என் மலர்
பெண்கள் உலகம்
- இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதித்துவிடுவது நல்லது.
- பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது.
அத்தகைய விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ, கருத்துவேறுபாடோ இன்றி சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்துவிடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்.

திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல திருமணத்தை நடத்தும் போதும் நிதி விஷயம் பற்றி இருவரும் விவாதிப்பது நல்லது. ஏனெனில் விமரிசையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி செலவு செய்தால், பின்பு திருமணத்திற்கு பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இருவரும்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
அதனால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வது? இருவரும் திருமணத்திற்கு முன்பு அன்றாடம் செய்யும் செலவுகள் என்னென்ன? ஏற்கனவே கடன் இருந்தால் அதனை எப்படி திருப்பி செலுத்துவது உள்ளிட்ட குடும்ப வரவு செலவு திட்டங்களை கையாள்வது பற்றி விவாதிப்பது நல்லது.
சேமிப்பை பற்றி விவாதிக்கும்போது ஓய்வு கால சேமிப்பு பற்றிய திட்டமிடலும் இடம் பெறுவது இறுதி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உதவிடும்.

குழந்தை
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதித்துவிடுவது நல்லது. ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்பலாம். அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவது அவசியமானது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை எட்டிய பிறகும் காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தை வளர்ப்புக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள், குழந்தைக்கான கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு விவாதிப்பது சிறப்பானது.
வேலை-வாழ்க்கை சமநிலை
திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டறிந்து வேலை நேரம், வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம், துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.
வேலை, குடும்பத்தை நிர்வகிப்பதற்கு இது உதவும். மேலும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்வருவது துணை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். திருமண பந்தத்தை வலுவடையச் செய்யும்.

குடும்ப அமைப்பு
திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ, மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில்தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
திருமணத்திற்கு பிறகு மணமகன் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதற்கு விரும்பலாம். மணப்பெண்ணோ தனியே சுதந்திரமாக வாழ விரும்பலாம். அதனால் இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்பே விவாதித்துவிடுவது நல்லது.
தனிக்குடித்தனத்தை விரும்பினால் அதுபற்றி மணமகன் முன்கூட்டியே பெற்றோரிடம் விளக்கி கூறிவிடுவது நல்லது. அது திருமணத்திற்கு பிறகு தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படுவதை தடுக்க உதவிடும்.
குடும்பத்தின் பங்கு
இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுவார்கள் என்றாலும் தேவையில்லாமல் தலையீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

கூடுமானவரை அவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதுபற்றி இருவரும் விவாதித்து தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும். முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கருத்து கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அதுபற்றி விவாதித்துவிடுவது நல்லது. அதில் இருந்து மீண்டு வரும் வழிமுறைகள், நோய்களை முற்றிலும் குணமாக்கும் தன்மை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
சச்சரவுகள்
வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்துவிடுவது சாலச்சிறந்தது. அதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தத்தம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கை
இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது. அது திருமண பந்தத்தை வலுவுடன் வைத்திருக்க துணைபுரியும்.

நட்பு
குடும்பம், உறவுகளை பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விளக்கி விட வேண்டும். திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு வட்டத்தை தொடரலாமா? எந்த அளவுக்கு தொடர்பில் வைத்திருப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
இலக்கு
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். லட்சியங்கள், கனவுகள் இருக்கும். அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும், அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் இருவருக்குமிடையேயான திருமண பந்தத்தை இன்னும் வலுமையாக்கும்.
- உடலில் இருக்கும் தீவிர நோய்கள் மெதுவாக உடலை விட்டு நீங்கும்.
- உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும்.
உலகின் பல நாடுகளிலும் இப்போது இயற்கைக்கு திரும்புவோம் என்ற கொள்கை பிரபலமாகி வருகிறது. அதாவது இயற்கை உணவு, நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது, மண் குளியல், சூரிய குளியல் என்று பல்வேறு இயற்கை வளங்களை சார்ந்த வாழ்வியல் முறைகளை பின்பற்றி வாழ்வது.

இயற்கையில் நீரை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறைக்கு லூயி கூனி என்ற ஜெர்மானிய இயற்கை மருத்துவர்கள் அடித்தளமிட்டனர். இவர்களை போல், மண்ணை வைத்து பல நோய்களை குணமாக்க முடியும் என்று மண் சிகிச்சை முறையை அமெரிக்காவில் ஜஸ்ட் என்பவர் அறிமுகம் செய்தார்.
இந்த மண் சிகிச்சை முறையில், உலர்ந்த வண்டல் மண்ணை நன்றாக சுத்தம் செய்து கொள்கிறார்கள். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மண்ணை சுத்தமான தண்ணீரில் குழம்பாக கரைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் குறைந்தது ½ சென்டிமீட்டர் கனம் இருக்கும்படி பூசிக் கொள்கிறார்கள்.
இப்படி மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொண்டு இளம் வெயிலில் ½ மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை இருந்து விட்டு பின்னர் உடல் முழுவதும் அந்த மண் நீங்கும் வகையில் நன்றாக குளித்து மண்ணைக் கழுவி விடுவார்கள். இப்படிச் செய்வது உடம்புக்கு இதமாக இருக்கும். இதன் மூலம் உடலில் இருக்கும் தீவிர நோய்கள் மெதுவாக உடலை விட்டு நீங்கும்.

இவ்வாறு மண் குளியல் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும். நோயின் தன்மையை அனுசரித்து உணவிலும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் மண் குளியல் சிறந்த பயன் தருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மண் குளியல் சிகிச்சை தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
- இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை பயன்படுத்துங்கள்.
- சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.

அதேவேளையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் சில வகை லிப்ஸ்டிக்குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் உள்பட தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் 24 மணி நேரத்துக்குள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதில் காணப்படும் குரோமியம் உடலில் கலந்து பாதிப்பை எற்படுத்தக்கூடும்.

பாதிப்புகள்:
* லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் ஈயம் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* லிப்ஸ்டிக்கில் காணப்படும் பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
* பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் உள்ளிட்டவையும் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக் கூடியவை.
* பாரபின் (மெழுகு) என்னும் ரசாயனமும் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது. அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவும் தன்மை கொண்டது. சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
* லிப்ஸ்டிக்கில் உடலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சில நச்சுப்பொருட்களும் உள்ளன. அவற்றை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தெரியாமல் பலரும் லிப்ஸ்டிக்கை அதிகம் பூசுகிறார்கள். அடர்த்தியாக பூசினால்தான் பளிச்சென்று தெரியும் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது.
* லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

* லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக அமையும்.
* லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருக்கிறது. இது சரும செல்களை சிதைக்கக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
* பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே கவனமாக கையாள வேண்டும்.
* லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவையும் நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உண்டாக்கக்கூடும்.
* அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்புக்கும் வித்திடலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அழகு கலை நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பானது.

மனதில் கொள்ள வேண்டியவை:
* அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் நச்சு ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
* நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.
* கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.
- 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான்
- புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் தஇருக்கலாம் எ
இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.

நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள் , தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்றும் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று UCL இன் ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகிறார்.
புகைப்பிடிப்பவர்கள், வரும் புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால் 50 நாட்கள் வாழ்க்கையை இழப்பதைத் தவிர்க்கலாம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்த வலியுறுத்தி உள்ளது.

நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது.

- எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.
- ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல.
பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
* பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் எந்த வயதிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவருக்கு இந்த சமநிலையின்மை காரணமாக, மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை என பலவிதமான அறிகுறிகள் ஏற்படும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* ஹார்மோன் சமநிலையின்மை என்பது அவரவர் உடலுக்கு ஏற்றவாறு நிகழும். இதில், பொதுவான சில அறிகுறிகளை மட்டுமே கண்டறிந்து, தீர்வு காண இயலாது. எந்த சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண்பதே சரியான வழிமுறை.
* திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.
* ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் தைராய்டு. இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு. ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்கு பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்.
* ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல. ஆனால், தைராய்டு போன்ற நோய், ஒருவரின் குடும்பத்தினருக்கு இருந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய். இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

* ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நீரிழிவு நோயும் தாக்கலாம். நமது உடலில் தேவையான அளவில் இன்சுலின் சுரக்காதபோதுதான் இந்த நோய் ஏற்படுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, இந்த இன்சுலின் சுரப்பி சுரக்காமல் போகலாம். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
* பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
- வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
வாடகை தாய் முறையில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாடகைத்தாய் முறையானது தற்போது சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி வாடகைத்தாய் முறைகளுக்கு பலவிதமான சட்ட திட்டங்களும், வழிமுறைகளும், வரையறைகளும் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு வரை இந்த வாடகைத்தாய் என்பது ஒரு வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையாகவே இருந்தது.
2022-ம் ஆண்டு அமல்படுத்தபட்ட சட்டத்தின் படி வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்று பார்த்தால், தங்கள் குழந்தை வளருவதற்காக, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
இதன் மூலம் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள், பணம் மற்றும் பொருளுக்காக மட்டும் வாடகைத்தாயாக இருந்தனர்.
அவர்களை வாடகைத்தாயாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. வாடகைத்தாய் முறைக்கு உட்படுத்தப்படக்கூடிய பெண்கள் பலர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
எனவே அதுபோன்ற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாடகைத்தாய் முறையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

வாடகைத்தாய் முறை பற்றிய தவறான கருத்துகள்:
வாடகை தாய் முறை சட்டத்தின்படி தற்போதைய வாடகைத்தாய் முறையை எப்படி செய்யலாம் என்பதை குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்கள் உள்ளிட்ட அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் டாக்டர்களிடம் வரும் நோயாளிகள் பலர் வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறு எளிதாக வந்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்று நினைக்கிறார்கள். இது தவறானதாகும்.
வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான். ஏனென்றால் இதற்கு இன்னொரு சிகிச்சை முறை கருப்பை மாற்று சிகிச்சையாகும்.
இந்த கருப்பை மாற்று சிகிச்சையை கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் சுவீடனில் டாக்டர் மட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் என்பவர் முதல் முறையாக செய்து குழந்தை பேறு பெறப்பட்டது.
இந்த கருப்பை மாற்று சிகிச்சை இன்றும் உலகத்தில் பல நாடுகளில் செய்தாலும் கூட இதில் கருப்பை தானம் செய்பவர், தானம் பெறுபவர் மற்றும் குழந்தை பேறு பெறுதல் ஆகியவற்றில் ஆபத்தும் உள்ளது.
மேலும் இதனுடைய வெற்றி விகிதம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கான செலவுகளும், பாதிப்பு காரணிகளும் அதிகமாக இருப்பதால் இந்த முறை இன்றும் ஒரு தோல்வி அடைந்த முறையாகத்தான் கருதப்படுகிறது.
மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளான இதயம், கல்லீரல், சிறுநீரகம் மாற்று சிகிச்சை போல கருப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது.
ஏனென்றால் கருப்பையில் ஒரு குழந்தை வளர வேண்டும், அந்த குழந்தை வளரும் போது, மாற்றப்பட்ட கருப்பையானது குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த கருப்பை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த சிகிச்சையானது மிகவும் குறைவான அளவிலான வெற்றியையே தரக்கூடியது.
ஆனால் வாடகைத்தாய் முறை என்பது குழந்தையின்மை சிகிச்சையில் மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது. குழந்தைக்கு கண்டிப்பாக பாதுகாப்பானது.
அதே நேரத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெற்றுக் கொடுக்க உட்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்ததே இந்த சட்டம் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
- வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
- குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும்.

இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும்.
ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாடகைத்தாய் என்பதாகும்.
இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன்.
வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.
எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.
அந்த தம்பதியின் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.

இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
- நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான்.
- நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.
இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான்.
உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுபோன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

அதேசமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.
அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.

இதயத்திற்கு நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
தசைகளுக்கு நல்லது. வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.
- உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.
உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது.

இயற்கையான முறை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று இயற்கையாக உள்ள உணவுகளை உண்ணுவது.
நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோய் எதிர்ப்பு வலுவாக இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும்.
இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம்.

பூண்டு:
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவும். எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

இஞ்சி:
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்:
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடல்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.
பார்லி-ஓட்ஸ்:
பார்லியும் ஓட்சும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-குளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்த கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும். வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்கள்:
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
முட்டை:
நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

காபி-டீ
இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது. டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்க வல்லவை.

தேங்காய்:
தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது. புளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச்செய்கிறது. புளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள குளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சை:
எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது.

பச்சைக் காய்கறிகள்-கீரைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்.
- நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
- திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம்.
நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுச்சூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது.
நமது நாட்டில் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இந்த மாசு அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காண சில உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.

* பூண்டில் நிறைய நச்சுக்களை போக்கும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அல்லிசின் (allicin) நச்சுக்களை அழிக்கவும், எதிர்த்து போராடவும் உதவுகிறது. பூண்டு ஆஸ்துமா பிரச்சனை குறையவும், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் வலுவளிக்கிறது.
* இஞ்சியிலும் நச்சுக்கொல்லி மூலப்பொருட்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவாசக் குழாயில் தேங்கும் நச்சுக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது.
* பூண்டு, இஞ்சியை போலவே மஞ்சளிலும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் மூலப்பொருட்களும், நச்சுக்களை அழிக்கும் தன்மையும் நிறைய இருக்கிறது.
* ஆப்பிளில் நிறைய வகை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயனளிக்கிறது.
* பிளாக் பெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி உணவுகளில் ஆண்டி-ஆக்ஸிசிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சார்ந்த தொற்று அல்லது நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
* திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஒருவேளை உங்கள் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகும் காரணிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வர, சுத்தம் செய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.

* மாதுளையில் நிறைய நல்ல மூலப்பொருட்கள் இருக்கின்றன. இது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளின் வளர்ச்சியை தடுக்கும் குணமுள்ளது.
* இந்த உணவுகளில் அதிகளவில் மெக்னீசியம் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் நபர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரிக்க செய்து, செயல்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
* பிஸ்தாவை அப்படியே சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் கூட பிஸ்தா பயனளிக்கிறது.
* வரமிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தொண்டை புண், இருமல் சரியாகவும், சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் உதவுகிறது. மேலும் மூச்சுக்குழாய் நெரிசலுக்கும் கூட இது நல்ல தீர்வளிக்கிறது.
* வைட்டமின் பி6, சி, ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் வெங்காயம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். இது நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புடைய உணவாகும்.
* சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெறும் நீரை பருகுவது நல்லது. இது, நுரையீரல் மட்டுமின்றி, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கும் திறன் கொண்டது ஆகும்'
- சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும்.

தேங்காய் எண்ணெய்
குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.

அடிக்கடி ஈரப்பதமாக்குவது
குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதன்படி, ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது கிளிசரின் போன்ற உட்பொருட்களைக் கொண்ட மறைவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துவது
வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். மேலும், இது சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, படுக்கையறை அல்லது வசிக்கும் இடத்தில் ஈரப்பதமூட்டியை இணைப்பது, உட்புற வெப்பத்தை பயன்படுத்தினாலும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

ஓட்ஸ் குளியல்
ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும், ஓட்மீல் குளியல் சருமத்தில் அரிப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பத இழப்பைத் தடுக்க ஒரு பாதுகாப்பு தடையை வழங்குகிறது.
ஆய்வு ஒன்றில், ஓட்மீல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது லேசான, மிதமான அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வில், கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது வீக்கமடைந்த அரிக்கும் தோலழற்சியை அமைதிப்படுத்துகிறது. இது அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.

நீரேற்றமாக இருப்பது
குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். மேலும், இது சருமத்தின் ஒட்டுமொத்த நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வறட்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.






