என் மலர்
பெண்கள் உலகம்
- ஞாயிறு மதியம், செவ்வாய் காலை என திட்டமிட்டு வேலையை முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.
- செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகிவிடுகிறது. சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் மண்டே மார்னிங் புளூ (Monday Morning Blue) என்கிறார்கள். இதனை வெல்வது எப்படி?
1. சீக்கிரமாக உறங்குங்கள்
ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால், நல்ல உறக்கம் கிடைக்கும். உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. அதிக வேலைப் பளுவைத் தவிர்த்திடுங்கள்
திங்கள் கிழமைகள் மனச்சோர்வை அளிப்பவையாக இருந்தால், எல்லா வேலையையும் அன்றே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஞாயிறு மதியம், செவ்வாய் காலை என திட்டமிட்டு வேலையை முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.

3. உடற்பயிற்சி அவசியம்!
ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகள், யோகா போன்றவை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
4. பொழுதுபோக்கு தேவை
உங்களுக்கு என ஏதேனும் ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை வைத்திருங்கள். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும்.
5. பணியை நேசியுங்கள்
உங்கள் வேலையை நேசியுங்கள். உங்கள் பணியின் இயல்பை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தேர்வுதான். அது நமக்கு இன்னொருவர் தருவதல்ல. மனதைக் கரைத்து பணியாற்றும்போது உங்களுக்கு சுமை தெரியாது. செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
- ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.
- முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால், தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.
* புஜங்காசனம்
இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகளும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.
முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.

* தனுராசனம்
தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புகளும், தொடையில் உள்ள கொழுப்புகளும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சினை அகலும். இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

* நாகாசனம்
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புகளைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் குப்புற படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், இடுப்பு பகுதிகளையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
* பவனமுக்தாசனம்
இந்த யோகாசனத்தினால் குடலுக்கு மசாஜ் செய்தது போன்று இருப்பதோடு, வயிற்று அமிலத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், முதுகு வலியைக் குறைக்கவும், அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து அழகாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
பவனமுக்தாசனம் செய்வதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.
- பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் கருப்பை ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். மாதவிடாய் தொடக்கம் முதல் முடிவு வரை பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உள்ளன.
தவறான பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை கருப்பை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இதனால் கருப்பையில் நீர்க்கட்டி, தொற்று ஏற்படலாம். இந்த விஷயங்களால் PCOD மற்றும் PCOS பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.

உணவில் கவனம்
உங்கள் தினசரி உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் முடிந்தவரை பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள், கொழுப்பு நிறைந்த மீன்களைச் சேர்க்கவும். இதனால், உடலில் உள்ள ஹார்மோன்கள் சீராக இருப்பதோடு, வீக்கமும் குறையும். உங்கள் உணவில் குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

தினசரி உடற்பயிற்சி
கருப்பை ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வதும் நன்மை பயக்கும். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி எடையைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். இதன் மூலம், கருப்பையின் செயல்பாடு சரியாகச் செயல்படும்.

ஆரோக்கியமான எடை
உணவுடன், ஆரோக்கியமான எடையை பராமரிப்பதும் முக்கியம். அதிக எடை இருப்பதால்உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். இதன் காரணமாக கருப்பையில் அழுத்தம் ஏற்பட்டு PCOD மற்றும் PCOS போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.
மன அழுத்தம்
கருப்பை ஆரோக்கியமாக இருக்க, ஒரு பெண் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் முக்கியம். நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்கள் சமநிலையற்றதாகிவிடும். இதன் காரணமாக அண்டவிடுப்பில் பிரச்சனை ஏற்படலாம். இதற்காக நீங்கள் யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யலாம்.
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.

உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.
- வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும்.
- மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
'வாக்கிங் நிமோனியா' என்பது தற்போது பரவலாக மனிதர்களை பாதிக்கிறது. வழக்கமாக நுரையீரலை பாதிக்கும் நிமோனியா தொற்றின் தீவிர அறிகுறிகள் இல்லாத இலகுவான வடிவமே இந்த 'வாக்கிங் நிமோனியா' ஆகும். இது நுரையீரல் தொற்று ஆகும்.
இது பொதுவாக 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களை தாக்குகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக மிதமான அளவில்தான் இருக்கும். எக்ஸ்ரே ஆய்வில் நுரையீரலில் திட்டுக்கள் போன்று காண்பிக்கும்.

இது மைக்கோப்ளாஸ்மா நிமோனியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
பொதுவாக, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு, புகைப்பழக்கம் உள்ளவர்களை இது அதிக அளவில் பாதிக்கிறது. நிமோனியா 10 நாட்கள் வரை தொற்று நோயாக இருக்கலாம்.

இந்த பாக்டீரியா உடலில் நுழைந்து மைக்கோபிளாஸ்மாவை வெளிப்படுத்திய 15-25 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும். வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஒருவருக்கு இருந்தால் ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது நெஞ்சு வலி, இருமல், காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள், தொண்டை வலி, தலைவலி, சோர்வு, சிலருக்கு காது தொற்று, ரத்த சோகை அல்லது தோல் வெடிப்பு போன்றவையும் இருக்கலாம்.

குழந்தைகளை வாக்கிங் நிமோனியா பாதித்தால் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், உலர் இருமல் காணப்படும். இதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
- கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை செலவிடுகின்றனர்.
- இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன.
இந்தியர்கள் தங்கள் பட்ஜெட்டில் கணிசமான பகுதியை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடுகிறார்கள் என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது.
மத்திய அரசு வெளியிட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின்படி, கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை இதுபோன்ற பொருட்களை வாங்க செலவிடுகின்றனர்.
இதுவே நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 11.09% தொகையை இதற்கு செலவிடுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளாக இந்த செலவினம் 10 சதவீதத்துக்கு கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பை கடந்துள்ளது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

2.61 லட்சம் வீடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, உணவு நுகர்வு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நகர்ப்புறங்களில், உணவு செலவினங்களில் 39% க்கும் அதிகமானவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வாங்குவதில் செலவிடப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற அதிக சத்தானவற்றை தவிர்த்து மக்கள் ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி அதிகம் செல்வது புலனாகிறது.

சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை விளம்பரப்படுத்தும் சந்தைப்படுத்தலின் மூலம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது.
- உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது.
* சில மணி நேரங்கள் வேலை செய்தாலே நமது உடல் களைத்து விடும். ஓய்வு தேவைப்படும். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது. தூங்கும்போதும் ஒருசில செயல்பாடுகள், மூளையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
* புதிய நினைவுகளை சேமிக்க, பழைய நினைவுகளை மூளை தானாகவே அழித்துக்கொள்ளும். இதற்காக நாம் அதிகம் நினைக்காத, நமக்கு மேற்கொண்டு தேவைப்படாத தகவல்களை மூளையே தேர்ந்தெடுக்கும்.

* மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது. உடலின் பிற பகுதிகளில் வலி ஏற்பட்டால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுதான் மூளைக்குத் தெரியும். இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், திசுக்களில் ஏற்படும் வலி மூளையில் ஏற்படும் வலி அல்ல.
* மொத்த உடல் எடையில் மூளையின் அளவு 2 சதவீதம்தான். ஆனால் உடல் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலில் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்தும். உடல் பாகங்களில் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்துவது இதுதான். இதன் செல்கள் சிறப்பாகச் செயல்பட மூளை மிகவும் முக்கியமானது. அதேபோல் இதன் எடையில் சராசரியாக 75 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* நாம் விழித்திருக்கும்போது மூளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குறைந்த வாட் விளக்கு எரிய வைக்க முடியும்.
* நமது உடல் உறுப்புகளை வலுவாக்க பயிற்சிகள் செய்வதுபோல் மூளையை வலுவாக்கவும் சில பயிற்சிகள் உண்டு. இதற்காக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. பிடித்த பாட்டுக்கு நடனமாடுதல், நன்றாக உறங்குதல், சரிவிகித உணவு உண்ணுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவையே மூளைக்கான பயிற்சிகளாகும். இது மூளையைப் புத்துணர்வாக்கும்.
* 90 நிமிடங்களுக்கு உடல் வியர்த்தால் மூளை தற்காலிகமாகச் சுருங்கி விடும். காய்ச்சல் வந்தால் நமது உடல் அதிகமாக வியர்க்கும். அப்போது இது தற்காலிகமாக சுருங்குவதால்தான் தலைவலி ஏற்படுகிறது.
* ஒரு நொடியில் மூளையில் நடக்கும் வேதிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல். அதேபோல் எல்லா மூளை செல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பத்தாயிரம் வகையான நியூரான்கள் இதில் உள்ளன.
* ஒரு நாளைக்கு நமது மூளையில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம். ஆனால் இவற்றில் 70 சதவீதம் எதிர்மறையான சிந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.
* மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.
* நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.
* 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.
* எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது.
* மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

* மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன.
* 20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.
* வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள்.
* நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம்.

* நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
* நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.
* மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது.
* மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நமக்குள் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள ஏ மற்றும் பி கட்டங்கள் வெவ்வேறு வண்ணங்கள் என்று நினைப்பீர்கள். உண்மையில் அவை இரண்டும் ஒரே வண்ணம்தான்.
* நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.
* மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும்.
* நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.
* கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.
* நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…
* நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.
- சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம்.
- இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் என்ன? இந்த வழிகளை பயன்படுத்தி சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு:
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.
மஞ்சள் தூள் மற்றும் பால்:
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் தேவையற்ற முடி வளர்ச்சி தடுக்கப்படும்.

மஞ்சள், உப்பு, எலுமிச்சை சாறு, பால்:
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பால் விட்டு கலந்து கொண்டு தேவையற்ற இடத்தில் உள்ள முடியுள்ள பகுதியில் தடவி 5 நிமிடம் ஸ்க்ரப் செய்து பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.
கஸ்தூரி மஞ்சள் தூள், பால் :
1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளுடன், சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலந்து முடிகளின் மீது பூச வேண்டும். இந்த கலவையை 10 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து விட்டு, பின்பு கழுவினால் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு, அந்த இடமும் பட்டு போல் மென்மையாக மாறும். இதை வாரத்திற்கு 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக் கரு:
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோளமாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின்னர் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்:
ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முடி வளரும் இடங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்ணீரால் நன்கு தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான முடியானது நீங்கும்.

கடலை மாவு, மஞ்சள் தூள், கடுகு எண்ணெய்:
ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதை தேவையற்ற ரோமம் உள்ள இடத்தில் 10 -15 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் , முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை:
சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை பழுப்பு நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.
எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர் சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
தயிர் , கடலை மாவு :
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.
- வலி மிகுந்த தாம்பத்தியத்திற்கு காரணம் உயவு இல்லாதது தான்.
- திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.
வலி மிகுந்த உடலுறவுக்கான மருத்துவச் சொல் டிஸ்பேரூனியா ஆகும். இது தாம்பத்தியத்தின் போது அல்லது அதற்கு பிறகு பிறப்புறுப்பில் ஏற்படும் வலியாகும். உடல் சார்ந்த மற்றும் உளவியல் பிரச்சினைகள் காரணமாக கூட ஏற்படலாம்.

உடல் சார்ந்த காரணங்கள்
* வலி மிகுந்த தாம்பத்தியத்தின் பெரும்பான்மையான காரணம் உயவு இல்லாதது தான். பொதுவாக கர்ப்பப்பை வாய் சுரப்பிகள் சளி போன்ற ஒரு திரவத்தை சுரக்கின்றது. இது தவிர தாம்பத்திய முந்தைய உடல் தூண்டலின் போது கூடுதலான திரவங்கள் சுரக்கும்.
குறிப்பாக யோனிக்கு அருகில் அமைந்துள்ள பர்தோலின் சுரப்பிகள் மற்றும் ஸ்கீன் சுரப்பிகள் தாம்பத்தியத்தின் போது கூடுதல் உயவூட்டலை உருவாக்குகின்றது. இவை பெரும்பாலும் தாம்பத்திய முன்விளையாட்டின் விளைவாகும். திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.
* தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிரச்சினை வரலாம். இதற்கு காரணம் அப்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது தான்.
* யோனி சுவர் தசைகளின் தன்னிச்சையான பிடிப்புகள் (வெஜினிஸ்மஸ்), யோனி சரியாக வளர்ச்சியடையாத நிலை (அஜெனிசிஸ்), ஹைமன் சவ்வு யோனித் திறப்பை முழுமையாக மூடி இருப்பது (இம்பர்போரேட் ஹைமென்), சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, கருப்பைச் சரிவு, இடுப்பு அழற்சி நோய், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், அடினோமயோசிஸ், மூல நோய், இடுப்பு பகுதி அறுவை சிகிச்சைக்குப் பின்னர், புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றால் தாம்பத்தியத்தின் போது வலி காணப்படும்.
* தாம்பத்திய முந்தைய தூண்டலின் போது ஆண்களுக்கு சுமார் 2 முதல் 5 மி.லி. அளவு வரை ஒரு தெளிவான திரவம் சுரக்கும். இது கவ்வர் சுரப்பிகள் மற்றும் லிட்ரே சுரப்பியில் இருந்து சுரக்கிறது. இது தாம்பத்தியத்தின் போது உயவை அதிகரிக்கிறது.

உணர்ச்சி சார்ந்த காரணங்கள்:
தாம்பத்திய செயல்பாடுகளுடன் உணர்ச்சிகள் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. எனவே அவை தாம்பத்திய வலியில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
உளவியல் சிக்கல்கள்:
மனச்சோர்வு, உடல் தோற்றத்தைப் பற்றிய கவலைகள், நெருக்கம் அல்லது உறவுச் சிக்கல்கள் பற்றிய பயம், புதிய இடம் போன்றவை மனச்சோர்வு அல்லது வலியை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்:
வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இடுப்பு பகுதி தசைகள் இறுக்கமடைகின்றன. இது தாம்பத்தியத்தின் போது வலியை ஏற்படுத்தும்.
உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்:
ஈஸ்ட்ரோஜன் குறைவு அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மிகக் குறைவான உயவினால் வலி மிகுந்த தாம்பத்தியம் ஏற்படுகிறது.
இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் (ஆளி விதைகள், அலிசி விதைகள், சோயாபீன், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கோதுமை) சாப்பிட வேண்டும்.
டிசென்சிடிசேஷன் சிகிச்சை:
வலியை குறைக்கக்கூடிய யோனி தளர்வு பயிற்சிகள் செய்ய வேண்டும். ஹெகல் பயிற்சி நல்ல பலனைத் தரும்.

உளவியல் ஆலோசனை:
வலி மிகுந்த தாம்பத்தியத்தின் காரணமாக நீங்களும் உங்கள் துணையும் நெருக்கத்தைத் தவிர்த்துள்ளீர்கள் என்றால், உங்கள் துணையுடன் தொடர்பை மேம்படுத்த மனம் விட்டு பேசி பாலியல் நெருக்கத்தை உருவாக்க வேண்டும். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, எதிர்மறை சிந்தனைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
- ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.
நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-

இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),
தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.

ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.
- மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
- கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.
சமீப காலங்களில் நிறைய குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர் என்பது சரிதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஆரோக்கியமற்ற உணவுத்தேர்வு, குறைவான உடலுழைப்பு, குடும்ப உணவுப் பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக உடல் எடையுடன் குண்டாக வளர முக்கிய காரணங்கள் ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் வருமாறு:-

ஒரு குழந்தைக்கு வயதுக்கேற்ற, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறதென்றால் அதிகமாக இருக்கின்ற ஒவ்வொரு கிராம் எடையும் கூட பின்னாளில் அந்த குழந்தையை ஆரோக்கியமற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்த அளவு முதலியவைகளை உண்டுபண்ணும்.
உங்கள் குழந்தை உடல் பருமன் உள்ள பரம்பரையை சேர்ந்திருந்தால் அந்த குழந்தையும் குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்க வாய்ப்பு அதிகம்.
தன்னால், பெற்றோர்களால், குடும்பத்தால், சுற்றுப்புறத்தால் அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தமாக மாறி, அதுகூட உடல் பருமனை ஏற்படுத்தச் செய்யும். சில மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
வாரக்கணக்கில் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. மிக நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான இடம் கிடைக்காது. மாற்று இடத்தை தேடவும்.
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதனால் அதிக ரத்த அழுத்தம் பின்னாளில் வரலாம். அதிக எடையினால் மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி வர வாய்ப்புண்டு. மூச்சுத் திணறல் ஆஸ்துமா, குறட்டை போன்றவை வர வாய்ப்புண்டு. கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.

ஆரோக்கியமான, சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு பண்ண வேண்டும். கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் போதுமான நேரம் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ஹார்மோன்கள் தொந்தரவு ஏற்பட்டு உடல் எடை கூட வாய்ப்புண்டு. ஆண்டுக்கு ஒருமுறை உடல் பருமனான குழந்தைகளை உங்கள் குடும்ப டாக்டரிடம் காண்பியுங்கள்.
சிறுவயதில் உடல் பருமனுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குவதும், வரவிடாமல் முன்னரே தடுப்பதும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் இப்பொழுதும் எப்பொழுதும் நன்றாக இருக்க உபயோகமாக இருக்கும்.
- மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது.
- குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம்.
மார்கழி மாதம் என்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. மது பிரியர்கள் தினமும் இரவு நேரங்களில் ஒரு கையில் ரம் அல்லது விஸ்கி மற்றும் சிக்கன் வகைகளை ருசிக்கின்றனர்.
ஒரு பெக் ரம் உடலை சூடேற்றி குளிர்ச்சியை தடுக்கிறது என்பது குடிமகன்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. மதுவால் உண்மையில் உடலை வெப்பமாக்க முடியுமா? குடிப்பதற்கு காரணம் தேடி இது போன்ற கட்டுக்கதைகளை கூறப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குளிர்கால கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதில் கூறியுள்ளனர்.

மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. ஆனால் உடலில் முற்றிலும் மதுவால் சூடேற்ற முடியாது. மது குடிப்பதால் உங்கள் தோலுக்கு அருகில் உள்ள ரத்த நாளங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் அதிக ரத்தம் பாய்கிறது.
மற்றும் தோலில் சூடான உணர்வை உருவாக்குகிறது. இந்த சூடான உணர்வு என்பது உடலை வெப்பப்படுத்தியது என்பதற்கான அர்த்தம் அல்ல. முக்கிய உறுப்புகளில் இருந்து ரத்தம் திசை திருப்பப்படுவதால் உடலில் மைய வெப்பநிலை குறையலாம்.
இதனை சரிபார்க்கா விட்டால் தாழ்வான வெப்ப நிலைக்கு சென்று விடும். கடுமையான குளிர்காலங்களில் இது ஆபத்து. மது குளிர்ந்த காற்றின் வெப்பநிலையை பற்றிய உணர்வை உடலில் குறைக்கிறது.

குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மதுபானம் உங்கள் முடிவெடுக்கும் திறனை குறைப்பதாக ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறது.
மது குடித்துவிட்டு குளிர்கால ஆடைகளை அணியா விட்டால் உடல் வெப்ப நிலையில் வியத்தகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






