என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
    அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா?

    தாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன்? மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி? என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.

    தாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?

    * வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா? இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா? இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.

    * மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா? இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா? இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.

    * உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா?

    * வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா?

    * விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா?

    * வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா? கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா?

    இதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.

    எப்படி சரி செய்வது?

    * விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.

    * கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.

    * மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.

    * பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.

    * காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.

    * மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.

    * இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.

    * பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.

    இதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும். 
    ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்
    ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்.

    பொதுவாக ஆண்கள் கட்டுகோப்பான உடலையே மிகவும் ஆசைப்படுவர். சிக்ஸ் பேக் வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை வைத்த பின், மெயின்டெயின் செய்வது அதை விட கடினம்.

    சிக்ஸ் பேக்கின் மோகம் குறையாமல் ஆண்களிடம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை பலர் அறியவில்லை.

    சிக்ஸ் பேக் மெயின்டெயின் செய்வதற்கு உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஸ்டிராய்டு உட்கொள்கின்றனர். ஸ்டிராய்டு எடுத்து கொள்வதால் ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு போன்றவற்றை ஏற்படும்.
     
    உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    சிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலின் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து புரதசத்தை அதிகரிக்க வைக்கின்றனர். இப்படி புரதசத்தை அதிகரித்தால் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.

    அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பம் அதிகமாகும். வலிமையான தசைநார்கள் தான் அவசியம். அது இருந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.

    சிக்ஸ் பேக் வைப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி கடுமையான உடல் வலி, பிரச்சனைகளைதான் கொடுக்கும். அழகுக்கு ஆசைப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்!
     
    புலாவ், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபி கார்ன் வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பேபிகார்ன் - 500 கிராம்,
    மிளகாய்த் தூள் - 10 கிராம்,
    மல்லித்தூள் - 10 கிராம்,
    அரிசி மாவு - 10 கிராம்,
    இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்,
    எலுமிச்சைச் சாறு - 1 பழம்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பேபி கார்னை கை விரல் அளவில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பேபிகார்னுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பகோடா போல, பேபிகார்ன் கலவையை பொரித்தெடுத்தால்… பேபி கார்ன் வறுவல் ரெடி.

    கூடுதல் ஸ்பைசியாக வேண்டும் என்றால், வறுவலின் மீது சாட் மசாலா தூவிக்கொள்ளலாம்!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நமது நெருங்கிய உறவுகளுக்கு, நண்பருக்கு, தோழிக்கு இவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்திருந்தால் பார்க்க போகும் போது இந்த விஷயங்களை எல்லாம் மறக்கக்கூடாது.
    குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமண வாழ்க்கைக்கு பின் மறு வாழ்க்கை என்றால் அது குழந்தை பிறந்த கணத்தில் இருந்தே தொடங்கி விடும். நமது நெருங்கிய நண்பர்களுக்கு, தோழிகளுக்கு, உறவினர்களில் எவருக்காவது குழந்தை பிறந்திருந்தால் நாம் செய்ய வேண்டியது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    முதலில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி செல்லக்கூடாது. குழந்தை பார்த்து கொள்பவர்களிடம் இந்நேரத்தில் பார்க்க வருகிறோம் என்ற அறிவிப்பு கொடுத்து தான் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு வித தொந்தரவும் இருக்காது.

    மிக குறைந்த நேரமே எடுத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்துவிட்டு, தாயின் நலத்தை விசாரித்து முடித்த பின் மற்றொரு நாள் வருகிறோம் என்று புறப்படுவது நல்லது. ஏனெனில் குழந்தை பார்க்க நிறைய பேர் வந்து செல்வார்கள் நாமும் அதிக நேரம் இருந்தால் மற்றவர்களை கவனிப்பது சிரமாகி விடும்.

    உடல்நிலை சரியில்லை என்றால் பிறந்த குழந்தையை பார்க்க செல்ல வேண்டாம். நமக்கு இருக்கும் நோயின் பாதிப்பு எதுவாக இருந்தாலும் பச்சிளம் குழந்தையை உடனே தாக்குவதற்கு அதிக வாய்ப்புண்டு.

    நாமும் சரி, நமது உடலும் சரி சுத்தமாக இருக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி என்பது பிறந்த குழந்தைக்கு இனிதான் உருவாகும். அதனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும், அசுத்தமான கைகளால் குழந்தையை தூக்குவது நல்லதல்ல.

    குழந்தையை பார்க்க போகும் போது பரிசுகள் நிச்சயம் அவசியமான ஒன்று. என்ன தேவை என்பதை நன்கு அறிந்துவிட்டு பின்பு பார்க்க செல்லுங்கள்.

    முடிந்த வரை குழந்தையை பார்க்க சென்றால் உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து கொடுத்து வாருங்கள்.
    வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகளை பார்க்கலாம்.
    அழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை.

    தன் அழகை பராமரித்து பெர்பெக்ட் தோற்றத்துடன் காட்சியளிப்பது அனைவருக்குமே ஒருவித தன்நம்பிக்கையை கொடுக்கும். ஆதலால், தயங்காமல் ஆரம்பித்து பயனடையுங்கள்.

    இதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள் :

    * பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.



    * முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.

    * கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும். மற்றும் விரைவான பலனுக்கு 'அன்டர் ஐ கிரீம்' பயன்படுத்தலாம்.

    * பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கறுத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.

    * ஆண்களின் சருமத்திற்கும் ஈரப்பதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.
    இந்த சாலட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கப்
    தக்காளி - 1
    கொண்டைக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
    பேபி கார்ன் - 6 துண்டுகள்
    இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - பாதி



    செய்முறை :

    தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    பேபி கார்ன், கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி சுடு தண்ணீரில் 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாலக்கீரை, தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும்.

    மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கடைசியாக இந்துப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம். இந்த ஆசனம் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
    ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிலவகை மூச்சுப்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

    உஜ்ஜயி பிராணாயாமம்

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
    பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 2.5% சினைப்பை புற்று நோய் ஆகும். சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    சினைப்பை புற்றுநோய் அறிகுறிகள்:

    • வயிறு உப்பிசம்
    • சிறிது சாப்பிடுவதற்குள் வயிறு நிறைந்த உணர்வு
    • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
    • சிறுநீர் செல்ல அவசரம்
    • வயிற்றுவலி
    • மார்பக வலி
    • பிறப்புறுப்பில் கசிவு
    • பிறப்புறுப்பில் ரத்தம் வடிதல்
    • மிக சீக்கிரமான பருவமடைதல் ஆகியவை ஆகும்.

    மேலும் சில பொது அறிகுறிகளாக

    முதுகுவலி, மாதவிலக்கு முறையின்றி இருத்தல், அஜீரணம், மலச்சிக்கல் போன்றவையும் இருக்கக்கூடும்.

    சிறு அறிகுறிகள் தெரியும் பொழுதே மருத்துவரை கலந்து ஆலோசிப்பது மிகவும் நல்லது. எளிதில் மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக, பரிசோதனைகள் முலம் பாதிப்பினை கண்டறிய முடியும். அதே போன்று இதற்கான சிகிச்சையினையும் ஆரம்ப காலத்திலேயே எடுத்துக்கொண்டால் சிறந்த முன்னேற்றத்தினை பெற முடியும்.



    ரத்த நாள நெளிவு:

    ரத்த நாள வீக்கம் ரத்த நாள குழாய் பலவீனப்படும் பொழுது ஏற்படுகின்றது. இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

    பொதுவில் இது அதிகம் காணப்படும் இடங்கள்:


    • மூளை
    • அயோட்டா
    • கால்கள்
    • மண்ணீரல்
    ஆகியவை ஆகும்.

    இந்த வீக்கம் திடீரென வெடித்து உள்ளே ரத்தப்போக்கினை உண்டாக்கலாம். ரத்த குழாய் பாதிப்பு, சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை இந்த ரத்த குழாய் வீக்கத்தினை ஏற்படுத்தலாம்.

    • அதிக கொழுப்பு சத்துள்ள உணவு
    • பரம்பரை
    • புகை பிடித்தல்
    • அதிக எடை

    60 வயதுக்கு மேல் இவையும் ரத்த நாள நெளிவு பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    • திடீரென தாங்க முடியாத தலைவலி
    • கண் இமை மூடுதல்
    • இரண்டாக பார்வை தெரிதல்
    • ஒரு பக்க பலவீனம் (அ) மரத்து போதல்
    • திடீரென வாந்தி போன்றவை ஏற்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்.
    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாளை (செப்டம்பர் 29-ந்தேதி) உலக இதய தினம்.

    மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது.

    இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி நடைபெறுகிறது. நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. மரபுப் பண்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள், ரத்த மிகை கொழுப்பு போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

    மாரடைப்பு வராமல் தடுக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

    உலக இதய நாளையொட்டி இந்த ஆண்டும் வழக்கம் போல் ‘லட்சியக்கருவை’ உலக இதய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், புகையிலைப் பழக்கத்தை அறவே விட வேண்டும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள உரக்க வலியுறுத்துகிறது.

    உலகில் உள்ள எல்லா மனிதர்களும் வாரத்தில் 150 நிமிடங்கள் நடுநிலையான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. உலகில் உள்ள 25 சதவீத மக்கள் இந்த இலக்கை எட்டவில்லை.

    இந்திய மனிதர்களில் 34 சதவீதமும் குறிப்பாக இந்தியப் பெண்களில் 40 சதவீதமும் அடிப்படை உடற்பயிற்சி கூட செய்வதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

    இந்திய மக்கள் உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்தாதவரை இதய நோய்கள் அதிகமாகும் போக்கை தடுத்து நிறுத்த முடியாது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் இளம் வயதிலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்து பணிபுரியும் நிலை அதிகமாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மட்டுமல்ல, அலுவலகங்களில் கம்ப் யூட்டர்களில் பணிபுரியும் அலுவலர்கள் கார், பஸ், லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள் அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணிபுரிகிறார்கள்.

    எனவே இவர்கள் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக மருத்துவ உலகம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. இதனால் தொடர்ந்து உட்காருவதை தவிர்த்து 60, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடங்கள் நடப்பது நலம்.

    உணவுப் பழக்கத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 2015-20-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் சுகாதார இலாகா வகுத்துள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வரை கொலஸ்ட்ரால் பொருட்களை உண்ணலாம் என்று வரையறை வைத்திருந்தனர்.

    கொலஸ்ட்ரால் உணவைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மாவுச்சத்து (கார்போ ஹைடிரேட்) பொருட்களை அதிகம் சாப்பிட்டு அது தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருவது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதனால் அந்த வரையறை நீக்கப்பட்டது. இதனால் மாவுச்சத்து என்பது ஒரு புதிய கொழுப்பு என்ற நிலைப்பாடு நிலவுகிறது. இதனால் சரிவிகித உணவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இதன்படி காய்கறி, பழங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, மீன் வகைகள் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ராலுக்கு அளிக்கப்பட்ட வரையறை நீக்கப்பட்டது, இதய நோய் வராதவர்களுக்கான சிபாரிசு. ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ராலை நன்றாகக் குறைக்க வேண்டும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இதய தினத்தை முன்னிட்டு மேற்கூறப்பட்ட மூன்று உறுதிமொழிகளை மேற்கொண்டு அதன்படி செயல்பட்டால் வரும் ஆண்டுகளில் இதய நோய் வராமல் தடுக்க முடியும். உறுதிமொழி ஏற்போம்! இதயம் காப்போம்!

    டாக்டர் ரிபாய் சவுக்கத் அலி,

    இதய நோய் சிகிச்சை நிபுணர்

    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பட்டை - மிகச் சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    அரைக்க....

    தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
    முந்திரிபருப்பு 10



    செய்முறை :


    மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

    அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

    அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    வறுத்த மீன் குருமா ரெடி.

    இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள். வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

    * வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்
    சமீப காலமாக எங்கும் சொல்லப்படும் வார்த்தை கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்பதுதான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    அதிக அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சமீப காலமாக எங்கும் சொல்லப்படும் வார்த்தை கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்பதுதான். இன்னும் சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே தவிர்த்து விடுகின்றனர். புரதம், கொழுப்பு இவைகள் போல் கார்போஹைட்ரேட் சத்தும் உடலுக்குத் தேவைதான்.

    முழு தானிய உணவுகளாக எடுத்துக் கொள்வதை மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. மைதா போன்ற உணவுகள், அதிகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவு நார்சத்து இல்லாத உணவு இவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் விகிதாச்சார உணவு காய்கறிகள், பழம் என கலந்து உண்ணுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வகையில் பயன் அளிக்கும் சில கார்போஹைட்ரேட் உணவு வகைகளைப் பார்ப்போம்.

    சர்க்கரை வள்ளி கிழங்கு: ஒரு நிதான அளவுள்ள சர்க்கரை வள்ளி கிழங்கினை தோலோடு வேக வைக்கும்போது அதில் கார்போஹைட்ரேட் சுமாராக 24 கிராம் இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.

    பீட்ரூட்: ஒரு கப் பீட்ரூட்டில் 13 கி கார்போஹைட்ரேட் உள்ளது. பீட்ரூட்டில் பொட்டாசியம், கால்ஷியம், போலேட், வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் நிறைந்த நன்மைகளை உடலுக்கு அளிக்க வல்லது.



    சோளம்: சோளம் வருடம் முழுவதும் கிடைக்கும் உணவு. பலருக்கும் பிடித்த உணவு 100 கி சோளத்தில் 25 கி கார்போஹைட்ரேட், 3.36 கி புரதம் உள்ளது. வைட்டமின் சி சத்து நிறைந்தது. ரத்தக் கொதிப்பு உடையவர்களுக்கு சிறந்தது.

    • பிரவுன் அரிசி, வெள்ளை அரிசியினை விட மிகவும் சிறந்தது.
    • ஓட்ஸ் இருதய பாதுகாப்பிற்கு சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது.
    • வாழைப்பழம் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்தது.
    • ஆப்பிள், நோய் பாதிப்பு உடையோருக்கும், நோய் தவிர்ப்பிற்கும் சிறந்த சத்துணவு.
    • உலர் பழங்கள் அளவோடு அன்றாடம் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியினை நன்கு அளிக்கின்றது.
    • பொதுவில் பழங்கள் அனைத்துமே நன்மை பயப்பவைதான். அவரவர் உடல் பாதிப்பிற்கேற்ப மருத்துவ அறிவுரைப்படி குறிப்பிட்ட பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    பாலிஷ் செய்த அரிசி, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் ஜூஸ், வெள்ளை ரொட்டி ஆகியவைகளையே தவிர்க்க வேண்டும். மற்றபடி தொடர்ந்து கார்போஹைட்ரேட் இல்லாத உணவு என்பது தேவையற்றது. இது முதலில் ஒருவருக்கு மன சோர்வினை ஏற்படுத்துவதோடு சில உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
    ×