில்லு,
வரமிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 4,
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கோவக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்.
கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கோவக்காய் பொரியல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






